தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுமே இந்தியளிவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இப்படத்தின் தொடர்ச்சி இனி வெளியாகுமா? என ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அது குறித்த சந்தோஷமான தகவல்கள் வந்துள்ளது.
அந்த படத்தில் இடம் பெற்ற ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர் மற்றும் சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டரை வைத்து 3 பாகங்களை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமௌலி.
சிவகாமியின் சிறுவயது சாகசம், திருமணம், மற்றும் அவர் சிறுவயதிலேயே கலந்து கொண்ட போர் ஆகியவை குறித்து திரைப்படமாக இயக்கவுள்ளார்.
ஆனால் இந்த படம் தியேட்டரில் வெளியாகாது என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக இந்த படங்களை ராஜமெளலி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகாமி மற்றும் கட்டப்பா கேரக்டர்களில் ஏற்கனவே நடித்த ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் நடிக்கவுள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
இந்த படத்தை ராஜமெளலியுடன் தேவகட்டா என்பவரும் இணைந்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.