இளையராஜா இசையில் இணையும் ராமராஜன் – மீனா.; இயக்குநர் – வில்லன் அப்டேட்ஸ்

இளையராஜா இசையில் இணையும் ராமராஜன் – மீனா.; இயக்குநர் – வில்லன் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 – 1990 காலகட்டங்களில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன்.

கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் நாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார்.

இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ராமராஜன்.

அந்த வகையில் 7 ஆத்ரி ஃபிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன்.

இது அவரது 46 ஆவது படமாக உருவாகிறது. ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் V என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதுடன் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

சாமானியன் படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் முதன் முதலாக நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார்.

‘சாமானியன்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார்.

ரிச்சர்ட் பிராங்க்ளின் என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் இந்த படத்தில் படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் குமார் V கூறும்போது…

“ராமராஜன் சார் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதனால் அவர் அதற்கான சரியான கதையை தேடியபோது, நான் எழுதியிருந்த சாமானியன் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் சாமானியன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அந்த படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ண தயாராகி விட்டேன்.. உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார்.

அப்போது நான் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருடமாக ‘சாமானியன்’ படத்தில் கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குனர் போன்றே அவருடன் இணைந்து பயணித்து வந்துள்ளேன்.

அதனால் இந்த படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்த படத்தின் மூலம் நான் இயக்குனராகவும் மாறி உள்ளேன்.

அடிப்படையில் நான் ஒரு கதாசிரியர் மட்டும் தான்.. யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லை.. பல படங்களில் கதை ஆலோசகராக பணியாற்றி உள்ளேன்.. அதேசமயம் கதாசிரியராக இருந்து இயக்குனராக மாறுவது ஒன்றும் சுமையான விஷயமும் அல்ல. கதையுடனே பயணித்து இருப்பதால் படத்தை இயக்குவது இன்னும் எளிதாகவே இருக்கும்.

‘சாமானியன்’ படத்தின் கதை என் வாழ்க்கையில் 2018ல் நான் சந்தித்த வலியை மையப்படுத்தி உருவானது. அந்த படத்திற்கு ராமராஜன் பொருத்தமாக இருந்தார்.

ஆனால் இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான் இந்த கதையும். ஆனால் சாமானியன் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இரண்டும் வெவ்வேறாக இருக்கும்..

இந்த படத்தில் நடிகர் ராமராஜன் இதுநாள் வரை பார்த்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு ஒரு சாதாரண வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். அவருக்குள் தற்போது இருக்கும் எண்ணங்களும் ஆர்வமும் கடந்த ஒரு வருடமாக அவருடன் பயணிப்பதால் எனக்கு நன்றாகவே தெரியும்.

அந்த வகையில் இதுவரை பார்த்திராத ஒரு ராமராஜன் படமாக மிகப்பிரமாண்டமாக மாஸான படமாக இது இருக்கும்.

நான் இயக்குனர் ஷங்கரின் தீவிரமான ரசிகன். அவரது படங்கள் அனைத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்கும். அது படத்தில் பிரம்மாண்டமாக சொல்லப்பட்டிருக்கும். எனக்கும் அதேபோன்று சமூக அக்கறை உள்ள கதைகளை பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதனால் தான் தொடர்ந்து அதே போன்று சமூக அக்கறை கொண்ட கதைகளை உருவாக்கி வருகிறேன்.

இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமானாலும் எப்போதும் நான் ஒரு கதாசிரியர் என்று சொல்வதில் தான் எனக்கு பெருமை.

மலையாள திரை உலகில் இயக்குனருக்கு அடுத்ததாக கதாசிரியருக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் சினிமாவிலும் அதுபோன்று கதாசிரியர்கள் நிறைய உருவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆர்வம்.. இதற்காக நான் தற்போது சினிமாவிற்கு நுழைபவர்களுக்காக வகுப்புகளும் எடுத்து வருகிறேன்

இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளதுடன் நானே டைரக்சனையும் கவனிப்பதால், வசனங்களை எழுதும் பொறுப்பை மதன் கார்க்கியிடம் கொடுக்கலாம் என பேசி வருகிறோம்.

அது உறுதியாகி, முழுமையான வசனங்கள் தயாரானதும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

இதற்கு முன்னதாக இந்த படத்தை பூஜையுடன் துவங்கி டீசருக்கான பணிகளை செய்து வருகிறோம்.

இந்த டீசரை முடித்துவிட்டு இசைஞானி இளையராஜாவை சந்தித்து போட்டு காட்ட இருக்கிறோம். அதன்பிறகு இந்த படத்தில் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

First time Ramarajan and Meena in ilaiyaraaja music

என் ரூட்டே வேற.; தெலுங்கு நடிகர்கள் வரிசையில் தியேட்டர் தொடங்கும் சிவகார்த்திகேயன்

என் ரூட்டே வேற.; தெலுங்கு நடிகர்கள் வரிசையில் தியேட்டர் தொடங்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சிறந்த பிசினஸ்மேன் என்பவர் *தான் உறங்கும் போதும் கூட சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும்* என யாரோ ஒருவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

இந்த சொல்லை மற்றவர்கள் கடைப் பிடிக்கிறார்களா இல்லையோ ஆனால் நம் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஒரு கட்டத்தில் சினிமா கை கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் அடுத்த தொழிலை கைப்பற்றி இருப்பது ஹோட்டல் தொழில்.

பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் திருமண மண்டபங்களை கட்டியும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை பொருத்தவரையில் பலர் தியேட்டர்களை கட்டி அதில் லாபம் பார்த்து வருகின்றனர்.

முக்கியமாக இளம் நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் தியேட்டர்களை திறந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்ட முடிவுடுத்துள்ளதாம்.

ஐதராபாத்தில் அல்லு அர்ஜுனின் எஎஎ மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவின் போது ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Actor Sivakarthikeyan going to launch AAA cinemas

பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள SALMON 3D ரிலீஸ் அப்டேட்

பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள SALMON 3D ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட முன்னணி பாடகர்களில் ஒருவர் விஜய் யேசுதாஸ்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார்.

மேலும் தமிழில் ‘படைவீரன்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக பாரதிராஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக அம்ரிதா நடித்திருந்தார்.

மேலும் தனுஷின் ‘மாரி’ படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் யேசுதாஸ் நடித்த ‘சால்மன் 3-டி’ தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 7 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தை 3டி கிளாஸ் அணிந்து கொண்டு தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோனிதா தோடா நாயகியாக நடிக்க இப்படத்தை ஷலீல் கல்லூர் என்பவர் இயக்கி உள்ளார்.

ராஜீவ் பிள்ளை மற்றும் தன்வி கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராகுல் மேனன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார்.

இந்தியாவில் கேரளா, துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30-முதல் தியேட்டர்களில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

விஜய் யேசுதாஸ்

Vijay Yesudas Salmon 3D movie release date update

3 லட்சம் சதுர அடி… எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ்.; அல்லு அர்ஜுனின் அடுத்த அதிரடி

3 லட்சம் சதுர அடி… எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ்.; அல்லு அர்ஜுனின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’ஏஏஏ சினிமாஸ்’ஸை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் திறந்து வைத்தார்.

அல்லு அர்ஜுன் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து ‘ஏஏஏ சினிமாஸ்’ஸை நிறுவியுள்ளார்.

இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது தங்களுக்குப் பிடித்த நட்சத்திரமான அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

சுனில் நரங் கூறுகையில்..

”ஏஏஏ சினிமாஸுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வளாகத்தின் மொத்த பரப்பளவு மூன்று லட்சம் சதுர அடி.

மூன்றாவது தளத்தில் உணவு விடுதி 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. ஏஏஏ சினிமாஸின் நான்காவது மாடியில் ஐந்து திரைகளுடன் கூடிய திரையரங்கு உள்ளது.

திரை எண் 2 இல் LED திரை உள்ளது. தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ மட்டுமே. இதற்கு புரொஜக்‌ஷன் தேவையில்லை.

அல்லு அர்ஜுன்

ஆனால், திரையிடல் மிகவும் தெளிவாக இருப்பதோடு சிறப்பான திரை அனுபவத்தையும் தரும். 67 அடி உயரம் மற்றும் ATMOS ஒலியுடன் கூடிய பார்கோ லேசர் புரொஜெக்ஷனை ஸ்கிரீன்-1 கொண்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய திரை இது. இங்கு ஒலியின் தரம் உலகத்தரம் வாய்ந்தது. லாபி மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்” என்றார்.

அல்லு அரவிந்த் கூறுகையில்..

“’ஏஏஏ சினிமாஸ்’ உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. சுனில் நரங் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளார். தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு டீம் வொர்க் மற்றும் சுனில் நரங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏஏஏ சினிமாஸை மிக பிரமாண்டமாக அமைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்” என்றார்.

அல்லு அர்ஜுன்

Actor Allu Arjun launched AAA Cinemas Grand opening ceremony

என் மகன் சிவா சிரமப்பட்டு நடித்தான்.; திண்டுக்கல் ஐ. லியோனி நெகிழ்ச்சி

என் மகன் சிவா சிரமப்பட்டு நடித்தான்.; திண்டுக்கல் ஐ. லியோனி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, அமுதவாணன் உள்ளிட்டோ நடித்த திரைப்படம் ‘அழகிய கண்ணே’.

இந்த படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது திண்டுக்கல் ஐ. லியோனி பேசியதாவது…

கே எஸ் ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான் , என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள். விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி, நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார், படக்குழு அனைவருக்கும் நன்றி, என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான்.

பல முயற்சிகள் செய்தான் அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும், படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

Dindigul Leony emotional speech about his son Sivakumar

நடிகர்கள்
லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன் மற்றும் விஜய் சேதுபதி.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு – Esthell Entertainer
வழங்குபவர் – Kannan Ravi Group
இயக்கம் – R.விஜயகுமார்
இசை – ரகு நந்தன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத்தமிழன்

‘லியோ’ சிவக்குமார் சங்கடத்தை தீர்த்த சஞ்சிதா ஷெட்டி

‘லியோ’ சிவக்குமார் சங்கடத்தை தீர்த்த சஞ்சிதா ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, அமுதவாணன் உள்ளிட்டோ நடித்துள்ள படம் ‘அழகிய கண்ணே’.

இந்த படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நாயகன் லியோ சிவக்குமார் பேசியதாவது…

இந்த மேடை எனக்குக் கனவு. சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்ததற்கு, என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்.

சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது.

எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி.

இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.

எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார், இந்த படம் எனக்கு முதல் படி அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

Leo Sivakumar speech about Sanchita and Azhagiya Kanne

More Articles
Follows