தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி ஜோடோ பாத யாத்திரையை தொடங்கினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை அவர் மேற்கொண்டுவருகிறார்.
இந்த பாரத ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தார ராகுல்.
அதன்படி டிசம்பர் 25ல் டெல்லியில் நடைபெற்ற யாத்திரையில் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.
இந்தியா முழுவதும் இந்த யாத்திரை நடைபெற்று வந்த போதிலும் இதில் கலந்து கொள்ள சினிமா நடிகர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.
ஏனென்றால் இது காங்கிரஸ் கட்சியின் யாத்திரை என்பதால் மத்திய பாஜக அரசை எதிர்த்து இதில் யாரும் கலந்து கொள்ள விரும்பவில்லை.
இந்த நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன் தைரியமாக கலந்து கொண்டு பேசினார்.
இதனால் கமலின் வீடு மற்றும் அலுவலகங்களில் விரைவில் வருமான வரி பரிசோதனை நடத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வந்துள்ளன.
சினிமா உலகில் முறையாக நேர்மையாக கணக்கு காட்டி வரி செலுத்தி வருபவர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கமலுக்கு ஐடி ரெய்ட் பயமிருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.
Government plan to conduct IT raid at Kamal’s house?