அப்பாடா… ஷங்கர் வடிவேலு இடையே ‘இம்சை’கள் தீர்ந்தது..; விரைவில் வைகைப் புயல் திரையை கடக்கும்

அப்பாடா… ஷங்கர் வடிவேலு இடையே ‘இம்சை’கள் தீர்ந்தது..; விரைவில் வைகைப் புயல் திரையை கடக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் ஹிட்டான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் 2ஆம் பாகம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாக தொடங்கியது.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் இந்த படம் தொடங்கப்பட்டது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பிற்கு வரவில்லை.. இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

எனவே வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஆனாலும் ‘கத்தி சண்ட’, ‘மெர்சல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

திரையுலகினர் பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

கடந்த ஜூன் மாதம் மீண்டும் சமசரப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,.

“எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

எனவே விரைவில் வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்குவார் என எதிர்பார்க்கலாம்.

லைகா நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்க வடிவேலு நடிக்கவுள்ளதாகவும், அதை முன்வைத்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Imsai Arasan issue comes to an end, you can see more of Vadivelu in the coming days

டோவீனோ தாமஸ் & மம்தா நடித்த ‘பாரன்ஸிக்’ தமிழில் ‘கடைசி நொடிகள்’ ஆனது

டோவீனோ தாமஸ் & மம்தா நடித்த ‘பாரன்ஸிக்’ தமிழில் ‘கடைசி நொடிகள்’ ஆனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது.

அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார்.

கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவரே தான் செய்திருக்கனும் என்று அந்த பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார்.

கண்டுபிடித்து போலீஸிடம் சொன்னால் அவங்க ஏற்க மறுக்கிறார்கள்.

மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறான் என்பது கதை.

இப்படத்திற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு செல்கிறது.

திரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக “கடைசி நொடிகள்” உள்ளது.

கேரளாவில் பாரன்ஸிக் எனும் பெயரில் வெளிவந்து சக்க போடு போட்ட படம் இது.

“கடைசி நொடிகள்” எனும் பெயரில் தமிழுக்கு ரசிமீடியா மேக்கர்ஸ் உருவாக்கியுள்ளது.

விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்கும் பாரன்ஸிக் ஆபீஸராக டோவீனோ தாமஸ் நடித்திருக்கிறார்.

மேலும் மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இன்னும் பலரும் உண்டு.

ஒளிப்பதிவு –
அகில் ஜார்ஜ்

இசை –
ஜேக்ஸ் பிஜோயி

வசனம் –
ஏ.ஆர், கே. ராஜராஜா

தமிழ் உருவாக்கம் –
ரசி மீடியா மேக்கர்ஸ்

தயாரிப்பு-கோபிநாத்

இணைத்தயாரிப்பு
S.சந்திரசேகர்

கதை திரைக்கதை இயக்கம் –
அனஸ்கான் – அகில்பால்

இந்த படம் விரைவில் வெளிவருகிறது.

Forensic tamil version is ready for release

என்னங்க ஜெகன் உங்க திட்டம்.; பிரியாணி காதலர்களை சிங்கராக மாற்றிய பாடலாசிரியர்

என்னங்க ஜெகன் உங்க திட்டம்.; பிரியாணி காதலர்களை சிங்கராக மாற்றிய பாடலாசிரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூம்புகார், பந்தபாசம் படித்தால், மட்டும் போதுமா உள்ளிட்ட படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் பழம்பெரும் கவிஞர் மறைந்த மாயவநாதன்.

தற்போது மாயவநாதன் பிறந்த அதே தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தில் இருந்து அவரது பேரன் ஜெகன் கவிராஜும் தாத்தா வழியில் பாடலாசிரியராக களமிறங்கிறங்கியுள்ளார்.

சமீபத்தில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு குணா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள “என் ஜீரக பிரியாணி” என்ற பாடலை எழுதியிருக்கிறார் ஜெகன் கவிராஜ்.

இப்பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களையும் முக்கியமான பிரியாணி காதலர்களையும் கவர்ந்துள்ளது.

இந்தப் பாடல் அனுபவம் பற்றி ஜெகன் கவிராஜ் கூறியதாவது…

“என் உறவுவழித் தாத்தா மாயவநாதன் பயணித்த பாடல் வழியில் பயணிக்க வேண்டும் என்பது என் ஆசை.

ஏன் என்றால் நான் பிறந்த நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்றாலும் அவரைப் பற்றி தினமும் யாராவது பெருமையாகப் பேசியபடியே இருப்பார்கள். பாடல் வரிகளின் வழியே இப்படியான இறவாப் புகழை எய்த முடியும் என்ற வேட்கை தான் பாட்டெழுதும் ஊக்கத்தைத் தந்தது.

சென்னைக்கு வந்தேன். திரையுலக நண்பர்களுடன் பழகினேன். பத்திரிகையாளராகவும் பணி புரிந்து வருகிறேன்.

2017ல் நாகேஷ் திரையரங்கம் படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன். ஆனாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் எளிதாக கிடைக்கவில்லை.

நீண்ட காலமாக எனது எழுத்துக்களை பாராட்டி வரும் இயக்குநர் பிரபு ஜெயராம் என்னை நம்பி இந்தப்பாடலை கொடுத்தார்.

இந்தப்படத்திற்கு முதலில் நீங்கள் வரிகளை எழுதுங்கள். பின் இசை அமைத்துக் கொள்ளலாம் என்றார்.

அந்தச் சுதந்திரம் என்னை உற்சாகமாக எழுத வைத்தது. அதற்கு இசை அமைப்பாளர் குணா தந்த ஆதரவும் முக்கியமானது.

இப்போது பாடலையும் பாடல் வரிகளையும் நிறைய பேர் பாராட்டுவது பெரும் உற்சாகத்தையும் அளிக்கிறது’ என்றார்.

முதலில் பத்திரிகையாளர்.. இப்போ பாடலாசிரியர்.. என்னங்க ஜெகன் சார் அடுத்து உங்க திட்டம்..? என்னவோ..

JeeragaBiriyani the 1st single from #YennangaSirUngaSattam penned by Jegan KaviRaj

பாலா பாணியில் கௌதம்.. பரிதாப நிலையில் சிம்பு..; ஏங்க வைக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ செகண்ட் லுக்

பாலா பாணியில் கௌதம்.. பரிதாப நிலையில் சிம்பு..; ஏங்க வைக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ செகண்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புக்கு ஜோடியாக காயட் லோஹர் என்பவர் நடிக்கவுள்ளார்.

இது வரை ஏற்றிடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் எடுக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில் சிம்பு அழுக்கு கைலி மற்றும் பனியனுடன் அமர்ந்திருக்கிறார். அவர் கடுமையான வேலை செய்து விட்டு களைப்பில் இருப்பது போல உள்ளது.

படுக்க கூட இடம் இல்லாத ஓர் எளிய அறையில் பலர் நெருங்கி உட்கார்ந்தும் படுத்திருப்பதும் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான இந்த செகண்ட் லுக் டிசைன் ரசிகர்களால் சமூக வலைத் தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் சிம்புவின் லுக்கை பார்த்தால் பாலா படம் போன்ற பாணியே தெரிகிறது. சிம்புவை பார்த்தால் பரிதாபம் கொள்ளும் நிலையில் தோற்றம் உள்ளது.

இதனால் பாலா பாணியில் கௌதம் படம் எப்படி இருக்குமோ.? என ரசிகர்கள் இப்போதே ஏங்க ஆரம்பித்து விட்டனர்.

STR’s Vendhu Thanindhathu Kaadu Second look poster released

வனிதாவை ‘பிக்கப்’ செய்து பட்டமும் கொடுத்து செஞ்சுரி அடித்த பவர் ஸ்டார்

வனிதாவை ‘பிக்கப்’ செய்து பட்டமும் கொடுத்து செஞ்சுரி அடித்த பவர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாயகனாக, குணசித்திர நடிகராக, நகைச்சுவை நடிகனாக தயாரிப்பாளராக அரசியல்வாதியாக பல்வேறு பொறுப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் அடுத்து இயக்குனர் மற்றும் இசையமைப்பாளராக அடி எடுத்து வைக்கிறார்.

2 எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் “. பி க் க ப் ” படத்தில்தான் அவர் இசையமைப்பாளராக களம் இறங்குகிறார்.

பிரபல இசையமைப்பாளர்கள் இதில் பாடுவதற்கு தயாராக உள்ளனர்.

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ‘ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப் பட்டாளமே இதில் உள்ளது.

சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து வருகிறது.

பவர் ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா.

அந்த பங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து சொல்கிறோம்.

படத்தில் காமெடி பிரதானமாக இருக்கும். ” பிக்கப்” படம் எனக்கு நூறாவது படமாகும்.

என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி. இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன்.

இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு ” வைரல் ஸ்டார்” என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்”. என்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

Vanitha and Power Star Srinivasan joins for Pickup

சிறந்த இயக்கம் இசை நடிப்பு பாட்டு என 9 பிரிவுகளில் விருதுக்கு ‘சைக்கோ’ பரிந்துரை

சிறந்த இயக்கம் இசை நடிப்பு பாட்டு என 9 பிரிவுகளில் விருதுக்கு ‘சைக்கோ’ பரிந்துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ” SIIMA 2020″ விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ” திரைப்படம், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான “SIIMA 2020″ திரை விழாவில், 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிபிராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் ‘மாயோன்” படம் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமாகியுள்ள தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், தனது தயாரிப்பில், கடந்த வருடம் மிகப்பெரும் வெற்றி பெற்ற “சைக்கோ” திரைப்படம், தற்போது 9 விருதுகளுக்கு பரிந்துரையாகி மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றதற்கு, ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை சாத்தியமாக்கிய “SIIMA 2020” திரை விருது குழுவினருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார். முக்கியமாக இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் தான் படத்தின் பெரு வெற்றிக்கு முக்கிய காரணமென அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ‘மாயோன்’ திரைப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்ததில் மகிழ்ச்சி, அவரது இசை படத்தின் மிகப்பெரும் தூணாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

“சைக்கோ” திரைப்படம் 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த இயக்கம் (மிஷ்கின்), முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் – உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் – உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் ( Double Meaning Productions ), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்).

ராஜ்குமார் பிச்சுமணி சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2020) 9 வது பதிப்பு செப்டம்பர் 18 & 19 தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

Mysskin’s Psyco nominated for 9 categories in SIIMA 2020 awards

More Articles
Follows