இந்தியாவையே மிரள வைத்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் 2ஆம் பாக ட்ரைலர் பிப்ரவரி 8ல் ரிலீஸ்

இந்தியாவையே மிரள வைத்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் 2ஆம் பாக ட்ரைலர் பிப்ரவரி 8ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Drishyam 2மோகன்லால் & மீனா win மலையாள த்ரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் 2’ பட First Look போஸ்டரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் வரும் பிப்.8, 2021 அன்று வெளியாகிறது.

அதிகம் எதிர்பார்க்கப்படும் மலையாள த்ரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் 2’ படத்தை ஜீது ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

இதை ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரம்பவூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் மீனா, சித்திக், ஆஷா ஷரத், முரளி கோபி, அன்சிபா, எஸ்தர் மற்றும் சாய்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போஸ்டரில் மோகன்லால் (எ) ஜார்ஜ்குட்டி ஒரு சஞ்சலமான மனநிலையில் பதற்றமாக இருக்கிறார்.

இது படத்தின் கதையை மறைமுகமாக விவரிக்கிறது.

மேலும் விபரங்களுக்கு, கீழ்கண்ட சமூக வலைதள லிங்க்கை க்ளிக் செய்யவும்:

Amazon Prime Video

Mohanlal

Mohanlal’s Drishyam 2 trailer on February 8

‘கயல்’ ஆனந்தி கொண்டாடப்பட வேண்டியவர்..; ‘கமலி’ புகழ் பாடும் இயக்குநர் ராஜசேகர்

‘கயல்’ ஆனந்தி கொண்டாடப்பட வேண்டியவர்..; ‘கமலி’ புகழ் பாடும் இயக்குநர் ராஜசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamali From Nadukkaveriஅறிமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “கமலி From நடுக்காவேரி” .

ஒரு சராசரி பெண்ணின் கல்வி பயணத்தை, தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அவளது வாழ்வை அழகாக சொல்லியிருக்கும் படம் தான் “கமலி From நடுக்காவேரி”.

Appundu Studios Pvt Ltd இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்

படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது…

இது எனது முதல் திரைப்படம். நான் வாழ்வில் சந்தித்த விசயங்களை தான் திரைக்கதையாக மாற்றினேன்.

ஒரு வகையில் நான் ஆண் கமலி. இப்படம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கபடும் வரம்புகளை தாண்டி, கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும் தான் கதை.

கிராமத்தில் இருந்துவந்து IIT-க்குள் நுழையும் பெண், அவள் வழியில் சந்திக்கும் காதல், சுவராஸ்யங்கள், திருப்பங்கள், நிகழ்வுகள் இப்படித்தான் இந்தப்படம் பயணிக்கும்.

இப்போதும் கிராமப்புறங்களில் பென்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவதில்லை அதனை வெளிக்கொண்டுவரும் படைப்பாக இப்படம் இருக்கும்.

இது சீரியஸான கருத்து சொல்லும் படமாக இருக்காது. காதல், நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும்.

என் கதைக்கான பொருத்தமான நடிகையை தேடியபோது கயல் ஆனந்தி மிகச்சரியானவராக தோன்றினார்.

கயல் ஆனந்தியின் திறமை இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டியவர்.

இப்படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும். கண்டிப்பாக இப்படத்தில் அனைவரும் அவரின் நடிப்பை கண்டு பிரமிப்பார்கள்.

கோவை நக்கலைட்ஸ் சேனலின் மிகப்பெரிய ரசிகன் நான். முதலில் கதாநாயகனின் தோழி கதாபாத்திரத்திற்காக நடிகையை தேடியபோது, நக்கலைட்ஸில் உள்ள ஸ்ரீஜா நடிப்பு மிகவும் சரியாக இருக்கும் என தோன்றியது.

அதனால் ஸ்ரீஜாவை நேர்காணல் செய்தோம். அப்போது ஸ்ரீஜாவுடன் அவர்களின் நண்பர்கள் இருவர் வந்திருந்தனர்.

அவர்கள் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் படத்தில் சின்ன கதாபாத்திரங்கள் உள்ளது, நடிக்க விருப்பம் உள்ளதா என கேட்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

சிறிய பாத்திரம் என்றாலும் மிகவும் சிறப்பாக அவர்களை பணியை செய்து கொடுத்தனர். நக்கலைட்ஸ் குழுவினர் அதி திறமைசாலிகள் அவர்கள் அனைவரும் இன்னும் நன்றாக வரவேண்டும்.

இப்படத்தில்
நக்கலைட்ஸ் குழுவினர் ராஜேஷ் ஶ்ரீஜா, அனிருத், கவி, அனீஷ், சிவன், வைத்தீஸ்வரி, நிவேதா ஆகியோர் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் அவர்களது பகுதியை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா உடைய உதவியாளர் லோகையன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் பயணித்து வருகிறார். தீனதயாளன் என்ற இசையமைப்பாளர் இந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப்படத்திற்கு மிகப் பொருத்தமான, அற்புத இசையை தந்திருக்கிறார்.

அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருக்கும் வரும் பிப்ரவரி 19 உலகம் முழுவதும் மஸ்டர்பீஸ் கம்பெனி மூலம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Director Raja Sekar praises Actress Anandhi

ஹீரோவை விட அதிக சம்பளம் பெறும் வில்லன்..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

ஹீரோவை விட அதிக சம்பளம் பெறும் வில்லன்..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiசின்ன சின்ன வேடங்களில் வந்து செல்லும் துணை நடிகராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் விஜய்சேதுபதி.

கதையின் நாயகனாக இவரின் அறிமுக படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ இந்தியளவில் பேசப்பட்டது.

பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் முதல் சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் விஜய்சேதுபதியை வித்தியாச சேதுபதியாக மாற்றியது.

ஈகோ பார்க்காமல் இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை என பல தோற்றங்களில் நடித்து அனைவருக்கும் பிடித்தமான நடிகராகிவிட்டார்.

இப்போதும் கூட காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.

சினிமாவில் அவரின் அந்தஸ்து உயர உயர சம்பளமும் எகிறி வருகிறது.

இதுவரை 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கியவர் விஜய்சேதுபதி.

தற்போது ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் அதில் நாயகனாக நடிக்கும் இந்தி நடிகர் ஷாகித் கபூரை விட அதிக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

ஹீரோவுக்கு சம்பளம் ரூ.40 கோடி என கூறப்படுகிறது.

இந்த தொடரில் விஜய்சேதுபதிக்கு வில்லன் வேடமாம். இந்த தொடரில் ராஷிகன்னா நாயகியாக நடிக்கிறார்.

Vijay Sethupathi gets more salary than hero of the film

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு..: ஏர்முனை கடவுள் விவசாயி – ஜிவி பிரகாஷ்..; அதிகாரத்தை வழங்கியது மக்களே.. – வெற்றிமாறன்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு..: ஏர்முனை கடவுள் விவசாயி – ஜிவி பிரகாஷ்..; அதிகாரத்தை வழங்கியது மக்களே.. – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash vetrimaaran (1)புதுடெல்லியில் கடந்த 75 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று போலீஸ் தடியடியுடன் கலவரமாக மாறியது.

இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர் விவசாயிகளில் சிலர்.

இன்று வரை தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வெளிநாட்டினர் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தமிழக திரை பிரபலங்கள் எவரும் இது குறித்து பேசவில்லை.

இந்த நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகள் போராட்டம் குறித்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

தன் ட்விட்டர் பதிவில்…

“போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளக்கூறி வற்புறுத்துவது தற்கொலைக்குச் சமம்.

மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது ஜனநாயகமே. அவர்களை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்” என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் தன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது…

“ஆள்பவர்களுக்கு மக்கள்தான் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அந்த அதிகாரம் மக்களின் நலனைக் காக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது.

தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கவே விவசாயிகள் முயற்சி செய்கின்றனர். தங்களுடைய உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்தப் போராட்டத்தை ஆதரிப்பதே ஜனநாயகம் ஆகும்”.

இவ்வாறு வெற்றிமாறன் பதிவிட்டுள்ளார்.

GV Prakash and Vetrimaaran supports Farmers

நான்கு படங்களை தயாரிக்கும் ரஞ்சித்..; ‘சேத்துமான்’ படம் கேரளா உலக திரைப்பட விழாவுக்கு தேர்வானது!

நான்கு படங்களை தயாரிக்கும் ரஞ்சித்..; ‘சேத்துமான்’ படம் கேரளா உலக திரைப்பட விழாவுக்கு தேர்வானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa ranjithஇயக்குனர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களை தயாரித்திருந்தது. அதனை தொடர்ந்து

“குதிரைவால்” திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது.

தொடர்ந்து “ரைட்டர்” & “பொம்மை நாயகி” படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கும் “சேத்துமான்” எனும் படமும் படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருக்கும் ( IFFK (International Film Festival Of Kerala) திரையிடலுக்காக தேர்வாகியிருக்கிறது “சேத்துமான் ” திரைப்படம்.

தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ்

ஒளிப்பதிவு- பிரதீப் காளிராஜா

எடிட்டிங் – CS பிரேம் குமார்.

இசை – பிந்து மாலினி.

பாடல்கள்- யுகபாரதி, பெருமாள் முருகன், முத்துவேல்.

கலை- ஜெய்குமார்.

சண்டை – ஸ்டன்னர் சாம்.

ஒலி வடிவமைப்பு- ஆண்டனி BJ ருபன்.

கதை ,வசனம் – பெருமாள் முருகன்.

திரைக்கதை இயக்கம்- தமிழ்

தயாரிப்பு – பா.இரஞ்சித் .

பி ஆர் ஓ – குணா.

Pa Ranjith’s next film is titled Sethu Maan

‘குட்டி ஸ்டோரி’ பிரஸ் மீட்டில் 4 டைரக்டர்களுடன் புரொடியூசர் கொடுத்த சுவாரஸ்ய தகவல்கள்

‘குட்டி ஸ்டோரி’ பிரஸ் மீட்டில் 4 டைரக்டர்களுடன் புரொடியூசர் கொடுத்த சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kutty Storyவேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr ஐசரி.K. கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.

முதல் தொகுப்பை கௌதம் மேனன் இரண்டாவது தொகுப்பை விஜய் மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

முதல்முறையாக 4 இயக்குனர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இதில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே நாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.

விஜய் இயக்கியுள்ள கதையில் மேகா ஆகாஷ் நாயகியாகவும் அமிர் டாஸ் பிரதான் ஆர்யா சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண் சங்கீதா சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி அதிதி பாலன் நடித்துள்ளனர்

குட்டி ஸ்டோரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் Dr.ஐசரி .K. கணேஷ் பேசுகையில்…

” நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த குறும்பட கான்செப்ட்டை என்னிடம் சொன்னவுடன் எனக்கு பிடித்தது இது ஆந்தாலஜி மெத்தட் என்பதால் புதிதாக தோன்றியது உடனே ஒப்புக்கொண்டேன் முதல் முறையாக நான்கு பெரிய இயக்குனர்கள் இணைந்து இதை உருவாக்க உள்ளனர் என்றதும் இந்த படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது.

இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி படம் வெளியாகிறது.

பெரிய படங்களுக்கு இணையாக இதற்கும் பட்ஜெட் ஒதுக்கி எடுத்துள்ளோம் என்றார்

இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் பேசுகையில்…

“நான் கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்கினேன். அதிலும் காதல் கதை படங்களை இயக்குவது பிடித்ததாக இருந்தது.

இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில் நான்கு இயக்குனர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம்.

நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன் கதாநாயகியாக அமலா பால் நடித்து உள்ளார்.

முதலில் நான் நடிப்பதாக இல்லை அதன்பிறகு கதையை முடித்தவுடன் நானே நடிக்க முடிவு செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது என்றார்

இயக்குனர் விஜய் பேசுகையில்…

முதலில் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து இதுபோன்ற ஒரு காதல் கதை படத்தை இயக்கப் போகிறோம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது.

மற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அவர்களுடைய ஸ்டைலை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது இந்த கதைக்கு யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தபோது மேகா ஆகாஷ் பொருத்தமாக இருப்பார் என தோன்றியது.

உடனே அவரிடம் கதையை சொன்னேன் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார்.. நான் ஏழு நாட்களில் இந்த கதையை படமாக்கினேன் முழுக்க முழுக்க சென்னையிலேயே எடுத்துள்ளோம் என்றார்.

இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில்…

முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜிபடத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது..

அதிலும் என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன் ஒரு குறும்படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது என்றார்.

இயக்குனர் நலன் குமாரசாமி பேசியதாவது…

“லாக் டவுன் முடிந்தவுடன் எனது புதிய படத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன்.

அதற்கு முன்பாக இந்த குறும்பட வாய்ப்பு வந்தது எனக்கும் அந்த படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன்.

இந்த கதையை எழுதியவுடன் என் நண்பர் விஜய் சேதுபதி இடம் யாரை நடிக்க வைக்கலாம் என கேட்டேன்..

அவர் எனக்கு இந்த கதை பிடித்துள்ளது நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார்… மற்ற இயக்குனர்கள் அவர்களுக்கான கதையை குறிப்பிட்ட நாட்களில் முடித்துக் கொடுத்தனர் நான் கொஞ்சம் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டேன்.

11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த கதையை முடித்தேன் ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது இயக்குனர் கௌதம் மேனனும் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்வையிட்டார்..

ஒரு சில காட்சிகளுக்கு விஜய் சேதுபதியும் உதவி செய்தார். நாங்கள் நினைத்தது போலவே இந்த கதை அமைந்துள்ளது என்றார்.

Producer’s interesting speech at Kutty Story press meet

More Articles
Follows