தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாபெரும் ஹிட்டான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் 2ஆம் பாகம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாக தொடங்கியது.
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் இந்த படம் தொடங்கப்பட்டது.
சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
ஆனால் சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பிற்கு வரவில்லை.. இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.
எனவே வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.
ஆனாலும் ‘கத்தி சண்ட’, ‘மெர்சல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
திரையுலகினர் பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
கடந்த ஜூன் மாதம் மீண்டும் சமசரப் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,.
“எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.
மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
எனவே விரைவில் வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்குவார் என எதிர்பார்க்கலாம்.
லைகா நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்க வடிவேலு நடிக்கவுள்ளதாகவும், அதை முன்வைத்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Imsai Arasan issue comes to an end, you can see more of Vadivelu in the coming days