தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக கொண்டர் ராகவா லாரன்ஸ்.
இவையில்லாமல் எண்ணற்ற ஆதரவற்றவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, பண வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி வசதிகள் செய்தி தருவது உள்ளிட்ட சமூகநலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.
அந்த அறக்கட்டளை தற்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த நிலையில் திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியிருக்கிறாராம்.
இதற்காக நடிகர் அக்ஷய்குமாரிடம் தனது முயற்சியை தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்ஷய்குமார் கூறியுள்ளார்.
லாரன்ஸ் இயக்கிய முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா.
இதன் இந்தி ரீமேக் லக்ஷ்மி பாம் என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இப்படத்தையும் லாரன்ஸ் இயக்கி வருகிறார்.
அக்ஷய்குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார்.
Akshay Kumar donates One and half crores for Lawrance Trust