தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையை தொடங்கினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை அவர் மேற்கொண்டுவருகிறார்.
கேரளா, கர்நாடகம், ஆந்திரா வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர் தற்போது ராஜஸ்தானில் நடைபயணம் செய்துக் கொண்டு வருகிறார்.
ஓரிரு தினங்களுக்கு முன் யாத்திரையின் 100வது நாளை நிறைவு செய்தார்.
இந்த பாரத ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் யாத்திரையில் தான் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.
அதன்படி இன்று டிசம்பர் 24ல் தன் ட்விட்டரில்…
“பாகுபாடு இல்லை உயர்வு தாழ்வு இல்லை பிறப்பில் பெருமை இல்லை என இல்லைகளைப் பிரச்சாரம் செய்ததோடு, சமச்சமூகத்தில் பொன்னுலகம் உண்டு என்ற நம்பிக்கையையும் விதைத்த பெரியாரின் நினைவுநாளில், பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து அவருக்கு வணக்கம் செய்கிறேன்.
மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் கமல் பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில்…
“இது அரசியல் சார்பற்ற ஒரு யாத்திரை. நாட்டின் ஒற்றுமைக்காக அனைவரும் இணைவோம்” என அந்த வீடியோவில் தன் கருத்தை பதிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.
மேலும் இன்று எம்ஜிஆர் நினைவு நாள் என்பதால் எம்ஜிஆர் குறித்தும் கமல் தன் திட்டத்தில் பதிவிட்டுள்ளார் அந்த பதிவில்…
“மேடையில் மாணவராகத் தொடங்கி திரையில் வாத்தியார் ஆனவர். இணையற்ற தலைவராக இன்றுவரை மக்களின் மனதில் நிலைத்திருப்பவர், ஆனந்தஜோதி படத்துக்காக எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, இன்று அவரது களத்திலேயே நான் நீந்தக் காரணமானவர் எங்கள் எம்ஜிஆர். நினைவுநாளில் வணங்குகிறேன்.
MNM Leader Kamal joins with Rahul Gandhi