தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான்.
இதனை முன்னிட்டு சென்னையில் ஜனவரி 12-ம் தேதி ‘நேற்று இன்று நாளை’ என்னும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
எனவே இது தொடர்பாக பேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் ஏஆர். ரஹ்மான்.
அப்போது சில கேள்விகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான பதிலளித்தார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் நல்லது செய்ய சரியான தலைமை இல்லை என கருதி இருக்கலாம்.
ஆன்மிக அரசியல் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். அவரது எண்ணம் நல்லதாகவே இருக்கும் என நான் நினைக்கிறேன்.
அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் உழைக்க வேண்டும்.” என்றார்.