தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் அஜித்குமாரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.
அஜித் தொடர்பான செய்திகளையோ அறிக்கைகளையோ இவர்தான் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார்.
இந்த நிலையில், தற்போது அஜித்தின் பெயரில் சுரேஷ் சந்திரா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகிறது.
அந்த படத்தில்… ஒரு கழுதையுடன் சில மூட்டைகளை தங்கள் கைகளில் சுமந்து ஒரு தம்பதி செல்கின்றனர்.
சிலர் அந்த தம்பதியை கழுதை மேலே ஏற சொல்கின்றனர்.
சிலர் கழுதை பாவம் இறங்கி நடக்க சொல்கின்றனர். அதன் பின்னர் சிலர் அந்த தம்பதியை கழுதை மேலே ஏற சொல்கின்றனர்..
அதாவது ‘நாம் எதை செய்தாலும், அதை விமர்சிப்பவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். அதனால் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் நம் விருப்பத்துக்கு ஏற்ப வாழவேண்டும்’ என்ற நீதியை உணர்த்துகிறது அந்த புகைப்படம்.
இதற்கு கேப்ஷனாக, ‘இந்த குட்டி கதை, யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்காக.. அன்புடன் அஜித்’ என பதிவிட்டுள்ளார்.
Comment on social media by his manager on Ajith’s name
To whom so ever it may concern!
Unconditional love.
Ajith pic.twitter.com/v6c4cmB4f7— Suresh Chandra (@SureshChandraa) May 30, 2022