தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமுத்திரக்கனியின் உதவியாளரும் நண்பருமான பாணி இயக்கியுள்ள படம் ராணி. இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் இரண்டு குழந்தைகள் நடித்துள்ளனர்.
அவர்களுக்கு இணையான பாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு பேசும்போது…
“புது இயக்குனர்கள் எல்லாம் எப்படி? இளையராஜாவை புக் செய்கிறார்கள் என தெரியவில்லை.
நானும் இளையராஜாவின் இசையில் என் படங்கள் உருவாக வேண்டும் என நினைப்பேன்.
ஆனால் அதற்கான கதையை நான் அமைக்க வேண்டும்.
கதை இவ்வளவுதானா? இதற்கு நான் இசையமைக்க வேண்டுமா? என இளையராஜா என்னை பார்த்து கேட்டு விடக் கூடாது.
ஒரு நல்ல கதையை உருவாக்கி அவரிடம் கால்ஷீட் கேட்க வேண்டும்” என தன் ஆதங்கதை கூறினார் பேரரசு.
விஜய் நடித்த திருப்பாச்சி, அஜித் நடித்த திருப்பதி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பேரரசு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.