தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ மற்றும் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
இவரது அண்மை பேட்டியில் தன்னுடைய ரீமிக்ஸ் பாடல் குறித்து பேட்டியளித்துள்ளார்.
”கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஓகே ஜானு’ படத்தில் இடம் பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ பாடல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதன் பிறகு ரீமேக் செய்யப்பட்ட பாடல்கள் பிடிக்கவில்லை.
சிலவை மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருந்தன.
அந்த ரீமேக் பாடலை உருவாக்கிய நிறுவனத்தை அழைத்து, “இதற்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள். ஆனால், இந்தப் பாடலை நான் வெறுக்கிறேன்.
இதை நான் ஆதரித்தால் மக்கள் என்னைக் கிண்டல் செய்வார்கள். ரீமிக்ஸ் ட்ரெண்ட் இப்போது முடிந்து விட்டது என்று கூறினேன்” என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன் பழைய பாடல்களான தொட்டால் பூ மலரும்…, மற்றும் பொன்மகள் வந்தாள்… ஆகிய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதன்பின்னர் பம்பாய் படத்திற்காக தான் கம்போஸ் செய்து பாடிய, அந்த அரபிக்கடலோரம்… என்ற பாடலை மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தான் இசையமைத்த, ஓகே கண்மணி… படத்திற்காக ரீ-மிக்ஸ் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.