விக்ரம் மருமகனை கழட்டி விட்ட இயக்குனர் இமயம்..; கை கொடுத்தார் ‘PUBG’ டைரக்டர் விஜய்ஸ்ரீ

விக்ரம் மருமகனை கழட்டி விட்ட இயக்குனர் இமயம்..; கை கொடுத்தார் ‘PUBG’ டைரக்டர் விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடிகர்களின் வாரிசுகளுக்கோ அல்லது அவர்களின் உறவினர்களுக்கோ வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடும்.

அப்படி கிடைத்த வாய்ப்பு சரியாக பயனளிக்க அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் திறமை என்ற ஒன்றும் கூடவே பயணித்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்கை அடைய முடியும்.

அப்படியாக, தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்க அறிமுக நாயகனாக 2018ல் களமிறமிறங்கியிருக்கிறார் நாயகன் அர்ஜுமன்.

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர் விக்ரமின் சகோதரி அனிதா வின் மகன் தான் இந்த அர்ஜுமன்…

தொடர்ந்து 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் இமயம், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி படத்தை கைவிட, பிறகு, பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தில் அர்ஜுமனை நாயகனாக களம் இறக்கினார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

வீட்டில் முடங்கி இருக்கும் நடிகர்களுக்கும், பல முன்னனி நடிகர்களால் கைவிடப்பட்ட துணை நடிகர்களுக்கும் தொடர்ந்து வாய்பளித்து வரும் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி, அர்ஜுமனுக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளார்.

இந்த படத்தின் மூலமாகவே அர்ஜுமன், நாயகனாக தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டப்படவிருக்கிறார்.

பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறதாம்…

விரைவில் இசையும் , படத்தின் டீசர் வெளியிடப்படும் எனவும், இது தமிழ் சினிமாவில் யாரும் தொடாத ஒரு கதை எனவும் இயக்குனர் தரப்பு கூறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

Vikram’s nephew Arjuman to debut in Director Vijay Sri’s PUBG

arjuman in pubg

மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் ‘கல்தா’ ஹீரோ சிவ நிஷாந்த் !

மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் ‘கல்தா’ ஹீரோ சிவ நிஷாந்த் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shiva nishanthஇயக்குநர் ஹரி உத்தாரா இயக்கத்தில் I Creations தயாரிப்பில் வெளிவந்த “கல்தா” படம் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகர் சிவநிஷாந்த்.

சமூகநோக்கத்தோடு அரசியல் படமாக உருவாகியிருந்த இப்படத்தில் நடிகர் சிவநிஷாந்த் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

எல்லா இளம் நடிகர்களும் தங்களுடைய அறிமுகபடமாக காதல் படங்களில் நடிப்பதையே விரும்புவார்கள்.

ஆனால் அதிலும் வித்தியாசமாக இவர் சமூகத்திற்கான அரசியல் படத்தில் அறிமுகமானார். படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்களும் ரசிகர்களும் பாராட்டியிருந்தார்கள்.

முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்போது இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கத்தில் PGP Enterprisers தயாரிக்கும் “துப்பாக்கியின் கதை” படத்தில் ஒரு வித்தியாசாமான பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இது தவிர மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் தயாரிப்பில் ஒரு படத்திலும் மற்றுமொரு பெயரிடப்படாத புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

திரையுலக கலைஞர்களால் இளம் நெஞ்சங்களை ஈர்க்கும் வசீகரத்துடன், நடிப்பு திறமை கொண்டவர் எனும் பாராட்டையும் பெற்றுள்ள இவர், திரையுலகில் முதல் படத்திலேயே பாராட்டு பெற்று, உடனடியாக அடுத்தடுத்து, முக்கியமான படங்களில் நடிக்கும், இளம் நடிகராக வளர்ந்து வருகிறார்.

ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதோடு, வித்தியாசாமான கதாப்பாத்திரங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தரமான நல்ல படங்களை தருவதே எனது குறிக்கோள்.

ஒரு நட்சத்திரமாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல நடிகர் என்றும் பெயரெடுக்க வேண்டும் அதுவே தனது ஆசை எனக் கூறியுள்ளார்.

Actor Shiva Nishanth next movie updates

விமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்

விமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதிபயங்கரமான துப்பாக்கி சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களை பற்றிய நான் லீனியர் கதையைக் கொண்டது பப்கோவா வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை.

ஒரு கதை கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை பற்றியது, மற்றொன்று உயிர் பிழைத்த ஒருவர் காணாமல் போன தனது காதலியை தேடும் கதை.

பிரபல நடிகை விமலா ராமன் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையா, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘பப்கோவா’ வெப் சீரிஸ் லக்ஷ்மி நாராயணா இயக்க, கார்த்தி கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.

இசை: சாந்தன்
எடிட்டர்: அஸ்வின் இக்னாஷியஸ்
கலை இயக்குனர்: சிவ குமார்

வரும் 27 முதல் ஜீ5 தளத்தில் ‘பப்கோவா’ ஒளிபரப்பாகிறது

Vijay Sethupathi released Vimala Raman’s PUBGOA teaser

கன்னடத்தில் ‘கடுகு’ ரீமேக்..; விஜய்மில்டன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ஜோடியாக அஞ்சலி.!

கன்னடத்தில் ‘கடுகு’ ரீமேக்..; விஜய்மில்டன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ஜோடியாக அஞ்சலி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadugu remake in kannada‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.

அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார்.

‘கடுகு’ ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தைத் தமிழில் ‘கோலிசோடா’, ‘கடுகு’ போன்ற படங்களைத் தயாரித்த ரஃப்நோட் நிறுவனம் , கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார்.

பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். Pro ஜான்சன்.

இப்படத்தின் பூஜை பெங்களூரில் இன்று நடந்தது. வரும் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பு பெங்களூரில் சான்ஸ்க்ரிட் ( Sanskrit collage ) கல்லூரியில் ஆரம்பமாகிறது.

படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

Director Vijay Milton’s next with Shiva Rajkumar starts with pooja today

நவம்பர் 27ல் ரிலீசாகவுள்ள கன்னி ராசி & காவல்துறை உங்கள் நண்பன் & அல்டி… ஒரு பார்வை

நவம்பர் 27ல் ரிலீசாகவுள்ள கன்னி ராசி & காவல்துறை உங்கள் நண்பன் & அல்டி… ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

altiநவம்பர் 27ல் ரிலீசாகவுள்ள கன்னி ராசி & காவல்துறை உங்கள் நண்பன் & அல்டி ஆகிய படங்கள் பற்றிய ஒரு பார்வை…

1. கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கன்னி ராசி’.

இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இதில் விமல், வரலட்சுமி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

2. ஆர்.டி.எம் இயக்கியுள்ள ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட வெளியீட்டு உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்றியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெற்றிமாறனும் வெளியீட்டு பணியில் இணைந்துள்ளார்.

3. எம்ஜே.உசைன் இயக்கத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நாயகனாக அறிமுகமாகும் மர்ம திரில்லர் திரைப்படம் ‘அல்டி’.

இதில் கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் செண்ட்ராயன், மாரிமுத்து, ராபர்ட், ‘பசங்க’ சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இதற்கு ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக வில்சி பணியாற்றியுள்ளார்.

Kanni Rasi, KUN and Alti to release on 27 th november

என்னுடன் இருப்பவர்களை இருக்காதே என கூறலாம்… ஆனால் என்னுடன் பயணிக்க பலர் ரெடி.. ; விஜய் மீது எஸ்ஏசி தாக்கு

என்னுடன் இருப்பவர்களை இருக்காதே என கூறலாம்… ஆனால் என்னுடன் பயணிக்க பலர் ரெடி.. ; விஜய் மீது எஸ்ஏசி தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAC Vijayசில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இந்த கட்சியின் மாநிலத் தலைவராக R.K.ராஜா என்னும் பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியானது.

அதில் தன்னுடைய ரசிகர் யாரும் அதில் சேர வேண்டாம் என தெரிவித்தார் விஜய்.

இந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார் பத்மநாபன்.

இந்த நிலையில் சென்னையில் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய 101-வது நாள் கொரோனா உதவி நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அவர் பேசியதாவது..

“அரசியல்வாதிகள் மக்கள் சேவகர்கள். ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் மறந்து விடுகிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தை சுரண்டும் அவர்களுக்கு ஏன் தண்டனைகள் வழங்கப்படவில்லை.

நல்ல எண்ணத்தில் தான் ஒரு பாதையை உருவாக்கி உள்ளேன். சமூக உணர்வுள்ளவர்கள் வாருங்கள்.

உங்களுக்கு நான் அடித்தளமாக இருப்பேனே தவிர தலைவனாக இருக்க மாட்டேன்.

எப்போதும் நான் ஆளும் கட்சியுடன் இருக்க மாட்டேன். எதிர்க் கட்சியுடன் தான் இருப்பேன். அப்போது தான் எதிர்நீச்சல் போட முடியும்.

என்னுடன் இருப்பவர்களை இருக்காதே என (விஜய்) கூறலாம். ஆனால் என்னுடன் பயணிக்க பலர் தயாராக இருக்கிறார்கள்.

எல்லோரும் சுயநலமாக மாறிவிட்டனர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நான் தற்போது தனி மரமாக நிற்கிறேன். இது வேரூன்றி நின்ற மரம்.

இன்றைய தொண்டன் நாளைய தலைவன்.. இப்போது தொண்டு செய்தால் நாளை தலைவன் ஆவார்கள்.”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

SAC recent speech at Kalappai Makkal Iyakkam event

More Articles
Follows