தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மூடர் கூடம்’ படத்தில் நடித்து இயக்கி தயாரித்தவர் நவீன்.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதில் 2 விஜய்கள் இணைந்துள்ளனர். அதாவது ஒருவர் விஜய் ஆண்டனி. மற்றொருவர் அருண் விஜய்.
ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தின் பெயரான “அக்னிச் சிறகுகள்” என தலைப்பிட்டுள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் வெளியிட்டார்.