தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை கொண்டாடி நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.
இந்த விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது…
பத்தாவது முறை பாதம் தடுக்கி விழுந்தவனை பூமித்தாய் சொன்னாள் ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ என ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்று உள்ளது.
எப்போது வெற்றி விழா நடந்தாலும் இந்தக் கவிதை ஞாபகம் வரும். இந்த வெற்றிக்குக் காரணம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு நன்றி. நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்றொரு கவிதை உள்ளது.
அது போல் நினைவில் அன்புள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்பது போலானவன் மாரி. அவன் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எல்லாவற்றிருக்கும் காரணமாக இருந்த ஏ ஆர் ரஹ்மான் சாருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகர் விஜயகுமார் பேசியதாவது…
இந்த படத்தில் எனக்கு டயலாக்கே இல்லை. இப்படி ஒரு படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். மாரி செல்வராஜ் இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.
பாஞ்சாலங்குறிச்சி படத்தில் நடித்த போது பாரதிராஜாவிடம் வடிவேலுவை இந்த படத்தில் போடுங்கள் என்றேன். பாரதிராஜாவையே அந்தப்படத்தில் மிரட்டி விட்டார். அவரை இந்த படத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. உதயநிதி இந்தப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக நடித்துள்ளேன்.
இடைவேளைக்கு முன்பு ஒரு சண்டைக் காட்சி இருக்கும். நான் எத்தனையோ படங்களில் நடித்து விட்டேன். ஆனால் உதயநிதி நடித்த சண்டைக்காட்சி போல எந்த படத்திலும் பார்க்கவில்லை.
‘மாமன்னன்’ படம் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
நடிகர் லால் பேசியதாவது…
நன்றி சொல்வதா வாழ்த்து சொல்வதா தெரியவில்லை. மாமன்னன் சிறப்பான படம். பெரிய வெற்றிப்படம். முதலில் நான் நன்றியை என்னைத் தமிழில் அறிமுகப்படுத்திய சித்திக் சார் வெற்றி படைப்பைத் தந்த லிங்குசாமிக்கு சாருக்கு சொல்லிக்கொள்கிறேன்.
மாரியின் இரண்டு படத்தில் நடிக்க அதனால் தான் வாய்ப்பு கிடைத்தது. மற்றொரு மொழியில் நடிப்பதே பெரிய விஷயம் அதிலும் சி எம் ஆக நடிப்பது மகிழ்ச்சி. உதய் சார் கீர்த்தி எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
Bharathiraja surprised by Vadivelu act says Vijayakumar