மோகன்லால்-நிவின் பாலி நடித்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம்

மோகன்லால்-நிவின் பாலி நடித்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhan karkyநிவின் பாலி நடித்துள்ள ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு வசனம் எழுதியுள்ளார் மதன் கார்க்கி.

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் தற்போது இயக்கியிருக்கும் மலையாளப் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’.

தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்து, இல்லாதவர்களிடம் கொடுக்கும் ஒருவரைப் பற்றிய கதை இது.

இந்தப் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.

தமிழில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் தமிழ்நாட்டிலும் வெளியாக இருக்கிறது. தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

ஏற்கெனவே, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘நடிகையர் திலகம்’ ஆகிய படங்களுக்கான தமிழ் வசனங்களையும் மதன் கார்க்கி தான் எழுதினார். அதைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் வசனம் எழுதியுள்ளார்.

1800-ம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது.

“இந்தப் படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும், மையக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே, தனித்துவமாக இதைக் கையாள முடிவு செய்தோம்.

இது மிகவும் பழையதாகவோ அல்லது முற்றிலும் சமகாலத்திலோ இல்லை. தமிழ் ரசிகர்கள் மொழிமாற்றுப் படத்தைப் பார்க்கிறோம் என்று நினைக்காமல் இருக்க வைக்கும் பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது” என்கிறார் மதன் கார்க்கி.

வெட்கமில்லை என லதாரஜினியை விமர்சித்த ராமதாஸ்; ரஜினியை சீண்டுகிறாரா?

வெட்கமில்லை என லதாரஜினியை விமர்சித்த ராமதாஸ்; ரஜினியை சீண்டுகிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PMK Ramadoss criticize Latha Rajinikanth in Kochadaiiyaan Court issueகோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்தின் மீடியா ஒன் நிறுவனம், ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ. 10 கோடி கடன் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மொத்த கடன் தொகையில் ரூ. 6.20 கோடியை திருப்பிச் செலுத்தாமல் லதா ரஜினிகாந்த் காலம் தாழ்த்துவதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், ரூ. 80 லட்சம் பாக்கி மட்டுமே உள்ளதாக லதா ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடனை திரும்பச் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் 12 வாரம் அவகாசம் கொடுத்திருந்தது.

உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆர். மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பெங்களூரு நீதிமன்றத்தின் ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இவ்விவகாரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பதை நம் தளத்தில் நேற்று படித்தோம்.

இந்நிலையில் இன்று இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, வெட்கமில்லை…இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 2 முறை அவகாசம் அளித்தும் செலுத்தவில்லை. கடனை அடைப்பதாக கூறிவிட்டு இப்போது மறுப்பதை ஏற்கமுடியாது.

இதுகுறித்த வழக்கை லதா எதிர்கொண்டு ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பாபா படத்தின் ரிலீஸின் போது ரஜினிக்கும் பாமகா.வுக்கும் ஏற்பட்ட பிரச்சினை இந்த தமிழகம் அறிந்ததே.

தற்போது மீண்டும் ரஜினி விவகாரத்தில் ராமதாஸ் நுழைந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

Dr S RAMADOSS‏ @drramadoss
வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை! கோச்சடையான் படத்திற்காக லதாரஜினிகாந்த் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 2முறை அவகாசம் அளித்தும் செலுத்தவில்லை. கடனை அடைப்பதாக கூறிவிட்டு இப்போது மறுப்பதை ஏற்கமுடியாது. இதுகுறித்த வழக்கை லதா எதிர்கொண்டு ஆவேண்டும். -உச்சநீதிமன்ற நீதிபதிகள்

PMK Ramadoss criticize Latha Rajinikanth in Kochadaiiyaan Court issue

தேவா இசையில் மயில்சாமி மகன் யுவன் நடிக்கும் *வாய்க்கா தகராறு*

தேவா இசையில் மயில்சாமி மகன் யுவன் நடிக்கும் *வாய்க்கா தகராறு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Mayilsamy son Yuvan in Vaaika Thagararuராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு ” வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறார்.. இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார்.

நாயகிகளாக வர்ஷிகா நாயகா, நைனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மற்றும் பவர்ஸ்டார் சிங்கம்புலி மனோபாலா போண்டாமணி கராத்தே ராஜா சுரேகா ரேவதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுரேஷ் கே வெங்கிடி இவர் மலையாளத்தில் இயக்குனர் கே.மது, சுதிசங்கர் போன்ற இயக்குனர்களிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர் இவர் இயக்கும் முதல் படம் இது…

படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடியிடம் கேட்டோம்..

என்று தணியும் என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும் “யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை” படத்தில் நடித்த விஜய் ராஜ் இருவரையும் வைத்து நான் முதல் படத்தை இயக்குகிறேன்.

இது ஒரு செண்டிமெண்ட் கதை. இதை கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம்.

ஒரு ஆண் .சூழ்நிலை காரணமாக அவனுக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண் மகன்கள்.

சக்களத்தி சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய பெண்கள் ஒற்றுமையாக வாழ, சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டிய சகோதரர்கள் மோதிக் கொள்ள இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா இல்லையா என்பது தான் கதை.

படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை திருப்போரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

கிராமப்புற வாழ்வியலை அப்படியே பதிவு செய்துள்ளோம். கிராமிய பாடல்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி தேவா சாருக்கு. தூள் கிளப்பி இருக்கிறார்.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர்.

கலை – ஜான் கென்னடி /
ஒளிப்பதிவு – முத்துராஜ்
இசை – தேவா
பாடல்கள் – கவிமணி , p. முகவேல் சாரதா கோனேஸ்வரன் சுரேஷ் கே.வெங்கிடி
நடனம் – அசோக்ராஜா
சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, கஜினி குபேரன்
எடிட்டிங் – காளிதாஸ்
தயாரிப்பு நிர்வாகம் – ஆறுமுகம்.
கதை வசனம் தயாரிப்பு – P.முருகவேல்

இவன் நடிச்சா படம் பார்க்கலாம்ன்னு பேர் வாங்கனும்.: கிரண் ஆர்யா

இவன் நடிச்சா படம் பார்க்கலாம்ன்னு பேர் வாங்கனும்.: கிரண் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Kuppai Kathai villain Kiran Arya shares his Cinema entryதினேஷ், மனீஷா இணைந்து நடித்த ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் கிரண் ஆர்யா.

நந்தினி சீரியலில் நடித்து தமிழ் மக்கள் அனைவரது அன்பையும் பெற்றுள்ள கிரண் ஆர்யா தன் சினிமா அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.

சிறு வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை ஏன் என்றால் என் சித்தப்பா ஒரு இயக்குனர். அப்போதிலிருந்தே சினிமா மீது எனக்கு காதல்.

கல்லூரி முடித்து சொந்தமாக ஒரு தொழில் துவங்கி வேலை செய்து கொண்டிருந்தேன் அப்போது என் நண்பர் குறும்படத்தில் என்னை நடிக்க வைத்தார் அப்போதிருந்து என் சினிமா வாழ்க்கை ஆரம்பமாகி விட்டது.

பிறகு தகடு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். பிறகு பாலுமகேந்திரா ஐயா அவரது கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று வந்தேன் அப்போது பார்த்த இயக்குனர் காளி ரங்கசாமி என்னை ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லன் காதபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

படத்தில் என்னை நம்பி பெரிய கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குனர். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்று படம் வந்த பிறகு தெரிந்து கொண்டேன்.

ஒரு குப்பைக்கதை படத்திற்கு பிறகு சுந்தர்சியின் அவுனி மூவீஸ் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் நடிக்க ராஜ்கபூர் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் அந்த நன்றியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் 100 சதவீதம் லவ் பண்ணி உழைத்துக் கொடுக்கணும். நான் தமிழ் சினிமாவில் தான் நடிக்க வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுவேன் காரணம் இங்கே உள்ள ரசிகர்கள் நடிகர்களுக்கு கொடுக்கிற வரவேற்பு, ஆதரவு எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்தது.

அதனால் தமிழ் கத்துக்கொண்டு நடித்தேன். நாம நடிக்கிற கதாபாத்திரம் எப்பவும் சரியானதாக இருக்கணும் கதையின் திருப்பு முனையாக இருக்கணும்.

ஹீரோ, வில்லன், காமெடி என எதுவாக இருந்தாலும் சும்மா மிரட்டணும். ரசிகர்களிடையே அப்பா இவன் செம்ம நடிகன் டா இவன் நடிச்சா பார்க்கலாம் என்ற பெயர் மட்டும் எனக்கு போதும்.

ஒரு குப்பைக் கதை என் சினிமா வாழ்கையில் பெரிய திருப்புமுணை. அதற்காக எனக்கு வாய்பளித்த படத்தின் தயாரிப்பாளர் அஸ்லாம் மட்டும் இயக்குனர் காளிரங்கசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன். மற்றும் பெயர் சூட்டப்படாத இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

தொடர்ந்து எனக்கு ஆதரவு தருமாறு அனைத்து பத்திரிக்கை, ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

Oru Kuppai Kathai villain Kiran Arya shares his Cinema entry

கன்னடத்தில் வில்லனாக கால் பதிக்கும் விஜய்சேதுபதி

கன்னடத்தில் வில்லனாக கால் பதிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi to make his Kannada debut in Akhaadaகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தல் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இவையில்லாமல் தெலுங்கில் ‘சாய் ரா நரசிம்மரெட்டி’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இவையில்லாமல், கன்னடப்படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறாராம்.

ஷிவ்கணேஷ் இயக்கும் ‘அக்காடா’ என்ற அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சாண்டல்வுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி.

அந்த படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் நாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi to make his Kannada debut in Akhaada

ராகுல் காந்தியுடன் ரஞ்சித்-கலையரசன் சந்திப்பு; பின்னணி இதுதானா.?

ராகுல் காந்தியுடன் ரஞ்சித்-கலையரசன் சந்திப்பு; பின்னணி இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The reason behind Rahul Gandhi Director Ranjith and Kalaiyarasan meetingஇந்தியாவே விரும்பிய இளைய பிரதமர் ராஜீவ்காந்தி 30 வருடங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களின் தண்டனை காலங்கள் முடிந்தபிறகும் விடுதலை செய்யப்படாததை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், காலா இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இது தொடர்பாக சந்தித்து பேசியுள்னர்.

மேலும் அரசியல் மற்றும் திரைத்துறை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினி நடித்த காலா படத்தை தான் பார்த்ததாகவும் அப்படம் தன்னை கவர்ந்ததாகவும் ரஞ்சித்திடம் தெரிவித்தாராம் ராகுல் காந்தி.

இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தியும் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

The reason behind Rahul Gandhi Director Ranjith and Kalaiyarasan meeting

rahul gandhi ranjith meet

More Articles
Follows