தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2013 ஆண்டில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’.
இந்தியாவில் பல மொழிகளில் ரீமேக் ஞெய்யப்பட்டாலும் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கடந்த செப்டம்பர் 21ல் ‘த்ரிஷ்யம் 2’ பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இதே ஜீத்து ஜோசப், மோகன்லால் மீனா கூட்டணியில் உருவாகும் இப்பட சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது.
அதாவது கிட்டதட்ட 40 நாட்களில் முடிவடைந்துள்ளது.
அதுபோல் சுசீந்திரன் & சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பையும் 40 நாட்களில் நிறைவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த இரு படங்களையும் குறிப்பிட்டு இவர்களிடம் இருந்து நாம் சூட்டிங்கை விரைவாக முடிக்க கற்றுக் கொள்ளனும். இதனால் தயாரிப்பாளரின் பட்ஜெட் கணிசமாக குறையும் என பாராட்டியுள்ளார் ‘கபடதாரி’ பட தயாரிப்பாளர் தனஞ்செயன்.
Everyone needs to learn from two films started recently amidst this pandemic & wrapped up in a record time.
#Drishyam2 with @Mohanlal sir
#Easwaran with @SilambarasanTR_
This is how films to be planned & executed in short time to reduce the cost to Producers. Amazing https://t.co/2djE2h0Uxd
Producer Dhananjayan praises Mohanlal and STR movie team