தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வசனங்கள் பாஜ கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதற்கு அந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து பாஜக.வினருக்கு பல்வேறு தரப்பினரும் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதன்முறையாக விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர் அவர்கள் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் குடிமகனாக நான் பேசுகிறேன். கருத்து சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம்.
அரசியல் தொடர்புள்ளவர்கள்தான் சென்சார் வாரியத்திலும் உள்ளனர். அவர்கள்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்துள்ளனர்.
ஆனால், சென்சார் அனுமதித்த ஒரு படத்தில் காட்சிகளை நீக்க ஆளும் கட்சி சொல்கிறது. அவர்கள் ஏன் இதை அரசியலாக்குகிறார்கள்? என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Dont know Why BJP making Mersal in Political issue says SA Chandrasekar