துல்கர் சல்மானின் ‘குருப்’ கொடுத்த ‘குஷி’யில் வசனகர்த்தா ஆர்.பி.பாலா

துல்கர் சல்மானின் ‘குருப்’ கொடுத்த ‘குஷி’யில் வசனகர்த்தா ஆர்.பி.பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புலிமுருகன், லூசிபர், படத்துக்கு பிறகு குருப் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் ஆர்.பி பாலா.

கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளியுமான “குருப்” பின் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குருப்”.

இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு அசைவும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

மொழி தாண்டி, அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குருப்’ திரைப்படம் இந்த வாரம் நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் தமிழ், மலையாளம், இரண்டிலும் நேரடி படமாக, தெலுங்கு,கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழில் ஆர்.பி. பாலா வசனம் எழுதியுள்ளார்.

அது மட்டுமல்ல இப்படத்தில் வரும் மூன்று பாடல்களும் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். பிற மொழி மொழிமாற்று வடிவங்களுக்கும் டப்பிங் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார்.

‘புலிமுருகன்”’லூசிபர் ” படத்துக்குப் பிறகு இந்த படம் பேசப்படும் வகையில் அமைந்துள்ளது. நாயகன் துல்கர் சல்மான் உள்பட படக்குழுவினர் பாலாவைப் பாராட்டி வருகின்றனர்.

Dulquer Salman praises dialogue writer RB Bala

டூப் இல்லாமல் ஃபைட் போட்ட சோனியா..; ‘கிராண்மா’ லுக்கை வெளியிட்ட 19 பிரபலங்கள்

டூப் இல்லாமல் ஃபைட் போட்ட சோனியா..; ‘கிராண்மா’ லுக்கை வெளியிட்ட 19 பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு
‘கிராண்மா’ என்கிற படம்
உருவாகியுள்ளது.

இப்படத்தை GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர்.

ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.

பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.

மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தின் மீது படக்குழு வைத்துள்ள நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரையுலகின் பிரபலங்கள் சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா ,சூர்யா ஜே. மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா , மரினா மைக்கேல் , கோகுல்சுரேஷ் , சரத் அப்பானி,ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள்
தங்கள் சமூக ஊடகங்களில் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியிட்டுள்ளனர்.

இதன்மூலம் படத்தைப் பல மடங்கு மேலே கொண்டு சென்று விட்டார்கள்.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சி பற்றித் தயாரிப்பாளர் ஜெயராஜ் கூறும்போது…

“முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அன்புடன் வெளியிட்டுள்ள திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களது அன்பு அளவிட முடியாதது.

இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக உணர வைக்கிறது .
இந்த நிகழ்வு படத்தைப் பலமடங்கு வெளிச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

படத்தின் ஆடியோ ,டிரைலர் விரைவில் வெளியாக இருக்கின்றன.படத்தை உலக அளவில் திரையரங்குகளில் வெளியிடும் திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.”என்றார்.

படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ் பேசும்போது…

” முதலில் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பட வாய்ப்பை அளித்த என் தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 19 பிரபலங்கள் தங்கள் அன்பையும் ஆதரவையும் காட்டும் வகையில், தங்களது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.

இதை எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய தொரு வெற்றியாக நான் உணர்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் புது அனுபவமாக இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.

படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே தங்களது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள்.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு எங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தி உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ” என்றார்.

‘கிராண்மா’ கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால் , சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு – யஸ்வந்த் பாலாஜி .கே , எடிட்டிங் – அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை – அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம்,

ஸ்டண்ட் – முகேஷ் ராஜா,

சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது.

திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ‘கிராண்மா’ விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது.

நம்ம ஊர் சிரிப்பு பேயாக இல்லாமல் ஹாலிவுட் லெவலில் மிரட்ட வரும் ‘கிராண்மா’

நம்ம ஊர் சிரிப்பு பேயாக இல்லாமல் ஹாலிவுட் லெவலில் மிரட்ட வரும் ‘கிராண்மா’

19 celebrities unveil the first look of Sonia Agarwal starrer spine-chilling horror flick ‘Grandma’

அஜித் & சூர்யா கொடுத்த இடைவெளியில் நுழைந்த விஷால்

அஜித் & சூர்யா கொடுத்த இடைவெளியில் நுழைந்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ‘வலிமை’ படம் 2022 பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் 2022 பிப்ரவரி 4ல் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ பட ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு..

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.

அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம்.

இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு இப்படம் அனைத்து கட்ட பணிகளும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம்.

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார்.

யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.ப. சரவணன் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர்.

விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

Vishal new film Veerame Vaagai Soodum release date announced

SUPER STAR-க்கு ஒரு நியாயம்.? STR-க்கு ஒரு நியாயமா.? சிம்பு ரசிகர்கள் சீற்றம்

SUPER STAR-க்கு ஒரு நியாயம்.? STR-க்கு ஒரு நியாயமா.? சிம்பு ரசிகர்கள் சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி திருநாளில் நவம்பர் 4 அன்று ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகி தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.

இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னதாக தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு.

அப்போதே.. கொரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையில் தங்கள் குடும்ப நிறுவன படம் ரிலீஸ் சமயத்தில் இப்படியொரு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது என ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

ஆனாலும் ஷாப்பிங் மால் பஸ் ரயில் டாஸ்மாக்குகளில் 100% கூட்டம் அலைமோதியது உங்களுக்கு தெரியவில்லையா என மற்றொரு தரப்பினர் வாதம் செய்தனர்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற 25 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ளார்.

இந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் சான்றிதழ் காட்டினால் மட்டுமே தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இதனால் பட வசூல் பாதிக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளதால் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில சிம்பு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி படத்திற்கு ஒரு நியாயம்.? சிம்பு படத்திற்கு ஒரு நியாயமா? என கேட்டு வருகின்றனர்.

இதனிடையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில்…

”உலகிலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்கு மக்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

STR fans angry on tamil nadu govt decision

ஜெய்பீம் Vs பாமக.. : சூர்யாவுக்கு ஆதரவாக பாம்புகளுடன் வந்த பழங்குடியினர்

ஜெய்பீம் Vs பாமக.. : சூர்யாவுக்கு ஆதரவாக பாம்புகளுடன் வந்த பழங்குடியினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்து அண்மையில் ஓடிடியில் வெளியான ‘ஜெய்பீம்’ படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் கமல் உள்ளிட்ட பலரும் பாராட்டிய நிலையில் வன்னியர் மக்களை இந்த திரைப்படம் காயப்படுத்தி விட்டதாக பாமகவினர் புகார் அளித்து வந்தனர்.

இந்த படத்தின் மையக்கருவான நிஜ ராஜாகன்னுவின் மனைவி பார்வதியை சந்தித்து நடிகர் சூர்யா ரூ 15 லட்சத்திற்கான வங்கி வைப்பு நிதி ஆதாரத்தை அளித்தார். நடிகர் லாரன்ஸ் பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

வன்னியர் பிரிவை சார்ந்த சிலர் நடிகர் சூர்யாவை உதைத்தால் பணம் தருகிறோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். எனவே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் வசனகர்த்தா கண்மணி குணசேகரன் தான் சம்பளமாக பெற்ற ரூ. 50000 பணத்தை சூர்யாவுக்கே திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து இயக்குனர் ஞானவேல் அவர்கள் படத்தின் காட்சிகளுக்கு நானே பொறுப்பு என வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

இவ்வாறாக ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் படத்திற்கு கிடைத்துள்ள நிலையில் மதுரையில் காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.

மதுரையில் இன்று ஒன்று கூடிய காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் சூர்யாவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

அவர்கள் தங்களில் கைகளில் எலி பாம்புகளுடன் வந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெய்பீம் படத்தில் எங்களை பற்றி ஒரு அடையாளத்தை பதிவு செய்துள்ளார் சூர்யா. இதுவரை எந்த நடிகரும் இதை செய்யவில்லை. யாரும் எங்களை பற்றி பேசியதும் இல்லை.

அவருக்கு எதாவது தீங்கு நேர்ந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது பாம்பையும் விட தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

மேலும், அவருக்கு ஆதரவாக அவருடன் எப்பவும் உடன் இருப்போம் என்றும் கூறியுள்ளனர்.

Irular people support Suriya’s Jai Bhim issue

விஜய்சேதுபதி சந்தீப்கிஷனுடன் இணையும் கௌதம் மேனன்

விஜய்சேதுபதி சந்தீப்கிஷனுடன் இணையும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இதனையடுத்து பிந்து மாதவி நடித்த ‘யாருக்கும் அஞ்சேல்’ என்ற படத்தை இயக்கியார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை.

தற்போது சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள ‘மைக்கேல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற ,ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளார்.

இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது தொடர்பான தகவலை படக்குழுவினர் இன்று நவம்பர் 22ல் அறிவித்துள்ளனர்.

போஸ்டரில் இரத்தம் தோய்ந்த கையும், கைவிலங்கும் இடம்பெற்றிருந்தது. இது படத்தின் கதாப்பாத்திரங்களைப் பற்றி ரசிகர்களிடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, வரவேற்பையும் பெற்றது.

இந்த படத்தை தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.

Gauthm Menon and Vijay Sethupathi joins for a new film

More Articles
Follows