ஹரிஷ் கல்யாணை இயக்கும் பிச்சைக்காரன் பட இயக்குனர்

ஹரிஷ் கல்யாணை இயக்கும் பிச்சைக்காரன் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)தமிழ் சினிமாவில் உள்ள இளைய நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு ரசிகைகள் பலர் உள்ளனர்.

இவர், கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.

மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மூவிசாரே தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில், இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் இப்படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

ரஜினியை கலாய்ப்பதா.? கடுப்பான கமல்.; காட்சியை நீக்க கோமாளி பட புரொடியூசர் சம்மதம்

ரஜினியை கலாய்ப்பதா.? கடுப்பான கமல்.; காட்சியை நீக்க கோமாளி பட புரொடியூசர் சம்மதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் முதன்முறையாக இணைந்துள்ள கோமாளி என்ற படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதீ இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அதில், 16 வருடங்களாக கோமாவில் இருந்து மீள்கிறார் ஜெயம் ரவி.

எனவே அவரை நம்ப வைக்க “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு.

அதைப்பார்த்து ஜெயம் ரவி அதிர்ச்சியுடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.

இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த படத்தை தாங்கள் புறக்கணிக்க போவதாக அறிவித்தனர்.

மேலும் அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கமல் அவர்கள் அந்த டிரைலரை பார்த்துவிட்டு தயாரிப்பாளரிடம் பேசினாராம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒரு பேட்டியில் கூறியதாவது…

“ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர் நோக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

அவரின் பெயருக்கு என்னால் கலங்கம் ஏற்பட விடமாட்டேன்.

கோமாளி பட ட்ரெய்லரைப் பார்த்த கமல்ஹாசன் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் ரஜினி ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்

பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஅண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அது திரைப்படத்திற்காக கற்பனையாக எழுதப்பட்ட கதை, அதற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதையும் தாண்டி மக்கள் அவருக்காக பரிதாபப் பட்டார்கள். கோபப்பட்டார்கள். அந்தப் படங்களின் வெற்றியே அதற்கு சாட்சி.

ஒரு படத்தில் அவர் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி. திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி” அய்யய்யோ சேரன் சிகரெட் எல்லாம் குடிக்க மாட்டாரே..” என்று புலம்பிய போது ஒரு நடிகரை நம் மக்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அவர் குடும்பத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டபோது ஒட்டுமொத்த தமிழகமே தன் வீட்டுப் பிரச்சினை போல் எண்ணி அவருக்காக மனம் உருகியதும், அவர் பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து வணங்கியதைக் கண்டு மக்கள் கண்கலங்கியதும் யாரும் மறந்து விடவில்லை.

எனது வெங்காயம் திரைப்படம் வெளியாகி சரியாக கவனிக்கப்படாத பொழுது, எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு சாதாரண பார்வையாளனாக படத்தைப் பார்த்த அவர், ஒரு நல்ல படம் மக்களை சென்றடையாமல் போய்விடக்கூடாது என்று அவருக்குத் தெரிந்த அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று எந்த கவுரவமும் பார்க்காமல் ஒவ்வொருவரிடமும் சென்று அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கெஞ்சியதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

அவர் பணம் சம்பாதிக்க திரைத்துறைக்கு வந்தவர் என்றால் யாரோ ஒருவரின் படத்தை தூக்கிக்கொண்டு இப்படி எல்லோரிடமும் கெஞ்சி இருக்க வேண்டியதில்லை. தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நல்ல திரைப்படங்கள் வரவேண்டுமென்பதில் அவரைப்போல அக்கறை கொண்டவர் வேறு யாருமில்லை.

சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிறுவனங்களிலும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து தன் குடும்பத்தை வளப்படுத்திக் கொள்ளும் சிலருக்கு மத்தியில், C2H என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமாவை மாற்று வழியில் மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளானவர்.

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அங்கு நடக்கும் சம்பவங்களை நாடே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா பொய்யா என்பதை பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் பார்க்கின்ற மக்கள் அதை உண்மை என்றே நம்புகிறார்கள்.

ஒரு பெண் அவர் தவறான எண்ணத்துடன் தன்னை தொட்டதாக சொல்கிறார். ஒரு நடிகர் அவரை வாடா போடா என்று ஒருமையில் பேசுகிறார். ஒரு சராசரி மனிதனுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலே அதை மிகப்பெரிய அவமானமா கருத வேண்டி இருக்கும் பொழுது, மக்களால் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் கூனிக் குறுகி நிற்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

விஜய் சேதுபதி சொன்னதற்காக தான் அங்கே போனேன் என்று சொல்கிறார். அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் தனக்கு ஏற்பட்டதாக எண்ணி மரியாதைக்குரிய விஜய் சேதுபதி அவர்கள் சேரன் அண்ணனை இதற்கு மேலும் அவமானப்பட வைக்காமல் வெளியே அழைத்து வந்து விட வேண்டும்.

இல்லாவிட்டால் என்னைப் போல் அவரால் பயனடைந்தவர்கள் மற்றும் அவர் மீது மரியாதை கொண்ட பலரையும் ஒருங்கிணைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை வெளியே அழைத்து வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

ஆகஸ்ட்டில் இருந்து செப்டம்பருக்கு தாவிய ‘காப்பான்’

ஆகஸ்ட்டில் இருந்து செப்டம்பருக்கு தாவிய ‘காப்பான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Mohanlals Kaappaan set to release on 20th Sept 2019லைகா தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காப்பான்.

இதில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி பலர் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் அன்றைய தினத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் வெளியாகவுள்ளதால் இப்படத்தை செப்டம்பர் 20ம் தேதிக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழில் ‘காப்பான்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘பந்தோபஸ்து’ என பெயரிலும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

Suriya and Mohanlals Kaappaan set to release on 20th Sept 2019

சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”

சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வெங்கட் ரெட்டி & சந்தீப் சாய் COGNIZANTல் சந்தித்தபோது, இருவருக்கும் சினிமா மீது ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது, ஆனால் வெங்கட் ரெட்டிக்கு நடிப்பிலும், சந்தீப் சாய்க்கு இயக்குனராவதிலும் ஆர்வம். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி, குறிப்பாக உலக சினிமாவைப் பற்றி அதிகம் பேசுவது வழக்கம். அந்த நேரத்தில் தான் சந்தீப் சாய் ஒரு தனித்துவமான உள்ளடக்கத்தை கொண்ட ஒரு யோசனையுடன் வந்தார். பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அவர்கள் இறுதியாக “யாரோ”வுக்குள் வந்தார்கள்.

எனவே சந்தீப் சாயின் திட்டம் COGNIZANT வேலையிலிருந்து முழுமையாக விலகி ஸ்கிரிப்ட்டில் முழு நேரமும் வேலை செய்வதாக இருந்தது. அதே நேரத்தில் வெங்கட் ரெட்டியிடம் திரைப்பட நடிப்புப் படிப்புகளைத் தொடரவும், அதற்கு இணையாக வெவ்வேறு எம்.என்.சி.களில் (சி.டி.எஸ், ஐ.பி.எம் மற்றும் அக்சென்ச்சர்) பணிபுரியும் எண்ணம் இருந்தது.

கதையை பற்றி வெங்கட் ரெட்டி கூறும்போது, “கதை சொல்லல் என்பது திரைப்படத் தயாரிப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்பதை நான் உணர்கிறேன். நிச்சயமாக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு ஆரோக்கியமான தயாரிப்பை அதிகப்படுத்தி வழங்குகிறார்கள். ஆனால் முடிவில் கதை எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை பற்றி தான் பேசப்படும். சந்தீப் சாய் இந்த கதையை விவரிக்கும் போது, நான் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறேன் என்ற எனது அடையாளத்தை உண்மையில் மறந்து, ஒரு ரசிகனாக அதை ரசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டத்தில் நான் இதை பெரிதுபடுத்தி சொல்வது போல தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிறைய முக்கியத்துவத்துடன் எழுதிய அவரது திறமை தான், கதையை மிகவும் சுவாரஸ்யப்படுத்தியது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளராக நான் உற்சாகமாகவும், ஒரு நடிகராக பதட்டமாகவும் இருக்கிறேன். ஏனெனில் சந்தீப் சாய் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நான் கருதுவதால் பதட்டமாக இருக்கிறது” என்றார்.

இயக்குனர் சந்தீப் சாய் கூறும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், கொலை மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை. ஒரு தனித்துவமான கதையுடன் சொல்லலுடன் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

சந்தீப் சாய் படத்தை பற்றி மேலும் கூறும்போது, “’யாரோ’ ஒரு தனிமையான நாயகனை பற்றியது. தொடர்ச்சியான நடக்கும் கொலைகளில் அவரை சிக்க வைக்க முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார். கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்கும் திறனை பற்றிய மிகப்பெரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

“யாரோ 2019ன் சிறந்த தமிழ் திரைப்படமாக இருக்கும் – நாங்கள் சவால் விடுகிறோம்” என இருவரும் புன்னகையுடன் முடிக்கிறார்கள்.

மெரினா புரட்சி: ஒரு மாபெரும் புரட்சியை ஆவணமாக பதிவு செய்ய முயற்சித்தது ஒரு குற்றமா..? இயக்குனர் எம்எஸ் ராஜு ..!

மெரினா புரட்சி: ஒரு மாபெரும் புரட்சியை ஆவணமாக பதிவு செய்ய முயற்சித்தது ஒரு குற்றமா..? இயக்குனர் எம்எஸ் ராஜு ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். அல்ருஃபியான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் தணிக்கை அதிகாரிகளால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பின் நீதிமன்ற கதவுகளை தட்டி ஒரு வழியாக சென்சார் (U) சான்றிதழ் பெற்றுள்ளது.. இந்தநிலையில் இந்த மெரினா புரட்சியில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நடிகர் பொன்வண்ணன், இயக்குனர் வசந்தபாலன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார், பத்திரிக்கை விமர்சகர்கள் கேபிள் சங்கர், ஆர்.எஸ்.அந்தணன், சமூக ஆர்வலர்கள் சரவணா ராஜேந்திரன், அருள்தாஸ், இந்தப்படத்தை வெளியிடும் ஜேசு.சுந்தரமாறன், தமிழியம் தலைவர் மா.சோ.விக்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “இந்த படத்தை ஒரு பெண் தயாரித்திருக்கிறார் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.. பிரெஞ்சு புரட்சி பற்றி எல்லாம் புத்தகத்தில் தான் படித்து அறிந்து கொண்டு இருக்கிறேன்.. ஆனால் தமிழகமெங்கும் நாம் வளர்க்கக்கூடிய ஒரு விலங்கினத்திற்காக இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதை பார்த்தபோது உண்மையிலேயே பிரமிப்பு தான் ஏற்பட்டது. ஆனால் இந்த மெரினா போராட்டத்தின் பின்னால் மிகமிக நுட்பமான அரசியல் ஒன்று ஒளிந்திருக்கிறது.. உண்மையை சொல்லப்போனால் தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகள் கிட்டத்தட்ட விடுபட்டுப் போன நிலையில், தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தையே அந்த சமயத்தில் முழுமையாக மாறப்போகிறது என எதிர்பார்த்த வேலையில் அப்படி நடைபெறாமல் போனது துரதிஷ்டமே.. இந்த போராட்டத்தை ஆரம்பித்தது வேண்டுமென்றால் காலத்தின் கையில் இருந்தது.. போராட்டத்தை முடிப்பது அரசாங்கத்தின் கைகளுக்குள் போய்விட்டது.. இந்த முடிந்துபோன நிகழ்வுகளை ஒருவர் படமாக எடுத்து மக்களுக்கு ஞாபகமூட்ட வருகிறார் என்றால் அரசாங்கம் அங்கும் தனது எதிர்ப்புக்கரங்களுடன் வரத்தான் செய்யும். இந்த படத்தை தடுப்பதற்கு முனையும். அதே அமைப்புதான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்கிற படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்து அதை மக்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதன் மூலம் மக்களின் சிந்தனையை மடைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள்.. ஒரு எளிய பெண்மணி தனது சொந்த செலவில் தன்னிடம் இருக்கும் காசை எல்லாம் போட்டு இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பது மெரினா புரட்சியை விட மிகப்பெரிய புரட்சி என்றே சொல்வேன்.. கடந்த இரண்டு வருடமாக போராடி வரும் இந்த படக்குழுவினரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இயக்குனரும் பத்திரிக்கையாளருமான கேபிள் சங்கர் பேசும்போது, “இந்த படத்தை பார்த்ததும் சோசியல் மீடியாக்களில் நிலவிவந்த ஒரு குற்றச்சாட்டுக்கு இதில் விடை சொல்லப்படவில்லையே என்கிற கேள்வி என் மனதில் தோன்ற அதை இயக்குனரிடமும் கேட்டேன்.. ஒரு போராட்டம் துவங்கிய முதல் நாள் பத்து பேர், அடுத்த நாள் ஆயிரம் பேர், அடுத்தநாள் லட்சக்கணக்கில் என மக்கள் மொத்தமாக ஒன்றுகூட அனுமதிக்கப்படுகிறார்கள்.. இந்த போராட்டக்களம் ரொம்பவே பாதுகாப்பாக இருக்கிறது என்கிற செய்தி பரப்பப்படுகிறது அதைத் தொடர்ந்து பெண்கள் பலர் குடும்பம் குடும்பமாக போராட்டத்துக்கு வருகிறார்கள். இதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. 5 பேர் 10 பேர் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினாலே அடித்து விரட்டும் போலீசாரும் அரசாங்கமும் இத்தனை பேரை ஒன்று கூட அனுமதி அளித்ததன் பின்னணியில் இருப்பது என்ன என்கிற விஷயத்திற்கு இதில் சொல்லப்படவில்லையே எனது இயக்குனரிடம் கேட்டேன்.

அவ்வளவு ஏன் அரசாங்கத்தின் ஆதரவில் தான் இந்த போராட்டம் நடைபெற்றது என்பது போன்ற ஒரு பேச்சும் இன்றும் இருக்கிறது.. அதேபோல ஒரு போராட்டம் வெற்றி பெறும்போது இதற்கு நான்தான் பொறுப்பு என்று ஒவ்வொருத்தரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வது ரொம்பவே அபத்தமான ஒன்று. இந்த படத்தை திரையிட்டு காட்டும்போது படம் பார்த்த ஒரு இயக்குனர் தன்னைப்பற்றி எதுவும் சொல்லவில்லை என்று கோபித்துக்கொண்டு எழுந்து போய்விட்டார்.. இந்த போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு சென்றதில் சோசியல் மீடியாவில் தன்னிச்சையாக எழுந்த மக்களின் உணர்வெழுச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. அதை குறை சொல்லவே முடியாது.. ஆனால் தயவுசெய்து எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம் என உரிமை கொண்டாட வேண்டாம்.. அது இனிவரும் காலத்தில் நியாயமான விஷயங்களுக்காக போராட நினைப்பவர்களை கூட முடக்கி விடும்.. இதுபோன்ற சரித்திரப் புகழ் வாய்ந்த போராட்டங்களை ஆவணப்படுத்த வேண்டும்.. அதே சமயம் அதில் நடந்த உண்மையான நிகழ்வுகளும் விடுபட்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

பத்திரிக்கையாளர் ‘வலைப்பேச்சு ‘ ஆர்.எஸ்.அந்தணன் பேசும்போது, “புதிய போராட்டங்கள் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.. அதேசமயம் தினந்தோறும் புரட்சி வெடிக்க வேண்டும் என்கிற அளவுக்கு புதிய பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து இன்னொரு எழுச்சியான போராட்டம் வருவதற்கு 50 வருடங்கள் ஆகிவிட்டன.. இங்கே தான் புரட்சி தமிழன், புரட்சிக் கலைஞர், புரட்சித்தளபதி இருக்கிறார்கள் .. ஆனால் ஒரு புரட்சியும் வெடிக்கவில்லை.. மக்கள் தன்னிச்சையாக திரண்டு நடத்திய புரட்சிதான் பெரும் புரட்சி. இந்த மெரினா புரட்சி படம் ஒரு புலனாய்வு சினிமா.. எது சரியான புலனாய்வு என்று தேர்வு செய்திருக்கிறார். இயக்குனர் எம்.எஸ்.ராஜ் இந்த படத்தை போட்டுக்காட்டி கருத்து கேட்டபோது இந்த படத்திற்குள் ஒரு வெடிகுண்டு இருக்கிறது.. நிச்சயமாக இந்த படத்திற்கு சென்சார் அனுமதி கிடைக்காது.. இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறினேன். இதற்கு என்னதான் வழி என்று என்னிடம் கேட்டார்.. சென்சார் ஆபீஸ் வாசலில் தீக்குளியுங்கள், உண்ணாவிரதம் இருங்கள்.. இந்த படத்தை இந்த மக்கள் பார்த்தாக வேண்டும்.. ஏனென்றால் அவ்வளவு விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றன என்று அவரிடம் சொன்னேன். அவர் உயர் நீதிமன்றம் வரை போராடி இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்கியுள்ளார் இந்தப் படம் உருவான நாட்களிலிருந்து எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நான் அறிவேன். உலகத்தமிழர்கள் பலர் அவருக்கு உதவி செய்துள்ளனர். இந்த போராட்டத்தில் இறுதியில் இது வெற்றிகரமாக நடந்து விடக்கூடாது என்று காய் நடத்தியவர்கள் யார் என்று அவரது புகைப்படத்துடன் ஆதாரத்துடன் துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.. இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட இந்த போராட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சித்தார்களா என படம் பார்க்கும் நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்.. அவர்களெல்லாம் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவாவது மக்கள் இந்த மெரினா புரட்சி படத்தை பார்த்தாக வேண்டும்” என்று கூறினார்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசும்போது, “நல்ல நோக்கத்தில் தொடங்குகிற போராட்டங்கள் கடைசி வரை அதே திசையில் பயணிக்குமா என்பது கேள்விக்குறி.. ஒரே நாளில் சில அமைப்புகள் மூலமாக இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைத் திரட்டி ஒரு போராட்டத்தை நடத்த முடிந்தது சாத்தியம் என்றால் இனி வரும் நாட்களில் இதுபோன்ற ஒரு போராட்டத்தை நடத்திவிட முடியுமா..? லட்சக்கணக்கானோரை ஒன்று திரட்டி ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினாரே..? அதே போன்ற ஒரு போராட்டத்தை இப்போது அவரால் நடத்த முடியுமா..? இந்தப் போராட்டத்தை தடுக்கவில்லை என்றால் அரசு கையாலாகாத்தனத்தோடு இருந்தது என்று சொல்லிவிட முடியாது.

இந்த போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து பெரும் கூட்டம் கூடிய நாள் வரை அரசு என்ன செய்தது என்பதை நாம் இப்போது ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.. எல்லா போராட்டங்களையும் ஊக்கப்படுத்துவதன் மூலம் சாதிய மத ரீதியாக நம்மை பிரிப்பதற்கான வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்கள்.. இந்த போராட்டத்தின்போது யாரோ சிலரால் போராட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் காண்டம் பாக்கெட் இருந்ததாக அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பல இளைஞர்கள் என்னிடம் தெரிவித்தனர்.. இது யாரை கொச்சைப்படுத்துவதற்காக யார் செய்த வேலை..? இந்த மெரினா போராட்டம் தன்னெழுச்சியான இளைஞர்கள் போராட்டமாக இருந்தாலும் இது ஒரு அரசியல் அமைப்பின் தலைமையின் கீழ் நடந்திருந்தால் மாபெரும் வெற்றி போராட்டமாக அதேசமயம் போராட்டத்தின் முடிவில் வன்முறை இல்லாமல் அமைதியாக முடிந்து இருக்கும் என்பது என் கருத்து. எந்த ஒரு போராட்டமும் அமைப்பு சார்ந்து அரசியல்ரீதியாக நிகழும்போதுதான் அது பெரிய வெற்றி பெறும்.. போராட்டத்தை தொடங்கி, பின் அதை முடிக்க தெரியாமல் தடுமாறும்போது அது மிகப்பெரிய பாதிப்பை தான் ஏற்படுத்தும் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது, “தற்கால இளைஞர்கள் பற்றி ஒருவிதமான குற்றச்சாட்டு இருந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த சென்னை வெள்ளப்பெருக்கின் போதும், ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற மெரினா போராட்டத்தின் போதும் இளைஞர்களின் எழுச்சி அவர்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. எப்போதுமே போராட்டத்தின் போது மகாத்மா காந்தி பாணியில் முடிவுகளை எடுக்க வேண்டும்.. ஒரு போராட்டத்திற்கு தற்காலிக வெற்றிகள் கிடைத்தாலே போதும், அதை எடுத்துக்கொண்டு அப்படியே போராட்டத்தில் இருந்து விலகி விட வேண்டும். மீண்டும் அதை நீடிக்க நினைத்தால் மிகப்பெரிய சேதாரம் ஏற்படும் இதைத்தான் மெரினா புரட்சி இதிலும் பார்க்க முடிகிறது” என்று கூறினார்.

இந்த படத்தை உலகமெங்கும் வெளியிட்டு, தமிழ் உணர்வாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டிருக்கும் ஜெ ஸ்டுடியோ ஜேசு.சுந்தரமாறன் பேசும்போது, “இந்த படத்தை நான் பலமுறை பார்த்து விட்டேன்.. வெளிநாட்டை பொருத்தவரை ஒரு போராட்டம் நடந்தது என்றால் அவற்றை ஆவணப்படுத்தி வைக்க மிகப்பெரிய முயற்சி எடுப்பார்கள்.. ஆனால் தமிழகத்தில் இவ்வளவு பெரிய ஒரு போராட்டம் நடைபெற்ற பெற்ற பின்னர் அதனை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஆவணப்படுத்தும் முயற்சி நடக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது.. அப்போது தான் இந்த மெரினா புரட்சி திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார் எம்எஸ்.ராஜ். அவர்கள் இவ்வளவு சிரமத்திற்கிடையே இந்த படத்தை உருவாக்கியபோது, என்னுடைய பங்களிப்பாக ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இந்த பட வெளியீட்டிற்காக தனியாக நிறுவனம் தொடங்கி உலக நாடுகளில் வெளியிட்டு வருகிறேன்.. இதற்கு எனக்கு உலகத் தமிழர்கள் பலரும் உதவி செய்கின்றனர் என்பதையும் இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் பேசும்போது, “லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மிக கண்ணியமாக போராட்டம் நடத்தி உலக அரங்கில் தமிழகத்தை தலைநிமிர செய்தார்கள்.. மிகச்சிறந்த இந்த போராட்டம் ஒரு அமைப்பின் கீழ் நடந்திருந்தால் போராட்டத்தின் இறுதி நாளில் நடைபெற்ற வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கும்.. ஒரு பெண் காவலரே ஒரு கர்ப்பிணி பெண்ணை தாக்கி உயிரிழக்க செய்த சம்பவம் நிகழாமல் போயிருக்கும்.. போராட்டம் நடந்த அத்தனை நாட்களும் பாதுகாப்பாக இருந்த போலீசார் இறுதிநாளில் இந்த போராட்டம் வெற்றி பெற்றதாக மாறிவிடக்கூடாது என்கிற அரசாங்கத்தின் உத்தரவால் கடுமையாக நடந்து கொண்டதை பார்க்க முடிந்தது.. இதன் பின்னணியில் உள்ள அரசியலை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.. இப்படித்தான் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு எதிராக நூறு நாட்கள் அமைதியாக போராட்டத்தில் கடைசி நாளன்று அரசாங்கத்தால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பலர் பலியாகினர். எந்த போராட்டமுமே வெற்றிபெற கூடாது என்பதே அரசின் நோக்கம். இந்த மெரினா புரட்சி திரைப்படம் அனைத்து மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்று கூறி வாழ்த்தினார்

படத்தின் இயக்குனர் எம்எஸ் ராஜு பேசும்போது, “இந்த போராட்டம் உருவாக காரணமாக இருந்த 18 பேரை வாழ்த்துவது மட்டுமே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அல்ல.. சிலர் அப்படி தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த போராட்டத்தை கடைசிவரை வெற்றிகரமாக நடத்திய 10 லட்சம் மக்களையும் கௌரவிக்கும் ஒரு நிகழ்வு தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருடைய உணர்வுகளும் அவர்களது பங்களிப்பும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.. இந்த படத்தை எடுத்து சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு நான் பட்ட போராட்டம் ஒரு வகை என்றால் இந்த விழாவை நடத்துவதற்கு அதைவிட இன்னும் போராடவேண்டியிருந்தது.

இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு விசாரணை கமிஷன் என்னையும் என் மனைவியையும் இந்த படத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நாங்கள் காட்டியிருக்கும் விஷயங்களுக்கு கைவசம் வைத்திருக்கும் ஆதாரங்களுடன் எங்களை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது… இன்னொரு பக்கம் இந்த படத்தில் பீட்டா பற்றி நாங்கள் கூறியுள்ளதற்காக எங்கள் மீது 100 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறது பீட்டா நிறுவனம். நானும் மற்ற இயக்குனர்கள் போல் கமர்சியலாக ஒரு படத்தை இயக்கிவிட்டு போய் இருக்கலாம் என்கிற எண்ணத்தை தான் இவையெல்லாம் ஏற்படுத்துகின்றன..

இந்த மெரினா புரட்சி ஆவணப்படுத்தப்பட வேண்டும் என நினைப்பது தவறா..? உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று பலரும் கேட்கின்றனர். இந்த போராட்டத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் யாருமே இறங்கவில்லை.. என்னை குறை சொல்பவர்கள் யாராவது ஒருவர் இதை செய்திருந்தால், நான் இந்த படத்தை எடுத்திருக்கவே மாட்டேன்.. ஒரு மாபெரும் புரட்சியை ஆவணமாக பதிவு செய்ய முயற்சித்தது ஒரு குற்றமா..? இந்த படத்தை நான் எடுக்க இன்னொரு காரணம் இந்த மெரீனா போராட்டத்தின் முடிவில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக ஹிப் ஹாப் ஆதி போலீசாருக்கே தெரியாத ஒரு கருத்தை சொல்கிறார்.. இன்னொரு தரப்பினர் நாங்கள்தான் உணவு அளித்து இந்த போராட்டத்தை நடத்தினோம் என்று சொல்கிறார்கள்.. இதெல்லாம் என்னை ஆச்சரியப்படுத்தின.. இதன் பின்னணி என்ன என்று புலனாய்வு செய்து அதில் மறைந்துள்ள உண்மைகளையும் சேர்த்துதான் இந்த படத்தை உருவாக்கி உள்ளேன்.. அதனாலேயே இந்த படத்தை வெளியிட விடாமல் முடியாமல் இவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். இந்த படத்தை உலகமெங்கும் திரு ஜேசு சுந்தரமாறன் வெளியிட முன் வந்ததற்கு, இப்படிப்பட்ட ஒரு மாபெரும் போராட்டம் வருங்கால சந்ததியினருக்கு தெரியாமல் போய்விட கூடாது என்கிற தமிழ் உணர்வு தான் காரணம்.. உலகின் பல நாடுகளில் இந்த படத்தை வெளியிட முடிந்த எங்களால் இந்தியாவில் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடுவதற்கு இவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது” என்று மனம் வெதும்பி கூறினார் இயக்குனர் எம்.எஸ்.ராஜு.

More Articles
Follows