தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சினிமா பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று ஏப்ரல் 4ல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் மற்றும் நடிகர் புகழ், நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்..
நடிகர் புகழ் பேசியதாவது..
பத்திரிகையாளர்கள் என்றாலே ஒரு பயம்தான் எனக்கு, யாராவது ஏதாவது கேள்வி கேட்டுட்டா எனக்கு படபடன்னு வந்துரும் சும்மா அதுவும் மைக்க கொடுத்தாலே மயக்கம் வந்துரும்..
அப்படி இருக்க கவிதா அக்கா, தங்கம் நம்ம பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக ஒரு மருத்துவ முகாம் நடத்தணும்னு கூப்பிட்டாங்க சரிக்கா வரேன் என்றேன்.
ஏன்னா ஒரு விஷயத்தை மக்களிடம் எப்படி சேர்க்க வேண்டும் என்பதில் பத்திரிக்கையாளர்கள் மிகவும் போராடுகிறார்கள்.. நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
தற்பொழுது ரிலீசாகிய எனது அயோத்தி படத்தைக் கூட நல்ல முறையில் எழுதி இருந்தார்கள்.. ஆனால் யாருக்கும் என்னால் நன்றி கூற இயலவில்லை.. அதனால் இன்று எல்லோருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்..
என்னைப் போன்று வளர்ந்து வருபவர்களுக்கு துணை நிற்கிறீர்கள் அதற்கு மிகுந்த நன்றி.
அடுத்து ஆகஸ்ட் 16, 1947 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் அதற்கும் உங்களுடைய சப்போர்ட் தேவை.. அவர்களுக்கு என்றுமே ஒரு சகோதரனாய் இருப்பேன்.. மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்” எனக் கூறினார்.
CWC fame Actor Pugazh speech about Journalists