மீண்டும் கமல் படத்தில் விஸ்வரூப நாயகி.; லோகேஷுடன் மீண்டும் கூட்டணி

மீண்டும் கமல் படத்தில் விஸ்வரூப நாயகி.; லோகேஷுடன் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் நடித்து வரும் படம் ‘விக்ரம்’.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்பதை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

இதனிடையில் பிரபல நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ‘Code Red’ என குறிப்பிட்டுள்ளார்.

‘விக்ரம்’ படத்தின் அனைத்து போஸ்டர்களிலும் இதே வார்த்தைகள் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர் ‘விக்ரம்’ படத்தில் நாயகியாக இணைகிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

கமலுடன் ‘விஸ்வரூபம்’ படத்திலும் லோகேஷுடன் ‘மாஸ்டர்’ படத்திலும் ஆண்ட்ரியா பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Andrea joins Kamal Haasan’s Vikram movie ?

சிம்புவுடன் டூயட் பாட கன்னட நடிகையை கொண்டு வரும் கௌதம் மேனன்

சிம்புவுடன் டூயட் பாட கன்னட நடிகையை கொண்டு வரும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று பெயர் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் பழைய தலைப்பை நீக்கிவிட்டு புதிய தலைப்பான ‘வெந்து தணிந்தது காடு’ என தலைப்பிட்டு சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

எவருமே எதிர்பாராத வகையில் 15 கிலோ குறைத்து சிம்பு ஸ்லிம்மாகி பாலா பட நாயகன் போல இருந்தார்.

சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடிக்கவுள்ளார்.

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஒன்றை தழுவி உருவாகிறதாம்.

இதன் படப்படிப்பு தற்போது திருச்செந்தூரில் தொடங்கி விட்டது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை, புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம்.

இந்நிலையில் இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு நாயகியாக கயடு லோஹர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஹிந்தி தெலுங்கு & கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kayadu Lohar is the heroine for STR’s next film ?

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் நிறுத்தம்? இயக்குனருக்கே ரகசியம் சொன்ன ஊடகம்.; செல்வராகவன் கொடுத்த பதிலடி

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் நிறுத்தம்? இயக்குனருக்கே ரகசியம் சொன்ன ஊடகம்.; செல்வராகவன் கொடுத்த பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2010ல் ரிலீசான திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’.

இந்த திரைப்படத்தின் மேக்கிங் பாராட்டப்பட்டாலும் படம் வசூலில் மோசம்தான்.

ஆனாலும் ரசிகர்கள் இப்படத்தின் 2ஆம் பாகம் குறித்து அடிக்கடி கேட்பதுண்டு.

இதனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார் செல்வராகவன். ஆனால் இதில் கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்கிறார் என அறிவித்தார்.

2024 ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் ரிலீஸ் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் முன்னணி நாளிதழ் ஒன்றில் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த செய்திக்கு இயக்குனர் செல்வராகவன் தன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்…

“எப்போது அந்த மர்மமான ஆரம்பகட்ட பணிகள் நடந்தது ? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார் என கூற முடியுமா? உங்களது தரப்பிலிருந்து இந்த படம் குறித்து சரியாக விசாரியுங்கள் என பதிலடியாக தெரிவித்துள்ளார்.

Selva Raghavan’s reply to Aayirathil Oruvan 2 drop news

கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் மருத்துவ செலவை ஏற்று பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா

கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் மருத்துவ செலவை ஏற்று பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம்.

இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல. சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

அதே நேரத்தில் மும்பையில் தன் குடும்பத்துடன் இந்த சந்தோஷ தருணத்தை பகிர்ந்துக் கொண்டாடிய அவர், தான் மும்பையில் தத்தெடுத்த பெண்களுடன் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார்.

தான் பொறுப்பெடுத்துகொண்ட கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 பெண் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளை முழுவதுமாக இவரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவர்கள் அனைவரையும் முழுமையாக குணமடைய செய்து சாதாரண வாழ்க்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் தற்போது உள்ளார்.

மேலும் சென்னை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு தான் வரும் பொழுதெல்லாம் உணவு வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த முறை, பிரபஞ்சம் அவரது பிறந்த நாளை மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியுள்ளது.

ஒரு புறம் தனது பிறந்த நாளை ஆதரவற்றவர்களுடன், அர்த்தமுள்ளதாக அவர் கொண்டாட, திரையுலகை சேர்ந்த நண்பர்கள் அவரது பிறந்த நாளை பிரமாண்டமானதாக மாற்றியுள்ளனர்.

அவர் நடித்து வரும் My Name is Shruthi, மற்றும் பரபர திரில்லரான One Not Five Minutes படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவர் பிறந்த நாளை ஒட்டி கோலகலகமாக வெளியாகியுள்ளது.

மேலும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக, நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50 வது படமான ” மஹா ” படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் அவரை பெருமைப்படுத்தும் வகையில் ” A Glimpse of Princess work ” என்ற தலைப்பில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளார்.

அனைத்து புறங்களில் இருந்து வாழ்த்து மழையிலும், புகழ் மழையிலும் நனைந்து வருகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளை ஒட்டி, பொது மக்களிடம் சில வேண்டுகோளை வைத்துள்ளார்.

மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் , தங்களது கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், உயிரை பறிக்க கூடிய கொரோனா நோய்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை, அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும், என அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Hansika provides money for cancer affected student

வெந்து தணிந்தது காடு.; நொந்து நூடூல்ஸ் ஆகும் சிலம்பரசன் படக்குழுவினர்

வெந்து தணிந்தது காடு.; நொந்து நூடூல்ஸ் ஆகும் சிலம்பரசன் படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் பழைய தலைப்பை நீக்கிவிட்டு புதிய தலைப்பான ‘வெந்து தணிந்தது காடு’ என தலைப்பிட்டு சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

எவருமே எதிர்பாராத வகையில் சிம்பு ஸ்லிம்மாகி பாலா பட நாயகன் போல இருந்தார்.

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஒன்றை தழுவி உருவாகிறதாம்.

இதன் படப்படிப்பும் திருச்செந்தூரில் தொடங்கி விட்டது.

இந்த நிலையில் இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி உள்ளது. இது இலங்கை தமிழர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எழுத்தாளர் கவிதா பாரதி தெரிவித்துள்ளதாவது…

“இயக்குனர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். மதிசுதா என்பவர் ஈழத்து திரைக்கலைஞன். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தம்பி, வேறு எந்தத் தொழிலையும் பாராமல் திரைத்துறைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட இளைஞன். உலகளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எனினும் ஈழத்திரையுலகம் வணிக ரீதியாக வருமானம் தருமளவுக்கு விரிந்து பெருகவில்லை. ஒருபுறம் தனது சொந்த வாழ்க்கைக்கும், மறுபுறம் படத்தயாரிப்புச் செலவுகளுக்கும் சிரமமான சூழலிலேயே தம்பி மதிசுதா செயல்படுகிறான் இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சிறு அளவில் நிதிதிரட்டிப் படமெடுத்து அதனை வெளியிடப் போராடிக் கொண்டிருக்கிறார்.

அந்த படத்தின் பெயர், வெந்து தணிந்தது காடு. இந்நிலையில் இதே தலைப்பில் தங்கள் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் ஓடிடி தளத்தில் படத்தை விற்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது. மதிசுதாவின் படம் குறித்த தகவல் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.

யானையின் காலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழந்துவிடக்கூடாது.

இவ்வாறு கவிதா பாரதி தெரிவித்துள்ளார்.

vendhu thaninthathu kaadu team is in trouble

அபராதம் கட்டிய சிவகார்த்திகேயன் படக்குழுவினர்.; ‘டான்’ டீம் தடுப்பூசி போட்டார்களா? என விசாரணை

அபராதம் கட்டிய சிவகார்த்திகேயன் படக்குழுவினர்.; ‘டான்’ டீம் தடுப்பூசி போட்டார்களா? என விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டான்’.

லைகா புரொடக்ஷன் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நாயகி பிரியங்கா, ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ஊர் மக்கள் நூற்றுக்கணக்கில் வேடிக்கை பார்க்க திரண்டனர்.

அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை எனவும் நிறைய பேர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை எனவும் சொல்லப்படுகின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் பின்னர் காவலர்கள் உதவியுடன் மக்களை கலைந்து போகச் செய்தனர்.

தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இத்துடன் ‘டான்’ படக்குழுவினருக்கு ரூ 10,000/- அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

Fine for Sivakarthikeyan’s new film Don

More Articles
Follows