தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன்பு “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு, ‛ழ’ கரத்துடன் போட்டோவை பதிவிட்டு, தமிழணங்கு என பதிவிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த நிலையில் ‘தமிழணங்கு’ டிசைன் குறித்து ரஹ்மான் குறித்து ஒருவர் வழக்கு போட்டுள்ளார்.
அதில்…
சென்னையில் வசிப்பவர் முத்து ரமேஷ். அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகியான இவர், ‘ஆன்லைன்’ வாயிலாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறார்.
இந்த புகாரில்…
“உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி, சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழறிஞர்கள் பலர், தமிழன்னை படங்களை அழகாக, தெய்வமாக வெளியிட்டுள்ளனர்.
அவற்றில், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற நுால்கள், தமிழன்னையின் கரங்களில் செங்கோல்களாய் காட்சி அளிக்கின்றன.
ஆனால், இசையமைப்பாளர் ரஹ்மான், தலைவிரி கோலத்துடன் இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இது, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல்.
தமிழர்கள் தெய்வமாக வழிபடும், தமிழன்னையின் கொச்சையான படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் ரஹ்மான் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
Case filed against AR Rahman over Tamizhannai post issue