தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஜூன் 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதற்காக, 1 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் விமான நிலைய நிர்வாகத்துக்கு, தயாரிப்பு நிறுவனமான லைகா செலுத்தியுள்ளது.
ஆனால், படப்பிடிப்பு தொடர்பான பாதுகாப்புக்கு சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் திரைப்பட குழு அனுமதி பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
அதே சமயம், மத்திய தொழிலகப் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்போடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும், விமானம் புறப்படும் பகுதியில் மட்டுமே படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், படக்குழுவினர் விமான நிலையத்தின் கழிவறை பகுதியில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர்.
இதனால் விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை எனக் கூறி படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் அனுமதியுடன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Kamal ‘s ‘Indian 2’ shooting stopped by Chennai Airport authorities suddenly