தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவே பெருமைப்பட்டு கொள்ளும் வகையில் பாகுபலி படத்தை இயக்கி விருந்து படைத்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
இதன் இரண்டும் பாகங்களும் உலகளவில் மாபெரும் வசூலை ஈட்டியது.
இப்படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரையும் தன் அடுத்த படத்தில் இயக்கவுள்ளார் ராஜமவுலி.
இப்படத்திற்கு ஆர்ஆர்ஆர் என பெயரிப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதில் முக்கிய நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகையர் திலகம் படத்தின் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ராஜமவுலியும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பெருமையாக குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Keerthy Suresh may join with Rajamouli for his next project