தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் சமயத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில், முரசொலி, பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
இது பெரும் சர்ச்சையானது. பெரியார் அமைப்புகள் ரஜினிக்கு தெரிவித்தன.
ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி பேட்டியளித்தார்.
இதனையடுத்து ரஜினியின் போயஸ் கார்ட்ன் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
துணை முதல்வர் போஸ்ட் கொடுங்க; சூப்பர் ஸ்டாருக்கு பவர் ஸ்டார் வேண்டுகோள்
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கிட்டதட்ட ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இனி பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினியை, நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு சந்தித்து பேசினார். அப்போது, ரஜினியின் கோரிக்கையை ஏற்று, பாதுகாப்பை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் 5 போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். அதனை 3 ஆக குறைக்க முடிவு செய்துள்ளனர்.