தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ & ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிலம்பரசன் & கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு‘.
3வது முறையாக சிம்பு – கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன்,
தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடித்துள்ளார். ராதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
எழுத்தாளர் ‘ஜெயமோகன்’ எழுதிய ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று அண்மையில் வெளியானது.
அதன்படி இப்படத்தின் முதல் பாடல் நாளை மே 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் ஏற்கெனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கவிஞர் தாமரை எழுதிய அந்த பாடலின் முதல் வரியை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அந்த வரிகள் இதோ…
‘காலத்துக்கும் நீ வேணும்…’ என காதலர்கள் சொல்வதாக அது அமைந்துள்ளது.
Kaalathukkum Nee Venum 3rd single from VTK will be out tomorrow