தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்யின் மெர்சல் படம் வெளியானது முதல் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
முக்கியமாக ஜிஎஸ்டி வசனங்களை நீக்க பாஜக.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்க கூடாது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுவே இப்படத்திற்கு பெரியளவில் விளம்பரமாகி படம் வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்துக்கான தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்துள்ளார்.