ரேடியோ எப்எம் சேனலில் ஆர்ஜே-வாக பணியாற்றும் நடிகை ஓவியா

ரேடியோ எப்எம் சேனலில் ஆர்ஜே-வாக பணியாற்றும் நடிகை ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மைண்ட் ட்ராமா ப்ரொடெக்ஷன் & ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘சுவிங்கம்’ வெப் சீரியஸ்.

இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரிதுன்..

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சுராஜ், படத்தொகுப்பு அருண்

சுவிங்கம்

இப்படத்தில் கதையின் நாயகியாக ஓவியா நடித்துள்ளார், இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜுவ் ,ஆஷிக், ஐரா, சிரா, ராம்குமார்,TRS மற்றும் லல்லு ஆகியோர் நடித்துள்ளனர்…

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்…

இது முழுக்க முழுக்க மனித உறவுகளை மையமாக உருவாக்கப்பட்ட கதை.

சுவிங்கம்

நாயகி ஓவியா இதில் ரேடியோ மிர்ச்சி எப்எம் சேனலில் ஆர் ஜே வாக பணியாற்றுகிறார்.. இதில் Croses Talk எனும் நிகழ்ச்சியில் சமுதாயம் சார்ந்த கருத்துக்களை காமெடியாக சொல்லி இருப்பார்..

வளர்ப்பு தாயிடம் வளரும் ஓவியா மிக எதார்த்தமாக சாதாரண பெண்மணியாக வாழ்கிறார் ஆனால் அவரைச் சுற்றி அனைவரும் அந்தஸ்துக்காகவும் பணத்திற்காகவுமே வாழ்கிறார்கள்.

இவர்களுக்கு இடையேயான வாழ்வியலை நல்ல உணர்வோடு காமெடியாக இப்படத்தில் சொல்லி இருக்கிறோம் என்றார்..
சுவிங்கம்

Actress Oviya as Radio FM stations RJ

ஒரு பக்கம் ‘ஜெயிலர்’ பயம்.; மறுபக்கம் ‘அடியே’ கதை பயம்.. – விக்னேஷ் கார்த்திக்

ஒரு பக்கம் ‘ஜெயிலர்’ பயம்.; மறுபக்கம் ‘அடியே’ கதை பயம்.. – விக்னேஷ் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் – கௌரி இணைந்து ஜோடியாக நடித்த படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இந்த படம் வெளியாகி 4 வாரங்கள் ஆன நிலையில் படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில்…

” முதலில் வித்தியாசமான ஒரு கதையை சொல்கிறோம் என்றால்.. அதை படமாக்க துணிச்சல் வேண்டும்.

திரைப்படத் துறையைப் பொறுத்தவரை ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என ஏராளமான சென்டர்கள் இருக்கிறது. எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் நாம் சொல்லும் விசயம் புரிய வேண்டும். சிலருக்கு கதை புரியாமல் போய்விடுமோ..? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், அதன் தயாரிப்பாளருக்கும், இந்த கதையை தேர்வு செய்து படமாக உருவாக்கலாம் என்று தீர்மானித்ததற்கும் முதலில் நன்றி.

வித்தியாசமான கதையை புரிந்து கொண்டு நடிக்க ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர் வேண்டும். அந்த வகையில் இந்த கதையை நம்பி நடிக்க ஒப்புக்கொண்ட சகோதரர் ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கு நன்றி. ‌ இந்தப் படத்தில் நடித்த நடிகை கௌரி கிஷன், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

இந்தப் படம் வெளியாகும் போது ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நன்றாக வசூலித்துக் கொண்டிருந்தது.

அப்படியொரு சூழலில் இந்த திரைப்படத்தை காண மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்களா..! என்ற கேள்வியும் இருந்தது. இது தொடர்பான பயமும், குழப்பமும் படக்குழுவினருக்கும் இருந்தது. இவற்றையெல்லாம் கடந்து மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்திற்கு பேராதரவு அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது தொடர்ந்து நான்காவது வாரமும் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.‌

திரைப்படத்தில் சில விசயங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ..! என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதுண்டு. அதனை வரும் படைப்புகளில் சரி செய்து கொள்வேன்.

ஊடகங்களில் வெளியான நேர் நிலையான விமர்சனங்களால் தான் ஜெயிலர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும்… ‘அடியே’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்தார்கள்.‌ இதனால் ஊடகத்தினருக்கு என்னுடைய நெஞ்சில் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் ரசிகர்களால் சரியான வகையில் புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால்.. இனி நாமும் வழக்கமான சினிமாவை இயக்கலாம் என தீர்மானித்திருப்பேன். ஆனால் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் நன்றாக அனுபவித்து உற்சாகமாக கொண்டாடினர். இதை பார்த்த பிறகு தான்.. இனி தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அடுத்து உருவாகும் திரைப்படமும் வித்தியாசமான கதைக்களம் தான்.” என்றார்.

We were at fear of Jailer movie success says Adiyae director

நான் நடிச்ச படங்கள் மூலம் ஹாட்ரிக் ஹிட் கிடைச்சிருக்கு – ஜீ. வி. பிரகாஷ்

நான் நடிச்ச படங்கள் மூலம் ஹாட்ரிக் ஹிட் கிடைச்சிருக்கு – ஜீ. வி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் – கௌரி இணைந்து ஜோடியாக நடித்த படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த இந்த படம் வெளியாகி 4 வாரங்கள் ஆன நிலையில் படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ஜீ. வி. பிரகாஷ் பேசுகையில்…

” முதலில் ஊடகத்தினருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சியை திரையிட்ட பிறகு நேர் நிலையான விமர்சனங்கள் வெளியாகி, சமூக ஊடகங்கள் மூலமாக மக்களைச் சென்றடைந்தது.

இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

தற்போதுள்ள சூழலில் முதலீடு செய்து திரைப்படத்தை தயாரித்து, திரையரங்குகளில் வெளியிட்டு, அதில் வெற்றி பெற்று, அதன் ஊடாக லாபத்தை காண்பது என்பது அரிதானது. அந்த வகையில் இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

என்னுடைய நடிப்பில் வெளிவந்த ‘பேச்சுலர்’, ‘செல்ஃபி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘அடியே’ திரைப்படமும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்திருக்கிறது.

ஒரு படத்தில் நடிக்கிறோம். தயாரிப்பாளர் முதலீடு செய்கிறார். அதில் அவர் லாபம் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சி இருக்கும். அப்போதுதான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இந்த திரைப்படம் வசூலில் வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிப்பை பொறுத்தவரை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் வழிகாட்டுதல் தான் காரணம். படத்தை பார்த்த ரசிகர்கள் ஏராளமானவர்கள் எனது நடிப்பை பாராட்டினார்கள். இவை அனைத்தும் இயக்குநரைத்தான் சாரும்.

படத்தின் ஒளிப்பதிவு பிரமாதம். படம் வெளியான பிறகு, பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்ஸாக பயன்படுத்துகிறார்கள்.

இப்படத்தின் படத்தொகுப்பு வித்தியாசமாக இருந்ததாக அனைவரும் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்காகவும் அறிமுக படத்தொகுப்பாளர் முத்தையனை பாராட்டுகிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

My 3 movies leads hat trick success says Gv Prakash

96 ஜானு-வை மறக்கடிச்சிட்டீங்கன்னு சொல்றாங்க..; மகிழ்ச்சியில் கௌரி

96 ஜானு-வை மறக்கடிச்சிட்டீங்கன்னு சொல்றாங்க..; மகிழ்ச்சியில் கௌரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினரின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இதன்போது தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பிரபு, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், நாயகன் ஜீ.வி. பிரகாஷ் குமார், நாயகி கௌரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன் ஆகிய படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் மகேந்திர பிரபு பேசுகையில்…

” இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் ஒரு அழகான கதையை நேர்த்தியாக சொல்லி எங்களை அசத்தினார். திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு.. ரசிகர்கள் இதனை துல்லியமாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டது காரணம் என நம்புகிறேன்.

ஒரு நல்ல திரைப்படத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது. இதற்காக படத்தின் தயாரிப்பு நிலையிலிருந்து.. அனைத்து நிலையிலும் சிறந்த தரத்தை உருவாக்கினோம். மேலும் இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம்.

அந்த வகையில் இந்த படத்தை தற்போது மலேசியா, ஐக்கிய அரபு குடியரசு நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் வெளியிட்டிருக்கிறோம். அங்கும் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதன் மூலம் எங்கள் நிறுவனத்திற்கு சர்வதேச அளவிற்கு தரமான படைப்புகளை தயாரிக்கும் நிறுவனம் என்ற அடையாளம் கிடைத்திருக்கிறது. எங்களுடைய இலக்கில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என கருதுகிறோம். இதற்கு துணையாக நின்ற பட குழுவினருக்கும், ஊடகத்தினருக்கும், ஆதரவளித்த ரசிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் ‘டா டா ‘ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் பாபு இயக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான விரைவில் வெளியாகும்.” என்றார்.

நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில்…

” இந்த அடியே திரைப்படத்திற்கு தொடக்க நிலையிலிருந்து ஊடகங்கள் பேராதரவு அளித்து வருகிறது. அதற்கு முதலில் நன்றி. செந்தாழினி – என் வயதுக்கு மீறிய கதாபாத்திரம். அதில் நடித்திருக்கிறேன்.

இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தொடர்பு கொள்ளும்போது எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு சவாலான கதாபாத்திரம் தான் என நம்பினேன்.

ஜானு என்ற கதாபாத்திரத்திற்கு பிறகு அதைவிட அழுத்தமான செந்தாழினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். செந்தாழினி என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம்.

எனக்கு பிடித்த வேடமும் கூட. சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருப்போம். ஆனால் எனக்கு இந்த படத்தில் பல வெர்சன்ஸ் இருந்தது. ஒரு கலைஞராக இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலானதாக இருந்தது. கதை ஓட்டத்தின் போது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

சமூக வலைதளத்தில் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘ஜானுவை மறக்கடித்து விட்டீர்கள்’ என பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இந்தப் படத்தை தயாரித்த மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. அவர்களின் தயாரிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் ‘போட்’ எனும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் படைப்பு கற்பனையும், காட்சி கற்பனையும் தான் அடியே. அவர் எப்போதும் வித்தியாசமான சிந்தனையாளர். அவருடன் இணைந்து மற்றொரு படைப்பிலும் பணியாற்றி இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் இந்த படத்தில் அர்ஜுன், ஜீவா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நன்றாக நடித்த சக நடிகர். படப்பிடிப்புக்கு பிறகு தற்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

ஆல்டர்நேட்டிவ் ரியாலிட்டி என்பதனை ஒரு படைப்பாளி யோசிக்க முடியும். ஆனால் அதை திரையில் காட்சிகளாக காண்பிப்பது கடினமானது. அதனை எளிதாக்கிய ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்க்கும் என்னுடைய நன்றி.

‘அடியே’ திரைப்படம் தற்போது நான்காவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி வெற்றி பெறும் என நம்புகிறேன்.” என்றார்.

I am excited with result of Adiyae success says Gouri Kishan

EXCLUSIVE நேற்று இளையராஜா.. இன்று ரஹ்மான்.; இம்சைகளாக மாறும் இசை விழா.? கார்த்தி – யுவன் ஆதரவு சரியா.?

EXCLUSIVE நேற்று இளையராஜா.. இன்று ரஹ்மான்.; இம்சைகளாக மாறும் இசை விழா.? கார்த்தி – யுவன் ஆதரவு சரியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10ஆம் தேதி ‘மறக்குமா நெஞ்சம்..’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் நடைபெற்றது.

இணையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏ சி டி சி என்ற நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது.

கடந்த மாதமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் மழையால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது.

ஆனால் அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்கப்பட்டதாலும் முறையான ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் மக்கள் பல சிக்கலுக்கு ஆளாகினர்.

குடிக்க தண்ணீர் இல்லை.. உட்கார இருக்கைகள் இல்லை.. வாகனங்களை நிறுத்த சரியான பார்க்கிங் வசதி இல்லை என பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தான் பொறுப்பு ஏற்பதாக ஏ ஆர் ரகுமான் கூறினார். நாங்கள் உள்ளே இருந்ததால் வெளியே என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்றார்.

இத்தனை பிரச்சனைகள் 5 மணி நேரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது ரகுமான் தரப்பு எவராவது அவருக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடத்தில் இந்த பிரச்சனை முடியவில்லை.

கிட்டத்தட்ட 5 மணி நேரமாக இந்த பிரச்சனை நீடிக்கும் போது இசை நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்ததற்கான காரணம் ஏன்? என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

தற்போது காவல்துறையினர் இதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரகுமானுக்கு ஆதரவாக யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் தங்களது ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் கருத்துகளில் ரகுமான் மீது தவறு ஏதுஙுமில்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

ஒரு திருமணத்திற்கு நமக்கு அழைப்பு வருவது என்றால் திருமண வீட்டாரை நம்பி தான் நாம் செல்கிறோம். அவர்கள் யாரிடமாவது அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய கொடுத்திருக்கலாம்.

நாம் ஏற்பாட்டார்களிடம் எந்தவிதமான உபசரிப்பையும் மரியாதையையும் எதிர்பார்க்க முடியாது. அது சாதாரண ஒரு திருமண நிகழ்ச்சி.

ஆனால் இந்த இசை நிகழ்ச்சி என்பது ரகுமானுக்காகவே நடத்தப்பட்டது. ரஹ்மான் ரசிகர்கள் அவருக்காகவே சென்றனர். அது மட்டும் இல்லாமல் 2,000 5,000 10,000 15,000 என டிக்கெட்களை பணம் கொடுத்து வாங்கி சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு முன்பு ரகுமான் அங்கு சென்று அனைத்தும் சரியாக இருக்கிறதா ? என்பதை அவர் தரப்பில் விசாரித்து இருக்க வேண்டும். ஆய்வு செய்திருக்க வேண்டும்.

பார்வையாளர்களுக்கு ரசிகர்களுக்கு கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவைகள் சரியாக இருக்கிறதா? அதுமட்டுமில்லாமல் அவசர தேவைகளுக்காக தீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் ஆகியவை நிறுத்தப்பட்டிருக்கிறதா ? என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும்.

இத்துடன் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையாவது அவர்கள் உறுதி செய்திருக்க வேண்டும்.

பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் பணம் மட்டுமே நோக்கமாக கருதப்பட்டுள்ளதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவையில்லாமல் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவைகளில் பவுன்சர்களின் அராஜகமும் அரங்கேறி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 படத்தின் இசை விழாவில் மாணவர்களை பவுன்சர் தாக்கிய நிகழும் நடைபெற்றது. பவுன்சர்கள் மீடியாக்களை கூட சரியாக மதிப்பதில்லை.

ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும் போது மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு முக்கியமானவர்கள் செய்தியாளர்கள். ஆனால் அவர்களை கூட பவுன்சர்கள் சரியாக நடத்துவதில்லை என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இனியாவது இசைக்கலைஞர்கள் திரை பிரபலங்கள் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இதற்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்ட இளையராஜா இசை நிகழ்ச்சியிலும் இதுபோன்ற நிறைய குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூபாய் 200 300 அளவில் விற்கப்பட்டது.

அப்போதுதான் இளையராஜா பேசிய பேச்சு சர்ச்சையானது.. என் பாட்டை கேட்க தானே வந்தீர்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க மாட்டீர்களா? என இளையராஜா அங்கு பேசியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த செய்தியை சில ஆண்டுகளுக்கு நம் FILMISTREET தளத்தில் பதிவு செய்தோம் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதே சமயம் இந்த ஆண்டு 2023 செப்டம்பர் 9ஆம் தேதி நடத்தப்பட்ட விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியை பார்த்த பலரும் பாராட்டி உள்ளனர். நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றதாகவும் நாங்கள் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியினை பார்த்தோம் எனவும் கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Music Directors concert AR Rahman and ilaiyaraaja

மாதம்பட்டி ரங்கராஜ் – யோகிபாபு இணைந்த ‘மிஸ் மேகி’ பட சூட்டிங் அப்டேட்

மாதம்பட்டி ரங்கராஜ் – யோகிபாபு இணைந்த ‘மிஸ் மேகி’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் யோகி பாபு ‘மிஸ் மேகி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் இசையமைக்கிறார்.

மிஸ் மேகி

இப்படத்தில் யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளார்.

இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

யோகிபாபு, ஆங்கிலோ இந்திய பெண் கெட்டப்பில் கேக் வெட்டும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மிஸ் மேகி

yogi babu’s miss maggie movie shooting wrap

More Articles
Follows