தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது.
இப்படம் பற்றிய தகவல்கள் பல மாதங்களாக வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்களை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது.
சுந்தர் சி இயக்கவுள்ள இப்படத்தின் நாயகர்களாக ஜெயம்ரவி மற்றும் ஆர்யா நடிக்கின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க சாபுசிரில் கலையை கவனிக்கிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோரும் சுந்தர் சியுடன் இணைந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசூல் பூக்குட்டியும் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.