தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’ சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘எஸ்-3’ (சி-3) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹரி.
‘சிங்கம் 3’ படத்தின் வெற்றியை பாராட்டி ஹரிக்கு ஒரு காஸ்ட்லி காரையும் பரிசளித்தார் சூர்யா.
இதனையடுத்து இவர்கள் கூட்டணி ‘அருவா’ படம் மூலம் 6வது முறையாக இணைகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சூர்யா கதையில் சொன்ன மாற்றத்தாலும் அதனை ஹரி ஏற்க மறுத்து விட்டதாலும் ‘அருவா’ திடீரென டிராப் ஆனது.
அந்த சமயத்தில் தான் சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் ‘சூர்ரைப்போற்று’ படங்கள் ஓடிடியில் ரிலீஸ் என சூர்யா அறிவித்தார்.
“தியேட்டர்களில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்” என மறைமுக கண்டன அறிக்கை வெளியிட்டார் ஹரி.
இதனால் சூர்யா & ஹரி மோதல் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.
இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார் சூர்யா.
இதன் பின்னர் ஹரி தனது மச்சான் அருண் விஜய் நடிக்க ‘யானை’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வரும் 2021 கிறிஸ்மஸ் நாளில் ரீலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு.
எனவே தான் இயக்கிய ‘யானை’ படத்தை சூர்யா படத்துடன் மோத திட்டமிட்டு வருகிறாராம் ஹரி.
‘யானை’ படத்தின் கதை சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்..
Arun Vijay and Suriya films to clash on christmas day ?