‘பாரதி கண்ணமா’ சீரியல் நடிகை விஜயலட்சுமி காலமானார்

‘பாரதி கண்ணமா’ சீரியல் நடிகை விஜயலட்சுமி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1976-ம் ஆண்டு வெளியான ‘ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி.

1980-களில் நடிகர்கள் ரஜினி, கமல் படங்களில் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட சின்னத்திரைத் தொடர்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் வெளியான ‘பாரதி கண்ணம்மா’, ‘சரவணன் மீனாட்சி’ சீரியல்களில் நடித்து கவனம் பெற்றார் விஜயலட்சுமி.

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார் விஜயலட்சுமி. அதனால் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.

அண்மையில், பாத்ரூமுக்கு சென்றபோது வழுக்கி விழுந்த விஜயலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் தான் வீடு திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று இரவு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.அவருக்கு வயது 70.

மேலும், இவரது மறைவுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

bharathi kannamma serial actrees vijayalakshmi passed away

மோடியின் டிஜிட்டல் இந்தியாவை கலாய்க்கும் யோகி பாபு

மோடியின் டிஜிட்டல் இந்தியாவை கலாய்க்கும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன் 2’.

இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இயக்கம் மட்டுமின்றி, விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் படத்தை தயாரிக்க, இவரே இசையும் அமைக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.

‘பிச்சைக்காரன் 2’, மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தார்கள்.

இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸினீக் பீக் தற்போது வெளியாகி உள்ளது. அதில் யோகி பாபு மோடியின் டிஜிட்டல் இந்தியாவை கலாய்க்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் அக்காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pichaikkaran 2 official Sneak Peek

Yogi Babu is mocking Modi’s Digital India

உலகையே எதிர்ப்பார்க்க வைத்த ‘அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி

உலகையே எதிர்ப்பார்க்க வைத்த ‘அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் ‘அவதார்’.

இப்படம் இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது.

அந்த அளவுக்கு அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் அமைந்திருந்தன.

ரூ.1,000 கோடி செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

அவதார் படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார் – தி வே ஆப் வாட்டர்’ படம் உலக அளவில் கடந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது.

உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

ரூ.3 ஆயிரம் கோடியில் உருவான ‘அவதார் – தி வே ஆப் வாட்டர்’ படம் உலகம் முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்தது.

இந்நிலையில், ‘அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’ படம் ஜூன் 7ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மேலும், கடந்த ஏப்ரல் 13-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அந்த விழாவில் ‘அவதார் – தி வே ஆப் வாட்டர்’ படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெகட் பிரிவில் விருது வழங்கப்பட்டது.

ஜோ லிட்டேரி, ரிச்சர்ட் பனேகம், எரிக் செயிண்டன், டேனியல் பேரட் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார் - தி வே ஆப் வாட்டர்

avatar – The Way of Water releasing on june 7 in ott

கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுக்கும் கிரண்.. கலாய்க்கும் நெட்டிசன்கள் !

கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுக்கும் கிரண்.. கலாய்க்கும் நெட்டிசன்கள் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கையில் ஒயின் கிளாஸ் உடன் கவர்ச்சியாக கிரண் பதிவிட்ட சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடை விடுமுறையை கொண்டாட கோவா விற்கு சென்ற கிரண் கருப்பு நிற கவுனை அணிந்து கொண்டு கையில் ஒயின் கிளாஸ் உடன் உள்ளார்.

ஒட்டு மொத்த தொடை அழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

மேலும் மோசமான கமெண்ட்டுகளால் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மீண்டும் எப்போ நிர்வாண புகைப்படம் போடுவீங்க?

உல்லு வெப் சீரிசில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது போன்ற கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Kiran posing with a wine bottle in her hand

கலகத் தலைவனுக்கு அப்புறம் என்ன செய்றதுன்னு புரியல – நடிகர் ஆரவ்

கலகத் தலைவனுக்கு அப்புறம் என்ன செய்றதுன்னு புரியல – நடிகர் ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் ஆரவ் பேசியதாவது…

“இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்த ஆஹாவுக்கு நன்றி. ‘கலகத் தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த வாய்ப்பு சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஆக வந்தது.

தயாள் சார் என்னிடம் கதை சொன்னதும், ‘எப்பொழுது ஷூட்டிங்?’ என்று கேட்டேன். ‘அடுத்த வாரம்’ என்றார். தமிழ் சினிமாவில் பொதுவாக கதை சொல்லி படப்பிடிப்பு ஆரம்பிக்க இரண்டு மாதங்கள் ஆவது ஆகும்.

ஆனால், இவர் சொன்னது போலவே அடுத்த வாரத்தில் படப்பிடிப்புக்கு சென்று விட்டார். 25 நாட்களில் படப்பிடிப்பு முடித்து விடுவோம் என்று சொல்லி 21 நாட்களிலேயே முடித்திருக்கிறார்.

டப்பிங்கில் பார்க்கும்பொழுது படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், விவேக், யாசர் என இவர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. தொழில்நுட்ப குழு அனைவரும் சிறப்பாக தங்கள் பணியை கொடுத்துள்ளனர். நீங்கள் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

இதன் பின்பு படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

I don’t know what to do after Kalaga Thalaivan – actor Aarav

‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஸ்பாட் எங்களுக்கு ரீயூனியன் தான் – சந்தோஷ் பிரதாப்

‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஸ்பாட் எங்களுக்கு ரீயூனியன் தான் – சந்தோஷ் பிரதாப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…

“நேற்றுதான் ‘கொன்றால் பாவம்’ படத்திற்காக உங்கள் அனைவரையும் சந்தித்தது போல உள்ளது. இவ்வளவு சீக்கிரத்தில் மீண்டும் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.

குழந்தைகளுக்கு எல்லாம் எப்போது பள்ளி விடுமுறை முடியும், நண்பர்களை சந்திப்போம் என்ற ஏக்கம் இருக்கும்.

அது போலதான் எனக்கு இந்த டீமும். எங்களுக்குள் இருந்த நட்பு மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. நண்பர்களாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த அதே சமயத்தில் வேலையும் செய்தோம்.

என்னுடைய ‘கதிர்’ என்ற திரைப்படம் தியேட்டருக்கு வந்து பிறகு ஓடிடிக்காக நாங்கள் போராடிக் கொண்டிருந்த பொழுது ஆஹா எங்களுக்கு உதவியது. அதற்கு நன்றி! இந்த படத்திலும் தயாரிப்பு வகையில் எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை.

நாங்கள் அனைவரும் நண்பர்கள் ரீயூனியன் செய்தது போல தான் இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

‘கொன்றால் பாவம்’ படத்தை போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள் என வேண்டுகோள் வைக்கிறோம்” என்றார்.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

The ‘Maruti Nagar Police Station’ movie is a reunion for us – Santhosh Prathap

More Articles
Follows