PUBG பட ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை வெளியிடும் ஆர்யா

PUBG பட ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை வெளியிடும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aryaவிஜய் ஸ்ரீ ஜி இயக்கும் பப்ஜி – பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை விஜயதசமி அன்று நடிகர் ஆர்யா (26-10-2020 -திங்கள் அன்று )மாலை 6:00 மணிக்கு வெளியிடுகிறார்.

தாதா 87 வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா,நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், அனித்ரா, ஆராத்யா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் பொல்லாத உலகின் பயங்கர கேம் படத்தில் லியாண்டர் மார்ட்டி இசையமைப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி, பாடிய ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை விஜயதசமி 26-10-2020 அன்று மாலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார்.

இப்படத்தின் பாடல்களை
இசையில் வெளியீட்டில் தனி டிரெண்ட்டை ஏற்ப்படுத்திவரும் “டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது

பொங்கல் அன்று உலகமெங்கும் வெளியிடப்படும் இப்படத்தின் இசை தீபாவளியன்று வெளியாகிறது.

பொல்லாத உலகில் பயங்கர கேம்( PUBG) படம் தீபாவளி சரவெடியுடன் ஆரம்பித்து (இசை, ட்ரெய்லர்) பொங்கலின் போது கரும்பு சுவையுடன் (திரையரங்குகளில்) வெளியாக உள்ளது.

Arya to release promo song from Director Vijay Sri G’s PUBG

தளபதி 65 படத்திலிருந்து முருகதாஸ் விலகல்..? விஜய் ரசிகர்கள் அப்செட்

தளபதி 65 படத்திலிருந்து முருகதாஸ் விலகல்..? விஜய் ரசிகர்கள் அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ar murugadossவிஜய்க்கு ஹிட் படங்கள் லிஸ்ட் பெரிதாக இருந்தாலும் அதில் நிச்சயம் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய திரைப்படங்கள் நிச்சயம் இடம்பெறும்.

விஜய்யின் இந்த 3 படங்களையும் இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தற்போது தளபதி 65 படத்திற்காக இவர்கள் இருவரும் இணையவுள்ளனர். இந்த படத்தை பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

எனவே ரசிகர்கள் இந்த படத்தின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இது தொடர்பான செய்திகளை பலமுறை பார்த்துவிட்டோம்.

ஆனால் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகளை இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்க விருப்பமில்லாமல் விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை செய்ய சொன்னதாகவும் அதில் இயக்குனருக்கு உடன்பாடு இல்லை என்பதால் இந்த விலகல் என கூறப்படுகிறது.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டும் தான் எது உண்மை என்பது தெரியவரும். எனவே காத்திருப்போம்.

Director AR Murugadoss walks out of Thalapathy 65 ?

பேப்பர் ராக்கெட் செய்து ‘சூரரைப் போற்று’ சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யா

பேப்பர் ராக்கெட் செய்து ‘சூரரைப் போற்று’ சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தனர்.

ஆனால் இந்த படத்திற்கு விமானப்படை தரப்பிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் வருவது தாமதமானது.

இதனையடுத்து ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தள்ளிபோகும் என அறிவித்து அது தொடர்பான தனது வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டார் சூர்யா.

இதன்பின்னர் ‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என அறிவித்தனர்.

எனவே ட்ரெய்லர் மற்றும் இதர பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மேலும் தீபாவளி வெளியீடாக ‘சூரரைப் போற்று’ படத்தை ரிலீஸ் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு ‘சூரரைப் போற்று’ டிரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பை பேப்பர் ராக்கெட் செய்துக் கொண்டே ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார் சூர்யா.

Actor Suriya announces when ‘Soorarai Pottru’ trailer would be out

பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு..; விஜய் கட்டளை

பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு..; விஜய் கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார்.

இந்த சந்திப்பில்… விஜய் மக்கள் இயக்கத்தின் வலுப்படுத்துவது பற்றியும் அதன் மூலம் பல நலத்திட்டங்கள் செய்வது பற்றியும் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தினாராம்.

அப்போது தேவையற்ற போஸ்டர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினாராம்.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ‘நாளைய முதல்வர் விஜய்’ என்ற போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் நேரத்தில் அரசியல் சக்தியாக மாறும் என்று பேசியிருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Thalapathy Vijay met VMI members in his residence

ஆயுதபூஜையன்று ஆன்மிக அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ‘அண்ணாத்த’..?

ஆயுதபூஜையன்று ஆன்மிக அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ‘அண்ணாத்த’..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகடந்த 25 வருடங்களாகவே ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டாலும் 2017 டிசம்பர் 31ஆம் தேதி தான் தன் அரசியல் வருகையை உறுதி செய்தார் சூப்பர் ஸ்டார்.

அதன்பின்னர் 2 ஆண்டுகளாக அரசியல் கட்சி பற்றி பேசவில்லை.

ஆனாலும் ரஜினி மக்கள் மன்ற பணிகள் & முக்கிய ஆலோசனைகளையும் செய்து வந்துள்ளார் ரஜினி.

இந்தாண்டு மார்ச் 12ல் அரசியல் குறித்த தனது தொலைநோக்கு பார்வையை விளக்கினார்.

அப்போது முதல்வர் பதவிக்கு திறமையான ஒருவரை முன்னிறுத்தி ஆட்சி மற்றும் கட்சியை வழிநடத்துவேன் என்றார்.

தனக்கு முதல்வராகும் எண்ணம் இல்லை. சட்டசபையில் தான் அமர்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றார்.

இது அவருடைய ரசிகர்களுக்கு கசந்தாலும் முதல்வர் வேட்பாளர் ரஜினி இல்லை என்பதால் அரசியல் எதிரிகளுக்கு இனிப்பான செய்தியாக மாறியது.

ரஜினி அறிவித்த சில தினங்களில் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவ ஆரம்பித்து, 7 மாதங்களுக்கு ஊரடங்கு நீடிக்கிறது.

இதனால் ரஜினி கட்சி அறிவிப்பு & கட்சி மாநாடு உள்ளிட்டவைகள் தாமதமாகிப் போனது.

எனவே ரஜினி நிஜமாகவே கட்சி ஆரம்பிப்பாரா? என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே உருவானது.

ஆனால் கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கினாலும் கட்சி பணிகளை கனகச்சிதமாக செய்துள்ளாராம் ரஜினிகாந்த்.

அப்போது தனக்கே உரிய பாணியில் 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

அதன்படி வரும் 26-ந்தேதி விஜயதசமி நாளில் கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடலாம் என்ற பரபரப்பு தகவல் உலா வருகிறது.

Will Rajinikanth announce political party in vijayadasami?

என் இசையால் உயிர் கொடுப்பேன் – இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி

என் இசையால் உயிர் கொடுப்பேன் – இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manoj Chinnaswamyஒரே வாரத்தில் ஒரு மில்லியனை கடந்த இசை ஆல்பம் – பாராட்டு மழையில் இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி

இசை ஆல்பம் மூலம் கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த இளம் இசையமைப்பாளர்

தமிழகத்தில் இசை ஆல்பங்கள் மீண்டும் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில், ‘ஹார்ட் பிரேக்கர்’ என்ற இசை ஆல்பம்
இளைஞர்களின் சமீபத்திய பேவரைட் ஆல்பமாக வரவேற்பை பெற்றுள்ளது. இளம் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி
இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை நிறுவனமான திங்க் மியூசிக் தயாரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான ‘ஹார்ட் பிரேக்கர்’ குறுகிய நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது
இசை உலகையே வியப்பில் ஆழ்த்தியிருப்பதோடு, இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமியின் மீது கோலிவுட்டின் பார்வையையும் பட
வைத்துள்ளது.

கோயமுத்தூரை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த மனோஜ் சின்னசாமி, ஆரம்பத்தில் இசை ரசிகராக இருந்தாலும், தனக்கு
இருக்கும் இசை ஆர்வத்தினால், வெறும் ரசிகராக மட்டும் இன்றி இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஐடி
துறையில் இருந்து இசைத்துறைக்கு வந்திருக்கிறார்.

ஏதோ, பாடல்கள் கேட்டும், இசையமைத்தோம், என்று இல்லாமல் முறைப்படி சங்கீதம் படித்தவர், சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான்
இசைப் பள்ளியில் முறைப்படி இசையை படித்து பட்டம் பெற்றார். பிறகு பல்வேறு விளம்பர படங்களுக்கு இசையமைத்ததோடு, ‘முத்தழகி’ உள்ளிட்ட இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

மனோஜ் சின்னசாமியின் இசை ஆல்பங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை கவனித்த திங்க் மியூசிக் நிறுவனம் அவருக்கு
வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அதன் மூலம் திங்க் மியூசிக் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘ஹார்ட் பிரேக்கர்’ இசை ஆல்பத்திற்கு
மனோஜ் சின்னசாமி இசையமைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் ஆகியோரது வரிசையில், சிறப்பான மெட்டுக்களோடு, இசையில் பல்வேறு வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கும் மனோஜ் சின்னசாமி, மெலோடி பாடல்களை வெஸ்ட்டன் டைப்பில் கொடுப்பதில் வல்லவராக உள்ளார். அவரது இந்த தனித்துவம் தான் தற்போது அவர் மீது கோலிவுட் பார்வையை பட வைத்துள்ளது.

இசைத்துறையில் நிச்சயம் சாதித்து காட்ட வேண்டும், என்ற நம்பிக்கையோடு வலம் வரும் மனோஜ் சின்னசாமி, பாட்டுக்கு மெட்டு
அல்லது மெட்டுக்கு பாட்டு, என்று எந்த முறையிலும் பணியாற்றக் கூடிய திறமை படைத்தவராக இருப்பதோடு, ஒரு திரைப்படத்தை
முழுவதுமாக எடுத்துவிட்டு, பிறகு அதற்கு இசையமைக்க வேண்டும் என்றால் கூட, தனது இசை மூலம் அதற்கு உயிர் கொடுக்கும்
திறமை படைத்தவராக திகழ்கிறார்.

தற்போது அவரது ஹார்ட் பிரேக்கர் இசை ஆல்பத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்ட பல ஜாம்பவான்களிடம்
பாராட்டு பெற்று வரும் இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி, விரைவில் கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி
பாராட்டு பெறப் போவது உறுதி.

Young Music Director Manoj Chinnaswamy – Enlivening souls through music

More Articles
Follows