தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கவின், ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ள படம் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’.
ஷிவகுமார் அரவிந்த் டைரக்டு செய்துள்ள இப்படத்தை வருகிற ஜீலை 27–ந் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில் படத்தை எதிர்த்து திரைப்பட வினியோகஸ்தர் மலேசியா பாண்டியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில்… ‘‘நட்புன்னா என்னானு தெரியுமா படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து வாங்கினேன்.
இதற்காக ரூ.8 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போட்டேன். அதன்பிறகும் பல கட்டங்களாக பணம் கொடுத்தேன்.
மொத்தம் ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் வழங்கி இருக்கிறேன். ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை.
இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் போலீசிலும் புகார் அளித்தேன். பணத்தை தராமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்’’ என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதனையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தை வருகிற 30–ந் தேதிவரை வெளியிட கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
High Court Orders Stay On release Of Natpuna Ennanu Theriyuma