தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள சினிமாவில் மிக பிரபலமான நடிகர் விநாயகன். இவர் தமிழில் ‘திமிரு’ படத்தின் மூலம் பிரபலமானார்.
ஆனால் சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் இவரை இந்திய அளவில் கொண்டு சென்றது.
இந்த படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
எந்தா சாரே மனசிலாயோ… என்று இவர் பேசும் ஸ்டைல் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அக்டோபர் 24ஆம் தேதி கேரள போலீஸார் இவரை கைது செய்தனர். இவர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் கேரள காவல்துறை விநாயகனை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் அதனை விசாரிக்க போலீசார் அவரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது போலீசாரை அவமரியாதையாக விநாயகன் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் நடிகர் விநாயகன்.
Kerala police arrested Jailer Actor Vinayakan