வெங்கடேஷ் – மீனா நடித்த ’த்ரிஷ்யம் 2’ பட ரிலீஸ் அப்டேட்

வெங்கடேஷ் – மீனா நடித்த ’த்ரிஷ்யம் 2’ பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் வெளிவந்த வெற்றிப்படமான த்ருஷ்யத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ் டகுபதி இப்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவரவுள்ள, த்ருஷ்யம் 2 படத்திலும் பங்கேற்கிறார்.

சுரேஷ் புரொடக்ஷன்ஸைச் சேர்ந்த ஆண்டனி பெரும்பாவூர், சுரேஷ் புரொடக்ஷனின் D. சுரேஷ் பாபு, மேக்ஸ் மூவீஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த Amazon Originals திரைப்படம் மர்மம் மற்றும் திடீர்த் திருப்பங்ககள் கொண்ட குடும்ப த்ரில்லர் ஆகும்.

நவம்பர் 25-ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த தெலுங்கு த்ரில்லரின் பிரத்யேக டிஜிட்டல் பிரீமியரை இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள Prime உறுப்பினர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம்

15 நவம்பர், 2021— தெலுங்கு க்ரைம்-த்ரில்லர் ’த்ருஷ்யம் 2’க்கான டிரெய்லரை Amazon Prome Video இன்று வெளியிட்டது, தெலுங்கில் வெளிவந்த வெற்றிப் படமான த்ருஷ்யத்தில் நடித்த இதில் வெங்கடேஷ் டக்குபதி தனது பாத்திரத்தை இப்படத்திலும் தொடர்கிறார்.

மீனா, கிருத்திகா, எஸ்தர் அனில், சம்பத் ராஜ் மற்றும் பூர்ணா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றனர்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சுரேஷ் புரொடக்ஷன்ஸின் D.சுரேஷ் பாபு, ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் ராஜ்குமார் சேதுபதி, மேக்ஸ் மூவிஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் ’த்ருஷ்யம் 2’ நவம்பர் 25 அன்று Amazon Prime \ Video-இல் இந்தியாவிலும் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும்.

முதல் படமான திருஷ்யம் முடிந்த இடத்திலிருந்து துவங்கும் த்ருஷ்யம் 2, ராம்பாபுவின் (வெங்கடேஷ் டக்குபதி) குடும்பம் கடந்த கால நிகழ்வுகள் பற்றிய விசாரணையால் அச்சுறுத்தப்படுவதன் தொடர்ச்சியாகப் பார்வையாளர்களை ரோலர் கோஸ்டர் பயணத்தில் அழைத்துச் செல்கிறது.

வரவிருக்கும் Amazon Original திரைப்படமானது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில் நடந்த சம்பவத்தால் பதிக்கப்பட்ட தனது குடும்பத்தை மீட்டெடுத்த குடும்பத் தலைவர் மீண்டும் ஒருமுறை அவர்களைக் காக்க முயல்வது போன்ற மிகவும் பரபரப்பான மற்றும் தீவிரமான மற்றும் கவர்ச்சிகரமான கதையில் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த த்ரில்லர் இருக்கையின் நுனிக்கு பார்ப்பவர்களை இட்டு வருகிறது.

இந்தியாவின் கதைகள் மற்றும் கதைசொல்லிகளுக்கான உலகளாவிய மேடையாக Amazon Prime Video மாறியுள்ளது,” என்று Amazon Prime Video இந்தியாவின் உள்ளடக்க உரிமத்துறை தலைவர் மனிஷ் மெங்கானி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், …

“தனித்துவமான கதைகளைக் கண்டுபிடித்து அவற்றை வெளிக்கொணர்வது எங்கள் உள்ளடக்க நிரலாக்கத்தின் மையமாக உள்ளது.

ராம்பாபுவின் கதைக்கு பார்வையாளர்களிடமிருந்து பலத்த வரவேற்பைப் பார்க்கும்போது, இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான த்ருஷ்யம் 2-ஐ எங்கள் சேவையில் வெளியிடுவது இயல்பான தேர்வே. வெங்கடேஷ், ஜீத்து ஜோசப் மற்றும் சுரேஷ் பாபு உட்பட சிறந்த நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் குழுவை படம் வெளிக்காட்டுகிறது.

அவர்கள் கூட்டாக வழங்கும் இத்திரைப்படம் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு பரபரப்பான பொழுதுபோக்காக உருவெடுக்கிறது.

படத்தின் டிரெய்லரை வெளியிடும் இந்த நேரத்தில் நான் சொல்ல விரும்புவது எல்லாம் ‘ராம்பாபுவும் அவரது குடும்பத்தினரும் உங்கள் திரைக்கு வரும்போது உங்கள் இருக்கையின் நுனிக்கு உங்களை அறியாமலேயே இட்டு வரும் திரில்லர் பொழுதுபோக்கிற்குத் தயாராகுங்கள்’என்பது மட்டுமே” என்றார்.

“எங்களுக்கு இவ்வளவு அன்பையும் பாராட்டுகளையும் வழங்கிய எங்கள் ரசிகர்கள், பார்வையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள விமர்சகர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம். நாங்கள் பெற்ற வரவேற்பு மற்றும் த்ருஷ்யம் திரைப்படம் அடைந்த வெற்றி இதுவரை எவரும் காணாதது, மேலும் த்ருஷ்யம் 2 மூலம் இந்த வெற்றியை முன்னோக்கிக் கொண்டு செல்ல எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளித்தது.

ராம்பாபு தனது குடும்பத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள நிலையில் ராம்பாபுவின் வாழ்க்கையில் அடுத்து என்ன, எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து எங்கள் ரசிகர்கள் கொண்டுள்ள பல கேள்விகளுக்கு இத்தொடர் திரைப்படத்தில் விடையளிக்க முயல்கிறோம்.

கதைக்களத்தில் உள்ள திருப்பங்கள் சஸ்பென்ஸை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உணர்வுப் பூர்வமான மற்றும் மேலும் உற்சாகமான பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் த்ருஷ்யம் 2 எங்கள் பார்வையாளர்களின் ஆவலை மேலும் தூண்டுவதாக அமையும். Amazon Prime Video-இல் த்ருஷ்யம் 2 ஐத் திரையிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கும். ” ”என்று வெங்கடேஷ் டகுபதி கூறினார்.

த்ருஷ்யம் 2 படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான ஜீத்து ஜோசப் கூறுகையில் “த்ருஷ்யம் 2 என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. திருஷ்யத்தின் தொடர்ச்சியுடன் மீண்டும் வருவீர்களா என்று பலர், பல ஆண்டுகளாக என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். இத்தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரவேண்டும் என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன், ஆனால் எல்லாவற்றுக்கும் அதற்குரிய நேரம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

கதையை எப்படித் தொடரலாம் என்று பல வழிகளில் யோசித்து, இறுதியில் எனது நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரின் ஆதரவுடன் அந்தக் கதைக் கருவை யதார்த்தமாக மாற்ற மிகவும் கடினமாக உழைத்த பிறகு, இப்போது இந்தப் படத்தை எங்கள் பார்வையாளர்களுக்குக் கொண்டு வரத் தயாராக உள்ளேன். அவர்களின் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

Amazon Prime Video உடன் இணைவதால் பலரிடையே இப்படத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது., இது’ என்கிறார்.

டிரெயிலர் இணைப்பு: https://youtu.be/uUJtUYkBu-g

கதைச் சுருக்கம்:
ராம்பாபுவும் அவரது குடும்பத்தினரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில் நடந்த மற்றும் அவர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய குற்றத்தின் நிழலில் வாழ்கிறார்கள், . மூன்று தரப்பினரின் உணர்வுகளை ஆராய்வது போன்று இத்திரைப்படம் அமைந்துள்ளது: பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளையும் கழிக்கும் ராம்பாபு மற்றும் அவரது குடும்பத்தினர், நீதி கிடைக்கப் போராடும் மகனை இழந்த பெற்றோர்கள் கீதா மற்றும் பிரபாகர் மற்றும் ஒரு சாமானியனால் அவர்களை விட புத்திசாலியாக அல்லது தந்திரமாக மறைத்ததால் வெகுண்டு புதிரை அவிழ்க்கத் துடிக்கும் காவல் துறை என எதிர்பாராத நிகழ்வுகளால் சூழப்பட்ட இந்தக் கதை உங்களை மறந்து, நகத்தைக் கடிக்க வைக்கும் உணர்ச்சிகரமான கிளைமேக்ஸுக்கு வழிவகுக்கிறது. இந்த முறை ராம்பாபுவால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா?

Amazon Prime Video Premieres the Much-Awaited Trailer for Drushyam 2 Starring Venkatesh Daggubati

உலகளவில் கோடிகளை அள்ளிக் குவிக்கும் ‘குருப்’..; துள்ளலில் துல்கர் சல்மான்

உலகளவில் கோடிகளை அள்ளிக் குவிக்கும் ‘குருப்’..; துள்ளலில் துல்கர் சல்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்ல கதையம்சம் கூடிய படங்கள் வெளியாகும் போது, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த வரிசையில் 5 மொழிகளில் வெளியான ‘குருப்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் முதல் வாரத்தில் பல்வேறு திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது.

துல்கர் சல்மானின் அசத்தலான நடிப்பு, ஸ்ரீநாத் ராஜேந்திரனின் துல்லியமான இயக்கம், நிமிஷ் ரவியின் கச்சிதமான ஒளிப்பதிவு, சுஷின் ஷாமின் துள்ளலான இசை என அனைத்துமே படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

தமிழகத்தில் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரத்தில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த அதிகரிப்பே படத்தின் வெற்றிக்குச் சான்றாக அமைந்துள்ளது. எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் ‘குருப்’ வரவேற்பைப் பெற்றிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியானது ‘குருப்’. உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 43.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலை விட அதிகமாகும். இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Dulquer Salmaan’s Kurup collected Rs 50 crores at the worldwide box office

‘வேதம் புதிது’ பிரச்சினையின் போது MGR என்னுடன் நின்றார்..; இப்போது ‘ஜெய்பீம்’ சூர்யாவுக்கு..? – பாரதிராஜா

‘வேதம் புதிது’ பிரச்சினையின் போது MGR என்னுடன் நின்றார்..; இப்போது ‘ஜெய்பீம்’ சூர்யாவுக்கு..? – பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பின் சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு,
வணக்கம்.

இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன்.

திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது.

கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம்.

பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவேமுயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான்.

பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது

பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர்.

அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே “ஜெய்பீம்”. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.

கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்.

இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான்.

அன்று என் படம் “வேதம் புதிது ” முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் MGR உடன் நின்றார்.

அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் “ஜெய் பீம்” படமும்.

இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.

தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல.

கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும்… தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர்.

அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல.

தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர்.

அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும்… அவர் மீதான வன்மத்தையும்… வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.

சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே..

நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும்.

எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை.

நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது.

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்?

ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.

எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள்.

எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி!

எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும்

பாரதிராஜா,

தலைவர்,

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

Director Bharathi Raja supports Suriya’s Jai Bhim

‘விஸ்வாசம்’ படத்துல என்ன இருக்கு.. சொல்லி அடிச்ச வெற்றி ‘அண்ணாத்த’..; ரஜினி ஓபன் டாக்

‘விஸ்வாசம்’ படத்துல என்ன இருக்கு.. சொல்லி அடிச்ச வெற்றி ‘அண்ணாத்த’..; ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அன்றைய தினம் நவம்பர் 4ல் ரிலீசானது.

பெண்களையும் குழந்தைகளையும் ரஜினி ரசிகர்களை கவர்ந்த இந்த படம் பெரியளவில் உலகளவில் வசூல் வேட்டையாடி வருகிறது.

படம் ரிலீசாகி 10 நாட்கள் ஆன நிலையில் ரூ. 250 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு புறம் இந்த படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தன் மகள் சௌந்தர்யா அறிமுகம் செய்த HOOTE செயலி மூலம் அண்ணாத்த படத்தை ஒப்புக் கொண்டது எப்படி என ரஜினி தனக்கே உரிய பாணியில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது…

“காலா, கபாலி படங்களில் வயதான கெட்டப்பில் நடித்தேன். ஆனால் பேட்ட படத்தில் என்னை இளமையாக ஸ்டைலிஷ் ஆக காட்டியிருந்தார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். படம் மிகப்பெரிய வெற்றி.

பேட்ட ரிலீசான அதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ரீலீசானது. அந்த படமும் சூப்பர் ஹிட்டாச்சு.

உடனே எனக்கு விஸ்வாசம் படம் பார்க்க தோனுச்சி. அதன்படி பார்க்க ஆரம்பித்தேன். இடைவேளையும் வந்தது. விஸ்வாசம் படத்துல என்ன இருக்கு? எப்படி இது ஹிட்டாச்சுன்னு நினைச்சிட்டே இருந்தேன்.

படம் இடைவேளைக்கு பிறகு போக போக சூப்பரா இருந்துச்சி. க்ளைமாக்ஸ் சூப்பர். உடனே சிவாவை கூப்பிட்டு பாராட்ட தோனுச்சி.

என் வீட்டுக்கு அழைத்தேன். பாராட்டினேன். அவரு பார்க்கத்தான் பெரிய உருவம். சின்ன குழந்தை மாதிரிதான் பேசுவார்.

எனக்கும் கதை இருந்தா சொல்லுங்க என்றேன். பேட்ட மாதிரி ஹிட் கொடுக்கனும்னு சொன்னேன். சார் நீங்க இருந்தா ஹிட்தான்னு சொன்னாரு.

அண்ணாமலை, பாட்ஷா, தளபதி படங்கள்ல நல்ல கதை இருந்துச்சி. நீங்களும் இருந்தீங்க. படம் சூப்பர் ஹிட்.

ஒரு கிராமத்து பின்னணி.. நல்ல கதை.. இதுபோல இருந்தா.. ஹிட் கொடுக்கலாம்ன்னு சொன்னாரு.

அப்புறம் 2 வாரம் கழிச்சி நல்ல கதையோடு வந்தாரு. கதை சொன்னாரு. குடிக்க தண்ணி வேனும்னு கேட்டாரு. (தண்ணின்னா சாதாரண தண்ணிதாங்க.. நீங்க நினைக்கிற மாதிரி தண்ணி இல்ல…) தண்ணி குடிச்சிட்டே கதை சொன்னாரு. நான் கண் கலங்கிட்டேன்.

அவ்வளவு அருமையான கதை. சொல்லி அடிச்ச வெற்றி அண்ணாத்த படம். மாபெரும் வெற்றி கிடைச்சிருக்கு. அனைவருக்கும் நன்றி.”

என பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

Rajini talks about Annatthe success and Viswasam movie

#WeStandWithSuriya… சூடு பிடிக்கும் சூர்யா விவகாரம்..; ரசிகர் மன்றம் திடீர் அறிக்கை

#WeStandWithSuriya… சூடு பிடிக்கும் சூர்யா விவகாரம்..; ரசிகர் மன்றம் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடிக்க ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவை கண்டால் அவரை தாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

மேலும் மறைந்த பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவையில்லாமல் நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வன்னியர்களை தவறாக சித்தரித்ததற்காக ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் என்று வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி என்பவர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாமக.வினரின் இந்த செயல்களை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் #WeStandWithSuriya ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சூர்யாவுக்கு மிரட்டல் விடுபவர்களை கண்டித்து.. எங்களை தாண்டி தான் சூர்யா அண்ணனை தொடணும் எனவும் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில்….

அன்பான உறவுகளுக்கு,
வணக்கம்.

சூர்யா அண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய்பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது.

படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதையும் நாம் கவனிக்கிறோம்.

சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம்சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும்போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு.

சூர்யா அண்ணன் எந்த சாதி மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல, இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைத்தளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

“தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்.
உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற”

என்ற அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம்.

இவ்வாறு அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya fans club request fans to control their emotions

சூர்யாவை தாக்கினால் ரூ 1 லட்சம்..; கூடவே 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் பாமக

சூர்யாவை தாக்கினால் ரூ 1 லட்சம்..; கூடவே 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் பாமக

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடிக்க ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது.

பலரின் பாராட்டை இந்த படம் பெற்றாலும் வன்னியர் சமுதாயத்தை அவமதிப்பு செய்துள்ளதாக சூர்யா மீதும் படக்குழுவினரும் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி இந்த படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து 9 கேள்விகளை கேட்டு இருந்தார்.

நடிகர் சூர்யாவும் இதற்கு பதில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் என்பதை நம் தளத்தில் விரிவாக பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவை கண்டால் அவரை தாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

மறைந்த பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிசாமி அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

’சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ படம் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது. சில கதாபாத்திரங்களுக்கு உண்மை பெயரை சூட்டி விட்டு காடுவெட்டி குரு அவர்களை இழிவுபடுத்தும் வகையில் வில்லனுக்கு அவரது பெயரை வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார் பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி.

பாமக மாவட்ட செயலாளரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு புறமிருக்க மறுபுறம் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.

நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வன்னியர்களை தவறாக சித்தரித்ததற்காக ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் என்று வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி என்பவர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் நஷ்டஈடு தொகையை கொடுக்கவேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

Political party PMK announces Rs 1 lakh reward for attacking Surya

More Articles
Follows