விஜய்-சிவகார்த்திகேயன் கூட நடித்திருந்தாலும் தனுஷ் படத்தால் வாய்ப்பு பெற்ற கீர்த்தி சுரேஷ்

விஜய்-சிவகார்த்திகேயன் கூட நடித்திருந்தாலும் தனுஷ் படத்தால் வாய்ப்பு பெற்ற கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy suresh got Mahanathi chance by Thodari movie roleமுன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ‘நடிகையர் திலகம்’ என்ற படம் உருவாகியுள்ளது.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ்ம், ஜெமின் கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.

இப்படம் மே 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது கீர்த்தி சுரேஷ் பேசியதாவது…

‘நடிகையர் திலகம்’ படம் உருவாக காரணம் இயக்குனர் நாகி மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா. இப்படத்தின் கதையை கேட்டு உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லை.

சிறந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நான் எப்படி நடிப்பது? நிறைய பேருக்கு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தெரியும். என்று நினைத்தேன். இயக்குனர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்.

‘தொடரி’ படத்தை பார்த்துதான் இயக்குனர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

‘தொடரி’ படம் எனக்கு ஏதாவது நல்லது பண்ணும் என்று நான் அப்படத்தில் நடித்த போது நினைத்தேன். அந்த படத்தை நிறைய பேர் குறை சொன்னார்கள்.

ஆனால், அந்தப் படம் தான் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளது.” என்றார்.

சிவகார்த்திகேயனுடன் 2 படங்களிலும் விஜய் 2 படங்களிலும் (1 படம் உருவாகி வருகிறது) நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் தனுஷ் உடன் நடித்த படமே சாவித்ரி என்ற நடிகையாக நடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy suresh got Mahanathi chance by Thodari movie role

புலி படத்தயாரிப்பாளருடன் இணையும் நடிகர் ஜிவி பிரகாஷ்

புலி படத்தயாரிப்பாளருடன் இணையும் நடிகர் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashவெயில்’ படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வசந்த பாலன்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இப்போது ஒரு ஹீரோவாகவும் வலம் வருகிறார்

எனவே, ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைத்து வசந்த பாலன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ‘போக்கிரிராஜா’ படத்தை தயாரித்தவரும், ‘ஒன்பதுல குரு’ என்ற படத்தை இயக்கியவருமான பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

பிரபாஸ்-சத்யராஜீக்கு பிறகு மகேஷ் பாபுவுக்கு கிடைத்த கௌரவம்

பிரபாஸ்-சத்யராஜீக்கு பிறகு மகேஷ் பாபுவுக்கு கிடைத்த கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahesh babuஉலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபாஸ் மற்றும் சத்யராஜின் உருவ சிலைகள் இடம் பெற்றுள்ளன.

தற்போது மகேஷ்பாபுவின் சிலையும் இடம் பெறவுள்ளது.

விரைவில் தனது மெழுகு சிலை இடம் பெறப்போவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மகேஷ்பாபு, இதை தனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மகேஷ் பாபுவின் உடல் அமைப்பின் மாதிரிகளை அருங்காட்சியகம் குழுவினர் எடுத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்டைல் கூடவே பிறந்தது; வைரலாகும் ரஜினியின் அமெரிக்கா போட்டோஸ்

இந்த ஸ்டைல் கூடவே பிறந்தது; வைரலாகும் ரஜினியின் அமெரிக்கா போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth in USAரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகிறது.

தற்போது அவர் வழக்கமான உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 2 வாரம் அவர் தங்குகிறார்.

இதனிடையில் அவர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு ஹாயாக தனியாக சுற்றி வருகிறார்.

அங்கு அவர் ஒரு எஸ்கலேட்டரில் ஸ்டைலாக போஸ் கொடுத்தப்படி உள்ள ஒரு படம் வைரலாகி வருகிறது.

இதே போன்ற ஒரு போஸ் சிவாஜி படத்தில் ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஒரு காட்சியில் இருக்கும். எனவே அதையும் இந்த போட்டோவும் வைத்து… தலைவருக்கு ஸ்டைல் கூடவே பிறந்தது என ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.

மேலும் அங்குள்ள மெட்ரோ ரயிலில் ரஜினி பயணித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரன்ட்டாகி உள்ளது.

மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்… கமல் கண்டனம்

மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்… கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில், காவிரி வழக்கில் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, மேலும் இரண்டு வாரம் காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் தன் டுவிட்டரில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்” என பதிவிட்டிருக்கிறார்.

பாலியல் கொடுமைகளை தடுக்க சொந்த கையில் சொர்க்கம்; இருட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டர் ஐடியா

பாலியல் கொடுமைகளை தடுக்க சொந்த கையில் சொர்க்கம்; இருட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டர் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IAMK director santhosh p jeya kumar‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி இருக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் மே 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் பேசும்போது, ‘இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் படம். ஏ சான்றிதழ் பெற்று முற்றிலும் இளைஞர்களுக்காக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு, கவுதம் கார்த்திக்கிடம் சொன்னேன். ஒரு கட்டத்தில் அவரிடம் என்ன சொன்னேன் என்றே எனக்கு தெரியவில்லை.

அவருக்கும் என்ன கேட்டார் என்றே தெரியவில்லை. அப்படியே சூட்டிங் போய் படத்தை எடுத்து முடித்து விட்டோம்’ என்றார்.

இந்த மாதிரி படங்களில் கவுதம் கார்த்திக் நடித்தால் அவருடைய இமேஜ் பாதிக்காதா என்று இயக்குனரிடம் கேட்டதற்கு, கவுதம் கார்த்திக்கு இது போன்ற படங்கள் வருவதில்லை. வித்தியாசமான கதையம்சம் படங்கள்தான் அவரைத் தேடி வருகிறது’ என்றார்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற படத்தை எடுத்தால் அதை அதிகப் படுத்துவதுபோல் இருக்காதா என்று கேட்டதற்கு, இந்தப் படத்தில் சொந்த கையில் சொர்க்கம் காணுங்கள், அதாவது தன் கையே தனக்கு உதவி என்ற மெசேஜை சொல்லி இருக்கிறோம்’ என்றார்.

More Articles
Follows