மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட JK ரித்தீஷின் மனைவி

மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட JK ரித்தீஷின் மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ்.

இவர் இராமநாதபுரத்தில் 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் எம்பியாக இருந்தவர்.

பிறகு திமுக-வில் இருந்து விலகி 2014ம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார்.

46 வயதில் ஜே.கே. ரித்தீஷ் மரணமடைந்தது திரையுலகினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி 41 வயதாகிறது.

ஜோதீஸ்வரி காரைக்குடியில் நகைத் தொழில் செய்துவரும் திருச்செல்வம் என்பவரிடம் 60 லட்ச ரூபாய்க்கு தங்க, வெள்ளி, வைர நகைகளை வாங்கி இருக்கிறார்.

அதற்கு 20 லட்சத்திற்கான மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார். காசோலையில் பணம் இல்லாததால் திருப்பி வந்துள்ளது.

இதனால் திருச்செல்வம் நீதி மன்றத்தை நாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதீஸ்வரிக்கு 60 லட்ச ரூபாய் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதிப்பதாக நீதிபதி உத்தரவு விட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரிக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பட்டதால் ஜோதீஸ்வரி தரப்பில் பெயில் ஜாமின் போடப்பட்டது. அதை நீதிபதி ஒத்திவைப்பததாக அறிவிக்கப்பட்டார்.

இதனால், ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டார்.

JK Ritheesh’s wife Jotheeswari was jailed

முதன்முறையாக சிலம்பரசனுடன் டூயட் பாடப்போகும் கீர்த்தி சுரேஷ்

முதன்முறையாக சிலம்பரசனுடன் டூயட் பாடப்போகும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகராக அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் பிசியாக இருந்து வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ஒரு படம்.. அதன் பின்னர் சிலம்பரசன் வைத்து ஒரு படம்.. சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் என் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் கமல்.

இந்த நிலையில் சிலம்பரசன் நடிக்கும் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

Keerthy Suresh to romance with Silambarasan for the first time

‘பிச்சைக்காரன் 2’ மெகா ஹிட்.; விஜய் ஆண்டனி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்.!?

‘பிச்சைக்காரன் 2’ மெகா ஹிட்.; விஜய் ஆண்டனி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா ரசனை என்பது நிச்சயம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது. உதாரணமாக தமிழில் மிகப் பெரிய ஹிட்டான படம் தெலுங்கில் தோல்வியை தழுவி உள்ளது. தெலுங்கில் தோல்வியை தழுவிய படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு சில படங்கள் மட்டுமே எல்லா மொழியிலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வெற்றிப் படங்களாக அமைகின்றன.

சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் இதற்கு நல்ல உதாரணம். தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்பது நாம் தெரிந்து ஒன்றுதான்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஒரு வேளை விரைவில் தான் படம் இயக்கினால் அதில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Vijay Antony wants to direct Super Star for his next

இந்தியர்கள் கசாப்பு கடை கோழிகள்.; கடுப்பான ‘காலா’ வில்லன் நானா படேகர்

இந்தியர்கள் கசாப்பு கடை கோழிகள்.; கடுப்பான ‘காலா’ வில்லன் நானா படேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் நானா பட்டேகர். இவர் தமிழில் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ மற்றும் ‘காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனை மீது பாலியல் தொல்லை குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்…

இந்திய மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் கோழிகளைப் போன்றவர்கள். மற்ற கோழிகள் அறுக்கப்படும் பொழுது அதைப் பற்றி கவலைப்படாமல் கசாப்பு கடைக்காரன் கொடுக்கும் தீவனத்தை சந்தோசமாக தின்று கொண்டிருக்கும்.

அதன் முறை வரும்பொழுது கசாப்பு கடைக்காரன் சுடுதண்ணீரில் தூக்கி போடும் போது மட்டுமே கதறி துடிக்கும்.

முதலில் இஸ்லாமியர்கள், பின்னர் விவசாயிகள், இப்பொழுது மல்யுத்த வீராங்கனைகள். மக்கள் இதைப் பற்றி எதையுமே கவலை கொள்ளாமல் தீவனத்தை தின்று கொண்டிருக்கிறோம். நமது முறையும் வரும்…

என நானா படேகர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

சில ஆண்டுகளுக்கு முன்…

‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் விஷாலுடன் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர், ’ஹார்ன் ஓகே பிளீஸ்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மீ டூ ME TOO வில் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kaala villain Nana Patekar talks about protests

உண்மை சம்பவத்தை சொல்லும் படத்தில் ஹீரோவாகும் ‘பிக்பாஸ்’ புகழ் கதிரவன்

உண்மை சம்பவத்தை சொல்லும் படத்தில் ஹீரோவாகும் ‘பிக்பாஸ்’ புகழ் கதிரவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கூடு’ என்ற வித்தியாசமான தலைப்பில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு இந்த படத்தை ஜோயல் விஜய் என்பவர் இயக்கி வருகிறார்.

இது பற்றிய தகவல்களை நாம் ஏற்கனவே நம் filmistreet தளத்தில் பார்த்து இருக்கிறோம்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் பிக் பாஸ் பிரபலம் விஜே கதிரவன் நாயகனாக இடம் பெற்றுள்ளார்.்அவரது போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Kathiravan of ‘Bigg Boss’ fame is the hero of the film which is based on a true story

புதிய நாடாளுமன்ற செங்கோல்.: சங்கீ என கலாய்த்தவர்களுக்கு சீனு ராமசாமி பதிலடி

புதிய நாடாளுமன்ற செங்கோல்.: சங்கீ என கலாய்த்தவர்களுக்கு சீனு ராமசாமி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார் பிரதமர்.

இதில் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் மோடி நிறுவினார்.

இதனையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி கடந்த 28ஆம் தேதி, “தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர். பெரிய விசயம்” என பதிவிட்டு இருந்தார்.

இதனால் சீனு ராமசாமியை சில நெட்டிசன்கள் சங்கி எனவும் மோடி ஆதரவாளர் எனவும் கமெண்ட்களால் கலாய்த்து வந்தனர்.

எனவே மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி. அந்த பதிவில்…

நான் சங்கியுமல்ல, அங்கியுமல்ல, லுங்கியுமல்ல, டர்பன்னும் அல்ல, நீலவான் அல்ல. மேலும் தமிழ் தேசியம், திராவிடம், இன்னபிற ஜாதியம் இப்படி எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன். ‘எல்லோரையும் குளித்து வரச்சொன்னாயே நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய்’ என எழுதி வள்ளுவத்துக்கு விளக்கவுரை தந்து வான் உயர சிலை வைத்த முத்தமிழறிஞரின் தமிழ் நேசன். ”

என பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.

netizens abuse seenu ramasamy for praising modi

More Articles
Follows