நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லரை படமாக்கும் எழில்..; பார்த்திபன் & கௌதம் கூட்டணி

நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லரை படமாக்கும் எழில்..; பார்த்திபன் & கௌதம் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham karthik parthibanமுதன்முறையாக நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லர் கதையை படமாக்குகிறார் இயக்குநர் எழில்.

காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.விஜய்குமரன் என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத நிலையில் ‘புரடக்‌ஷன் நம்பர் 2’ என்று தற்காலிகமாக அழைக்கின்றனர்.

அண்மையில் இதன் சூட்டிங்கை சென்னையில் தொடங்கியுள்ளனர்.

Gautham Karthik and Parthiban joins for a thriller movie

வி.கே.ராமசாமி & நாகேஷ் இணைந்த ‘ருத்ர தாண்டவம்’ ரீமேக்..; சிவனாக நடிக்கும் சந்தானம்..?

வி.கே.ராமசாமி & நாகேஷ் இணைந்த ‘ருத்ர தாண்டவம்’ ரீமேக்..; சிவனாக நடிக்கும் சந்தானம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நகைச்சுவை நடிகர்களான வி.கே.ராமசாமி மற்றும் நாகேஷ் இணைந்து நடித்த படம் ‘ருத்ர தாண்டவம்’.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படம் வெளியானது.

கடவுள் சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்பதை அப்போதே சொன்ன படம் இது.

அண்மையில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் இதே கதை தான்.

தற்போது “ருத்ர தாண்டவம் 2021” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கவிருக்கிறார்.

இதில் வி.கே.ராமசாமி நடித்த சிவன் கேரக்டரில் வடிவேலுவை நடிக்க வைக்க இருந்தாராம் இயக்குனர்.

ஆனால் அது நிறைவேறாமல் போகவே, தற்போது சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது தொடர்பான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்..

Santhanam to act in Rudra Thandavam remake

rudra thandavam movie

தம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..?

தம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம்.

ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க எஸ்ஆர். பிரபு தயாரித்து வருகிறார்.

Rashmika Mandanna to play female lead in Suriya’s next film

rashmika mandanna

அ இ த வி ம இ கட்சியை பதிய வேண்டாம்.; தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்… எஸ்கேப்பாகும் எஸ்ஏசி

அ இ த வி ம இ கட்சியை பதிய வேண்டாம்.; தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்… எஸ்கேப்பாகும் எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SA chandrasekharஅண்மையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை’ அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்த தகவல் வெளியான சில மணி நேரத்திலேயே கட்சிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என அறிக்கை விட்டார் நடிகர் விஜய்.

தன் ரசிகர்கள் யாரும் இந்த கட்சியில் சேர வேண்டாம். என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என அறிக்கை வெளியிட்டார்.

பின்னர் கட்சியிலிருந்து (பொருளாளர் பதவியில்) விலகுவதாக விஜய் அம்மா ஷோபாவும் அறிவித்தார்.

எனக்கு பிடித்த நடிகர் பெயரில் மக்களுக்கு நல்லது செய்ய கட்சித் தொடங்கி இருக்கிறேன்.

தற்போது விஜய் ஆபத்தான வலையில் சிக்கியுள்ளார் என பரபரப்பாக பேட்டியளித்தார் எஸ்ஏசி.

இதன் பின்னர் கட்சியின் தலைவர் பத்மநாபனுக்கு மிரட்டல்கள் வருவதாக தெரிவித்த அவர், எஸ்.ஏ.சிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.

யார் விலகினாலும் கட்சி நடக்கும்… தன்னுடைய பயணம் தொடரும் என்றார் எஸ்ஏசி.

இந்த நிலையில்… தற்போது கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என அவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறாராம் எஸ்ஏ சந்திரசேகர்.

SAC withdraw new political party ?

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை..; கமல்ஹாசன் வரவேற்பு

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை..; கமல்ஹாசன் வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanதமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கவுள்ளது தமிழக அரசு.

இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

“காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது.

இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு.

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது.

வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்.

One day leave for TN police MNM leader Kamal praised

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறையில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு இந்தி படங்களும் ‘சுபிஸ்டா மாவா’ மற்றும் ‘ஜூலாயின்’ என்ற பெயரில் தெலுங்கில் மறு உருவாக்கத்தில் வெளியானது. கவர்ச்சி பாத்திரமாக இருந்தாலும் சரி, பாரம்பரிய பாத்திரமாக இருந்தாலும் சரி, அம்ரின் மிகவும் பொருந்தி விடுகிறார். ஆகையால், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அம்ரின் தனது இந்தி திரைப்படங்கள் நிறைவடைவதற்கு முன்பே கிளவுட் நைன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பை பெற்றுவிட்டார்.

இந்தியில் தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்து, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமான கதாநாயகியாக மாறுவதே அம்ரின் குறிக்கோளாக வைத்துள்ளார். ரேகா, ஹேமமலினி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, வாகீதா ரெஹ்மான், தபு போன்ற கதாநாயகிகள் தென்னிந்திய சினிமா மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் பாலிவுட்டில் நுழைந்தனர். அவர்கள் தங்களுக்கென்று சிறந்த இடத்தைப் பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், நட்சத்திர நாயகிகள் என்ற அந்தஸ்தோடு பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். பல பாலிவுட் நட்சத்திரங்கள் தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. தற்போது, இதற்கு மாறாக ஒரு தென்னிந்தியாவை சேர்ந்த பெண் பாலிவுட்டில் நுழைந்துவிட்டார் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘புஸ்தகாம்லோ கொன்னி பேஜெலு காணவில்லை’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் சஜித் குரேஷியின் மகள், ராயல் பிலிம் விநியோகஸ்தர் உரிமையாளர் எம் ஐ குரேஷியின் பேத்தி அம்ரின் குரேஷி இரண்டு பாலிவுட் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்.

தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களான ‘சுபிஸ்டா மாவா’ மற்றும் ‘ஜூலாய்’ இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த இரண்டு படங்களிலும் அம்ரின் குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். ‘பேட் பாய்’ படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி ‘சுபிஸ்டா மாவா’வின் மறு உருவாக்கத்தை இயக்குகிறார். சஜித் குரேஷி தனது இன்பாக்ஸ் பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தை தயாரிக்கிறார். கோடைகால சிறப்பு படமாக இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், நட்சத்திர இயக்குநர் திரிவிக்ரமின் ‘ஜூலாய்’ டோனி டிசோசாவின் இயக்கத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் ஆரம்பமாகும். கதாநாயகிகள் வடக்கிலிருந்து தெற்கிற்கு வரும் பருவத்தில், தெற்கிலிருந்து செல்லும் அம்ரின் குரேஷி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். விரைவில் அவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பரபரப்பாகி விடுவார் என்று நம்புகிறோம். அம்ரின் குரேஷிக்கு வாழ்த்துக்கள்.

Hyderabad Girl Amrin Qureshi Starring In Two Big Bollywood Films

More Articles
Follows