அதிதி இப்போதான் நடிகை.. இதற்கு முன்.; ‘விருமன்’ விழாவில் ஷங்கர் ருசிகர பேச்சு

அதிதி இப்போதான் நடிகை.. இதற்கு முன்.; ‘விருமன்’ விழாவில் ஷங்கர் ருசிகர பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’.

இதில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.

இப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

#விருமன் பட விழாவில் நடிகை அதிதி ஷங்கர் பேசும்போது…

என்னுடைய ஆசை கனவு அனைத்தும் தரையிலிருந்து திரையில் வருவது தான். அது நிறைவேற துணையாக இருந்த அப்பா, அம்மா மற்றும் என்னுடன் பிறந்த சகோதரன், சகோதரிக்கு நன்றி.

இவ்வளவு பெரிய வாய்ப்பளித்த 2D நிறுவனம் சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா சார் அவர்களுக்கு நன்றி. தேசிய விருது பெற்றதற்கு சூர்யா சாருக்கு வாழ்த்துக்கள்.

என்னை தேன்மொழியாக மாற்றிய இயக்குனர் முத்தையாவிற்கு நன்றி. முத்தையா மிகவும் நேர்மையான மனிதர். வேலையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார். அவர் ஓவ்வொரு காட்சியை விளக்கும் போதும் அந்த கதாபாத்திரமாகவே நடித்துக் காட்டுவார். அப்போது உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவர் கண்கள் கலங்கும்.

என்னுடைய அறிமுக படத்தில் யுவனுடன் பாடியதில் மிகவும் மகிழ்ச்சி. நான் யுவனின் மிக பெரிய ரசிகை. என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்த தங்கதுரைக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் செல்வா சார் என்னை மிக அழகாக திரையில் காட்டியுள்ளார்.

கார்த்தியின் நடிப்பை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கும். அவருடன் இணைந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் எனக்கு நிறைய கற்றுத் தந்தார்.

என்னை ஒரு புது முகம் போல் அவர்கள் நடத்தவில்லை. 2D நிறுவனம் முழுவதுமே என்னை அவர்களின் குடும்பப் பெண் போன்று தான் பார்த்துக் கொண்டார்கள்.

*அப்பா பலரை கேமரா முன் நிறுத்திப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் முதல் முறையாக கேமரா முன் நின்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?*

நான் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரை பயத்துடன் தான் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், முதல் காட்சியே பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. ஷோபி மாஸ்டர் தான் அந்த பாடலுக்கு நடனம் கற்றுத் தந்தார். அதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.

சினிமா பின்புலம் இருக்கக் கூடிய ஒரு மிகப்பெரும் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வருவோரை மக்கள் அதிகம் கவனிப்பர். அப்படியான அழுத்தங்களை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?

நான் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. என் அம்மா அப்பா இருவரும் எனக்கு ஊக்கமளித்தார்கள். ஆனால், நான் இந்த சினிமாத் துறையில் நிலைத்திருப்பது என்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இருக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன் என்றார்.

‘விருமன்’ பட விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசும்போது..

என்னுடைய மகளுக்கு வாய்ப்புக் கொடுத்த 2டி நிறுவனத்திற்கும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா மற்றும் 2டி நிறுவனத்தைச் சார்ந்த அத்தனை பேருக்கும் நன்றி. இப்படத்தில் 2டி நிறுவனம் தயாரிக்கிறது என்று கேட்டதும், மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால், தொடர்ந்து நல்ல படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தேசிய விருது பெற்ற சூர்யாவிற்கு இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கார்த்தியை திரையில் பார்த்தாலே பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்கின்ற தரமான நடிகர். அவருடன் அதிதி நடிப்பதில் மகிழ்ச்சி. அவர் சகோதரர் போல அவரும் கூடிய விரைவில் தேசிய விருது வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கஞ்சா பூ கண்ணாலே, மதுரை வீரன் போன்று பல கிராமத்து பாடல்கள் வந்துவிட்டது. இருந்தாலும், அதில் புத்துணர்ச்சி தருவது சிறப்பான விஷயம். ரிதமில் புதிதாக ஏதோ செய்கிறார் யுவன். அருமையாக இசையமைக்கும் யுவனுக்கு வாழ்த்துகள்.

முத்தையாவின் படங்களைப் பார்த்ததில்லை. ஆனால், அவருடைய படங்களில் பெண்களுடைய கதாபாத்திரத்தை அருமையாக சித்தரிப்பார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

எனது மகள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. செல்வ குமார் ஒளிப்பதிவை ஆழமாக உணர முடிந்தது. கலை இயக்குனரின் பணியும் பாராட்டுக்குரியது.

என் மகளைப் பற்றி நான் என்ன கூறினாலும், ஒரு அப்பா தன் பெண்ணைப் பற்றி பெருமையாகக் கூறுவது போலத்தான் இருக்கும். ஆனால், ஒரு இயக்குனராக அவரை கவனத்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த பொழுதுபோக்காளர். அவர் மேன்மேலும், திறமையை வளர்த்துக் கொள்வது, முத்தையா மாதிரி இயக்குனர் கைகளிலும், ரசிகர்கள் கைகளிலும் தான் இருக்கிறது.

இந்த வாய்ப்புக் கொடுத்த தங்கதுரை, பத்திரமாக பார்த்துக் கொண்ட 2டி ராஜசேகர், பாபி அவர்களுக்கும் நன்றி.

உங்களைப் பார்த்து இயக்குனராக வேண்டும் என்று பலரும் நினைத்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் நிறைய அறிவுரை வழங்கியிருப்பீர்கள். ஆனால், உங்கள் மகளுக்கு நீங்கள் கூறிய அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு..

என் மகளுக்கு நான் எந்த அறிவுரையும் வழங்கவில்லை. மேலும், அவருக்கு அறிவுரை வழங்குவது பிடிக்காது. அதுமட்டுமில்லாமல், இக்காலத் தலைமுறையினர் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்றார்.

நாங்கள் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிதி அவருடைய இருக்கையில் அமைதியாக இல்லாமல், ரோலக்ஸ் என்று கூச்சலிட்டும், கைத்தட்டி ஆரவாரத்தோடும் இருக்கிறார். அவர் என்ன வாலா? என்ற கேள்விக்கு..

அவர் இப்போது தான் நடிகை. அதற்கு முன் எல்லோரும் போல கைத்தட்டி ரசிக்கும் ரசிகை என்றார்.

இப்படத்தின் டிரைலர் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கிறது. இப்படத்தின் வெற்றித் தெரிகிறது” என்றார் ஷங்கர்.

விருமன்

Director Shankar speech at Viruman Audio launch

ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ

ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கபாலி’ & ‘காலா’ & ‘சார்பட்டா பரம்பரை’ படங்களுக்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது ” எனும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பா.இரஞ்சித்.

இதில்… காளிதாஸ் ஜெயராம், கலையரசன் துஷாரா, ஹரி, ஷபீர் , வினோத், மைம்கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக் கருவில் உருவாகியிருந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது.

ஆகஸ்ட் 31 தியேட்டரில் வெளியாகவிருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு கிஷோர்குமார், இசை டென்மா, எடிட்டிங் செல்வா RK, கலை ரகு,
நடனம் சாண்டி, சண்டைப்பயிற்சி ஸ்டன்னர் சாம்.

Natchathiram Nagargirathu release date is here

சூர்யா வந்தாலே தாங்காது.. விருமனும் கூட வந்தா..; மதுரையை கலகலப்பாக்கிய சூரி

சூர்யா வந்தாலே தாங்காது.. விருமனும் கூட வந்தா..; மதுரையை கலகலப்பாக்கிய சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொம்பன்’ படத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தின் மூலம் முத்தையா – கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர். இதில் தயாரிப்பாளராக நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.

இப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

#விருமன் பட விழாவில் நடிகர் சூரி பேசும்போது…

சூர்யா வந்தாலே தாங்காது, மாறன் விருமன் இருவரும் வந்தால் சொல்லவா வேண்டும்? மதுரையே ஆரவாரமாக இருக்கிறது. ரசிகர்கள் சார்பாக சூர்யா அண்ணன் தேசியவிருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

இந்த விருதுகளெல்லாம் சினிமாவில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு கிடைத்தது. ஆயிரம் கோவில்கள் கட்டுவதைவிட, ஆயிரமாயிரம் அன்னச் சத்திரம் கட்டுவதைவிட,்ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மத்திற்கு பேசப்படும். அவரின் குடும்பமும் அதைத் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், உங்கள் பின்னால் உறுதுணையாக பலரும் இருக்கிறார்கள்.

முத்தையா பிரதர் இயக்கத்தில் ‘மருது’ படத்தில் நடித்திருக்கிறேன். பின் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தேன். இப்போது 3வது படமாக இதில் நடித்திருக்கிறேன்.

முத்தையா பிரதர் வெளியே இருக்கும்போது, கிராம படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், நகர்புற படங்கள் எடுப்பதில்லை. ஏன்? என்று கேட்டார்கள். எல்லோரும் நகர்ப்புற படங்கள் எடுத்தாலும், எங்களுடைய பிழைப்பு என்னவாகும்? ஷங்கர் சார் மைதானத்தில் நாங்கள் நுழையக் கூட முடியாது.

கருணாஸ் கூறியது போல, ஒரே நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்த சினிமாவை, இதுதான் என் மண், இங்கே கேமராவை வையுங்கள் என்று திசைமாற்றியது பாரதிராஜா சார்தான்.

அவர் போட்ட விதைதான் இன்று எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆகையால், எல்லோரும் அந்த பக்கம் போய்விடாதீர்கள். ஆனால், எல்லா இயக்குனர்களும் இங்கு தேவைதான்.

கார்த்தி பிரதருடன், நான் மகான் அல்ல, கடைக்குட்டி சிங்கம் நடித்தேன். இப்படம் 3வது படம். முத்தையா பங்காளியுடனும் 3வது படம். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் நீங்கள் கதாநாயகன் தான்.

எந்த பொறுப்பைக் கொடுத்தாலும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செய்கிறீர்கள். உங்களின் கடமை, விடாமுயற்சி ஆகியவைக்கு மதுரை மீனாட்சி என்றும் துணையிருப்பாள்.

இந்த விழா நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. கதாநாயகர்களுக்கு சமமாக உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த லட்சக் கணக்கான ரசிர்களில் நானும் ஒருவன். கஞ்சா பூ கண்ணாலே…என்ற பாடலை கேட்காதவர்கள் பாவம் செய்தவர்கள்.

தினமும் இரவில் கேட்டுக் கொண்டிருப்பேன். எப்போது பார்த்தாலும் இந்தப் பாடலையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனது மனைவி கேட்டார். எல்லோரையும் முணுமுணுக்க வைத்திருக்கிறது அந்த பாடல்.

ரோபோ ஷங்கரின் மகளை சிறிய வயது முதல் பார்த்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் இயக்குனர் அவரை தூக்கி இடுப்பில் வைக்க முடியுமா? என்று கேட்டார்.

நான் ஒரு அடி பின்னால் சென்றேன். ஆனால், பாப்பா கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு ஓடினார். அவருடைய கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். அனைவரின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

இப்படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி, ராஜ்கிரன் ஒழுக்கத்தின் முன்னுதாரணமாக இருக்கிறார். அவருடன் நடித்ததற்கு நன்றி.

அதிதியின் நடிப்பை பார்த்தால் 50, 60 படங்களில் நடித்தது போன்ற அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அத்தனை பாவனைகளை கொடுப்பார். அவரைக் கொடுத்த ஷங்கர் சாருக்கு நன்றி என்றார்.

Actor Soori speech at Viruman trailer launch

சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் கூட்டணியில் இணைந்த விஜய்யின் ரீல் அம்மா

சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் கூட்டணியில் இணைந்த விஜய்யின் ரீல் அம்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதன் பின்னர் மேலும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதனையடுத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்திலும் நடிக்கின்றார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை நேற்று வெளியிட்டனர்

அதிதி தற்போது கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஷ்வா இந்த படத்தை தயாரிக்கிறார். வித்துயூ ஐயனா ஒளிப்பதிவு செய்கிறார்.

பரத் ஷங்கர் இசையமைக்க பிலோமீன் ராஜ் எடிட்டிங் செய்கிறார்.

இந்தப் படத்தில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது 1980 நடிகை சரிதாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சூர்யா – விஜய் இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய்யின் அம்மாவாக சரிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular actress joins Sivakarthikeyan’s Maaveeran

கத்தி பேசுறது.. கத்திய காட்டி பேசுறது விருமனுக்கு புடிக்காது.; அனல் பறக்கும் ட்ரைலரை வெளியிட்ட ஷங்கர்

கத்தி பேசுறது.. கத்திய காட்டி பேசுறது விருமனுக்கு புடிக்காது.; அனல் பறக்கும் ட்ரைலரை வெளியிட்ட ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொம்பன்’ படத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தின் மூலம் முத்தையா – கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர். இதில் தயாரிப்பாளராக நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைப்பெற்றது.

ஏற்கெனவே “கஞ்ச பூ கண்ணால…” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

இதில் படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

இதில் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளும் அதிரடி பஞ்சு வசனங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

‘நாலு திசைக்கு வெளிச்சம் கொடுக்குற சூரியன் மாதிரிதான்யா நீ இருக்கணும்’..

‘கத்தி பேசுறது கத்தியைக் காட்டி பேசுறது விருமனுக்கு பிடிக்காது’,

என் பிள்ளையா பாசத்த காட்டி அடிச்சிடலாம். பயமுறுத்தி கிட்ட கூட நெருங்க முடியாது’ போன்ற வசனங்கள் உள்ளன.

Viruman Trailer launched by Director Shankar at Madurai

 

தென் மாவட்ட வாழ்வியலை சொல்ல விக்ராந்துக்கு ஜோடியான ‘டிக்கிலோனா’ நாயகி

தென் மாவட்ட வாழ்வியலை சொல்ல விக்ராந்துக்கு ஜோடியான ‘டிக்கிலோனா’ நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A.S. என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘தொட்டுவிடும் தூரம்’ என்கிற படத்தை இயக்கியவர்

விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்து அதே சமயம் குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.

மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.
கலையை தியாகராஜனும், சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் கவனிக்கின்றனர்.

சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

*தொழில்நுட்பக் குழு*

தயாரிப்பு ; S. அலெக்சாண்டர்

இயக்கம் ; வி.பி நாகேஸ்வரன்

ஒளிப்பதிவு ; மாசாணி

படத்தொகுப்பு ;

கலை ; தியாகராஜன்

சண்டை பயிற்சி ; ராஜசேகர்

நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி

டிசைன்ஸ் ; சசி & சசி

மக்கள் தொடர்பு ; A. ஜான்

விக்ராந்த்

Vikranth and Shirin Kanchwala in new movie

More Articles
Follows