ஆர் பி பாலா தயாரிப்பில் கலையரசன் – தீபா இணைந்த ‘கொலைச்சேவல்’

ஆர் பி பாலா தயாரிப்பில் கலையரசன் – தீபா இணைந்த ‘கொலைச்சேவல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரத் – வாணி நடித்த ‘லவ்’ படத்தை தொடர்ந்து ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘கொலைச்சேவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரையும் இயக்குநர் பா ரஞ்சித் இன்று வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் வி ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் கலையரசன் கதைநாயகனாக நடிக்க, யூடியூப் குறும்படங்கள் புகழ் தீபா பாலு நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆகிறார்.

பால சரவணனும் அகரன் வெங்கட்டும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, மிகவும் வலுவான எதிர்மறை வேடத்தில் இதுவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த ஆதவன் நடிக்கிறார். கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளனர்.

‘கொலைச்சேவல்’ குறித்து பேசிய தயாரிப்பாளர் ஆர் பி பாலா…

“இது ஒரு மிகவும் அழகான காதல் கதை. அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. அதே சமயம் சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்து ஒன்றையும் இப்படம் சொல்லும்.

குறிப்பாக திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இதுவரை கண்டிராத வகையில் இருக்கும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “திறமை வாய்ந்த இளைஞரான துதிவாணனை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. கலையரசனுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமையும்.

படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. ‘கொலைச்சேவல்’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்,” என்று கூறினார்.

‘கொலைச்சேவல்’ திரைப்படத்திற்கு பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சாந்தன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பிற்கு அஜய் மனோஜும், கலை இயக்கத்திற்கு சரவண அபிநாமனும், சண்டை பயிற்சிக்கு டேஞ்சர் மணியும் பொறுப்பேற்றுள்ளனர்.

வெகு விரைவில் இப்படம் வெளியாகிறது.

Kalaiyarasan and Deepa Balu in lead roles titled Kolaiseval

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி கொடல் உருவுற சம்பவம் உறுதி.; பட்டைய கிளப்பும் ‘லியோ’ பாட்டு

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி கொடல் உருவுற சம்பவம் உறுதி.; பட்டைய கிளப்பும் ‘லியோ’ பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படம் அடுத்த மாதம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.

எனவே ரசிகர்களை சமாதானப்படுத்த திடீரென ‘லீயோ’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பேட் ஹாஷ் என்ற பாடல் வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு விஷ்ணு என்பவர் வரிகளை எழுதியுள்ளார்.

அந்தப் பாடல் வரிகள் இதோ..

Badass
Mr Leo Dass is a Badass,
HE’S A FREAKIN Badass,

சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து, இவன் வேட்டைக்கு சிதறணும் பயந்து..

பெரும் புள்ளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி, குடல் உருவுற சம்பவம் உறுதி..

இதுவரையில நல்லவன் இருந்தான், இந்த கதையில ராட்சசன் முகம்தான்..

வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ…

குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass மா ஒரசாமா ஓடிடு, Badass மா லியோ தாஸ் மா.. Badass மா ஒரசாமா ஓடிடு..

லியோஓஓஓஓஓ…

Badass
Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ…

Badass
HE’S A FREAKIN Badass..

லியோஓஓஓஓஓ…

லியோஓஓஓஓஓ…

பல ராஜாக்கள பார்த்தாச்சுடா, இவன் கத்தி ரொம்ப கூரு ஆச்சுடா..

லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்..

நூறு பஞ்சாயத்து தீர்த்தாச்சுடா, வரலாறு மொத்தம் blood ஆச்சுடா..

லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்..

ரொம்ப ரொம்ப ஆடாத மா, தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா.. bloody sweet!

வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ…

குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass மா ஒரசாமா ஓடிடு, Badass மா ஒரசாமா ஓடிடு..
Badass மா உன் வால சுருட்டிடு.. Badass மா லியோ தாஸ் மா, Badass மா ஒரசாமா ஓடிடு

லியோஓஓஓஓஓ…

Badass
Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ…

Badass
HE’S A FREAKIN Badass..

லியோஓஓஓஓஓ…

Badass
Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ…

Badass
HE’S A FREAKIN Badass..

ரெஸ்ட் இன் ஃபீஸ்…

LEO – Badass Lyric

LEO – Badass Lyric

LEO movie Badass song full Lyrics here

சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம்..; விஷால் சொன்னது உண்மை.. – சீனுராமசாமி

சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம்..; விஷால் சொன்னது உண்மை.. – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஷால் பேசும்போது.. “4 கோடிக்கு குறைவான பட்ஜெட் படங்களை தயாரிக்காதீர்கள். உங்களுக்கு ஒரு பைசா கூட தேறாது. அதற்கு பதிலாக நிலங்களை வாங்கி போடுங்கள்.. ஏற்கனவே 120 படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்கி கிடக்கின்றன’ என பேசி இருந்தார்.

இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்ன பட்ஜெட் படங்கள் சில வெற்றி பெற்று தோல்வியடைந்தும் உள்ளன. அதே சமயம் பெரிய படங்கள் மோசமான தோல்வியடைந்தும் உள்ளன.

நிலைமை இப்படி இருக்கையில் விஷால் சொன்னது சரியா தவறா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் சீனுராமசாமி வெளியிட்டுள்ள பதிவில்…

“நடிகர் விஷால் சொல்வதில் ஒரு உண்மை உண்டு. சிறு படங்களுக்கு இங்கே நியாயம் இல்லை. சிறுபடங்களை வெளியிட யார் உண்டு.

முதல் மூன்று நாள் அவகாசம் தான். சிறுபடங்களுக்கு தியேட்டரில் முதல் ஷோ கூட்டமில்லை எனில் தூக்கப்படும். தியேட்டர் வியாபாரம் பெரிய படங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு அதில் சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம்.

பல தியேட்டரில் சைக்கிள் பார்க்கிங்கே இல்லை.. அப்புறம் சின்ன படத்தை யார் வாழ விடுவார்கள்? அன்னக்கிளி, சேது போன்ற படங்களின் காலம் பொற்காலம்” என பதிவிட்டுள்ளார்.

Seenuramasamy support Vishal in low budget movie controversy

சித்தார்த் வெளியேற்றம்.; காவேரி விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் இரட்டை வேஷம்.?

சித்தார்த் வெளியேற்றம்.; காவேரி விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் இரட்டை வேஷம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. போதுமான தண்ணீர் இல்லை என்பதால் திறந்து விடமாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.

மேலும் கர்நாடகத்தில் உள்ள சில அமைப்புகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என பல போராட்டங்களை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் பெங்களூரில் இது தொடர்பான ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சித்தா’ படம் கர்நாடகத்திலும் வெளியிடப்படுகிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் நடிகர் சித்தார்த். அப்போது அங்கே நுழைந்த காவிரி நீர் போராட்டக்காரர்கள் சித்தார்த்தை பேசவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற சொன்னார்கள்.

ஒரு தமிழ் படத்திற்கு இங்கே பிரமோஷன் செய்யக்கூடாது என அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே வேறு வழியின்றி சித்தார்த் பாதியில் புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..

பல ஆண்டுகளாக திறமையற்ற அரசியல் கட்சியினரால் இந்த நிலை நீடித்து வருகிறது. இதில் கலைஞர்களை புறக்கணிக்க கூடாது என தெரிவித்துள்ளார் .

இதே கருத்தை அவர் கன்னட மொழியில் பதிவிடும்போது என் காவேரி என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ஆனால் ஆங்கிலத்தில் பதிவு செய்யும்போது அந்த வார்த்தையை அவர் நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash raj double game in cauvery water issue

விஷாலின் அசிஸ்டென்ட் ஹரி கிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி

விஷாலின் அசிஸ்டென்ட் ஹரி கிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் நீண்ட கால நண்பரும் அவரின் உதவியாளரும், தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல இயக்கத்தின் அகில இந்திய செயலாளருமான ஹரிகிருஷ்ணன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

சிகிச்சையில் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

தற்போது பில்ராத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரி கிருஷ்ணனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Vishal’s assistant Hari Krishnan is admitted to the hospital

லியோ இசை விழா ரத்தான நிலையில் காவல்துறைக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்

லியோ இசை விழா ரத்தான நிலையில் காவல்துறைக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது.

இதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில், “செப்டம்பர் 30-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அதிக பாஸ்கள் கோரிக்கை வந்ததால் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதில் சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Audio launch of Vijay’s Leo cancelled due to safety reasons

More Articles
Follows