தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு, தேர்வு செய்யப்பட்டார் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவான பிரபு.
பட்டதாரி இளைஞரான இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தார்.
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டக் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, அந்த அணியில் இருந்து விலகி டிடிவி தினகரன் அணியில் இணைந்தார்.
இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் அதிமுகவுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
38 வயதான அதிமுக எம்எல்ஏ பிரபுவும் தியாகதுருகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து சௌந்தர்யாவை பிரபு தனது இல்லத்தில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.
இதனால் 38 வயது ஆன அவர் தங்களது 19-வயது மகளை கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர்.
மேலும் தான் ஒரு எம்எல்ஏ என்பதால் புகார் அளித்தாலும் தன்னை ஏதும் செய்ய முடியாது என்று பிரபு மிரட்டுவதாக சாமிநாதன் புகார் தெரிவிக்கிறார்.
பிரபு மீது புகார் அளித்தால் சபாநாயகர் உத்தரவு இல்லாமல் வழக்கு பதிவு செய்ய முடியாது என மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
தாங்கள் சாதி, மதம் கூட பார்க்கவில்லை என்றும், வயது வித்தியாசம் கவலை அளிப்பதாகவும் சாமிநாதன் தெரிவித்திருந்தார்.
மேலும் பெண்ணின் தந்தை சாமிநாதன் தீக்குளிக்க முயற்சித்தார்.
இந்த நிலையில் மணப்பெண் சௌந்தர்யா தன் விருப்பத்தின் பேரிலேயே திருமணம் நடைப்பெற்றது. தன்னை யாரும் கடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
ADMK MLA prabhu love marriage creates controversy