தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி 14 மாதங்களில் 17வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.
எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்ட போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார் அவர்.
கோவையில் மட்டும் அதிகபட்சமா ஒன்றரை லட்சம் வாக்குகளை அவரது வேட்பாளர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது…
பணப் புயலுக்கு நடுவில் இந்த இலக்கை தொட்டதே சாதனை தான், நேர்மைக்கு நாங்கள் தான் “ஏ” டீம் – எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி –
மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் –
*தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது, வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்* –
தமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு என கமல்ஹாசன் கூறினார்.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் தான் விரைவில் அரசியல் இறங்கவுள்ளதாக ரஜினி அறிவித்திருந்தார்.
தற்போது கமல் இப்படி பேசியுள்ளதால் இது அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கலாம்.