தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் நடிகர் அருண்விஜய்.
அவருடன் அவரது மனைவி ஆர்த்தியும் உடனிருந்தார்.
சாமி தரிசனம் முடித்துவிட்டு வந்த அவரை வழக்கம்போல செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் பேசியதாவது…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நான் அடிக்கடி வருவேன்.
அப்போது இங்குள்ள யானை ருக்குவிடம் ஆசி வாங்குவேன். ஆனால் இப்போது அந்த யானை இல்லாதது வருத்தமாக உள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘தடம்’ என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
அதனையடுத்து மணிரத்தினம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடிக்க உள்ளேன்.
அதுபோல் பிரபாசுடன் சாகோ என்ற படத்திலும் நான் நடிக்கிறேன்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் நலிந்த நடிகர்கள் பயன் பெறுவார்கள்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.”
இவ்வாறு அருண்விஜய் கூறினார்.
Arun Vijay talks about Rajini and Kamals Political entry