தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் பார்த்துள்ளார்.
அப்படத்தை பாராட்டியுள்ள அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை தன் கைப்பட எழுதி பகிர்ந்துள்ளார்.
அதில் சுசீந்திரன் எழுதியுள்ளதாவது…
பிரம்மாண்டமான பட்ஜெட்-ல் நல்ல சமூக கருத்து.
விஜய் சாருக்கு அதிகம் நடிக்க வாய்ப்பு கிடைத்த திரைப்படம், அதை சிறப்பாக செய்துள்ளார். விஜய் சார் என்றால் மாஸ், சமந்தா – விஜய் சார் காதல் காட்சிகள், விஜய் சாரின் நக்கல் கலந்த வசன உச்சரிப்பு, வடிவேலு சாரின் இந்தியாவின் தற்போதைய நிலையை “இந்தியாவுல எல்லாரும் பொறக்க கையதா நக்கிட்டு இருக்கானுங்க” என்று ஏடிஎம் கார்டுஐ பற்றி கூறுவது, அனல் அரசு-வின் சண்டைக் காட்சிகள், ஷோபி மாஸ், கேமிரா மேன் விஷ்ணு, அட்லி என அனைவரும் கடினமாக உழைத்து உள்ளனர்.
ரஹ்மான் சாரின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே செம. ‘மெர்சல்’ விஜய் ரசிகர்களுக்கு விருந்து.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Director Suseenthiran praises Vijay and Mersal movie team