தனுஷின் ‘வாத்தி’ பட நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்

தனுஷின் ‘வாத்தி’ பட நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது.

இதனையடுத்து தெலுங்கில் சார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதே படம் தமிழில் வாத்தி என்ற பெயரில் உருவாகி வருகிறது.

தெலுங்கில் தோலி ப்ரேமா என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் எஸ் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.

தெலுங்கில் பவன் கல்யானுடன் சம்யுக்தா மேனன் இணைந்துள்ள ‘பீம்லா நாயக்’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

மேலும் விரைவில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திலும் கமிட் ஆகி[யிருக்கிறாராம் சம்யுக்தா மேனன்.

Actress Samyuktha Menon gets more cinema chances

விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சின்னத்தை தர மறுத்த தேர்தல் ஆணையம்

விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சின்னத்தை தர மறுத்த தேர்தல் ஆணையம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு புறம் தமிழக அரசியலில் தனக்கு அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டம் பார்த்து வருகிறார்.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்களில் 120க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர்.

தற்போது பிப்ரவரியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தன் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட அனுமதித்துள்ளார் நடிகர் விஜய்.

தன் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவாக ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கேட்ட ஆட்டோ சின்னத்தை கொடுக்க மறுத்துள்ளது ஆணையம்.

அந்த விளக்கத்தில்.. “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே பொதுவான சின்னம் வழங்கப்படும். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

எனவே பொது சின்னமாக ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

Election Commission refused to give auto symbol for VMI

ஃபிரண்ட்ஷிப் காமெடி எனும் ஜானரில் முதன் முறையாக B.E. BAR

ஃபிரண்ட்ஷிப் காமெடி எனும் ஜானரில் முதன் முறையாக B.E. BAR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவல் துறை உங்கள் நண்பன் திரைப்படம் அதன் தீவிரமான கருத்து, ஈர்க்கும் கதை அமைப்பு மற்றும் நடிகர்களின் அற்புத நடிப்பிற்காக அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. இந்த திறமைமிகுந்த திரைக்குழுவினர், “பி.ஈ. பார்” (B.E. BAR) என்ற தலைப்பில் தங்கள் இரண்டாவது திரைப்பட பயணத்தை தற்போது துவக்கியுள்ளனர் இந்த குழுவின் முந்தைய திரைப்படம் நமது மனதை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக்களத்தை கொண்டிருந்தது.

ஆனால் இந்த இரண்டாவது படைப்பு , முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக “ஃபிரண்ட்ஷிப் காமெடி” ( FRI-COM ) எனும் புது ஜானரில் உருவாகவுள்ளது.

இக்கதையின் மையம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது.

மோ மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக சதுரங்க வேட்டை புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார். தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

காவல்துறை உங்கள் நண்பன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் RDM இப்படத்தை இயக்குகிறார்.

தொழில்நுட்பக் குழுவில் விஷ்ணு ஸ்ரீ K.S., ஆதித்யா & சூர்யா (இசை), வடிவேல் & விமல்ராஜ் (எடிட்டிங்), சிவராஜ் (கலை), கல்லூரி வினோத் (வசனம்), ஞானகரவேல் & கானா பிரபா (பாடல் வரிகள்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

“பி.ஈ. பார்” (B.E. BAR) படத்தினை Absolute Pictures நிறுவனம் சார்பில் மால்கம், BR Talkies Corporation மற்றும் White Moon Talkies உடன் இணைந்து தயாரிக்கிறார்.

B. பாஸ்கரன், P. ராஜபாண்டியன், மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

KUN fame Suresh Ravi and Ishara Nair joins for BE Bar

‘ஜெய்பீம்’ ராசாக்கண்ணு நடிகர் இயக்கத்தில் ‘நரை எழுதும் சுயசரிதம்’

‘ஜெய்பீம்’ ராசாக்கண்ணு நடிகர் இயக்கத்தில் ‘நரை எழுதும் சுயசரிதம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ (கேரக்டர் பெயர் ராசாக்கண்ணு) படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த நடிகரும், திரை எழுத்தாளருமான மணிகண்டன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி இப்படத்தை தயாரித்துள்ளார்.

பல்வேறு சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் விருதுகளை அள்ளிய ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரையுலகினர் உள்ளிட்ட தரப்பினரின் பாராட்டுகளை ஏற்கனவே பெற்றுள்ளது.

தற்போது ரசிகர்களின் பார்வைக்காக சோனி லிவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவச்சங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வாழ்வின் அழகிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கணங்களின் கோர்வையாக அமைந்துள்ளது.

பணியில் இருந்து ஓய்வை நோக்கித் தள்ளப்படும் ஒருவரின் வாழ்வில் வேலையில்லாத இளைஞர் ஒருவரை சந்தித்தவுடன் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதே ‘நரை எழுதும் சுயசரிதம்’.

சமீபத்தில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் விஷால் வெங்கட் இப்படத்தின் இயக்குநர் குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ஷஷாங்க் வெண்ணெலகண்டி தெலுங்கு திரையுலகில் பிரபல எழுத்தாளர் ஆவார்.

‘நரை எழுதும் சுயசரிதம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஆர் வசந்த குமார் கையாள, ரதன் மற்றும் பவன் இசையமைத்துள்ளனர். ராஜேஷ் ராமகிருஷ்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி தயாரித்து, நடிகர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

Jai Bhim Mani Kandan’s directorial debut is titled Narai Ezhuthum Suyasarithai

விஜய்தேவர கொண்டாவுடன் ஜோடி போடும் ‘வலிமை’ புரொடியூசரின் மகள்.?

விஜய்தேவர கொண்டாவுடன் ஜோடி போடும் ‘வலிமை’ புரொடியூசரின் மகள்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய்தேவர கொண்டா. இவருக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தற்போது தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் “லைகர்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது.

இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக தற்போது அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.

இந்த படத்தில் முதலில் நாயகியாக நடிக்க மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை தான் அணுகினார்களாம். ஆனால் அவரால் அப்போது கால்ஷீட் தர முடியாது என மறுத்துவிட்டாராம்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

அந்த புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருடன் பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் நுழையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்வி கபூரின் அப்பா தான் அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Vijay Devarakonda and Janhvi Kapoor joins for a new film

Dear.. Who killed my husband..? விரைவில் ரிலீசாகும் 2D இணையத் தொடர்

Dear.. Who killed my husband..? விரைவில் ரிலீசாகும் 2D இணையத் தொடர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் சோகம், தாகம், பகை, காதல் என பல உணர்வுகளை உள்ளடக்கி பல சினிமாக்கள், பல இணையத் தொடர்கள் வந்தாலும், அது பார்க்கும் ரசிகர்களை எதுவரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தரும் கதைகளில் தான் உள்ளது.

இங்கு இரு இயக்குனர்கள் உணர்ச்சி மற்றும் சோகம் என இரு உணர்வுகளையும் மையப்படுத்தி ஒரு இணையத் தொடரை இயக்கியிருக்கின்றனர்.

Dear என வைக்கப்பட்டுள்ள கதை உணர்ச்சியை மையப்படுத்தியும், Who killed my husband என வைக்கப்பட்டுள்ள கதை சோகத்தை மையப்படுத்தியும் உருவாகியுள்ளது.

இந்த இரு உணர்வுகளையும் கொண்டு “2D” இணையத் தொடரை உருவாக்கியுள்ளனர் இரு இயக்குனர்களான DJ மற்றும் கணே ரமேஷ்.

முதல் கதையான “Dear”ல்

16 வயது நிரம்பிய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் காணாமல் போகிறாள். அந்த பெண் தொலைந்து போனாளா.? அல்லது கடத்தப்பட்டாளா.? என்பதை உணர்ச்சிமிக்க ஒரு கதையாக உருவாகியுள்ளதுதான் “Dear”

இரண்டாவது கதையான Who killed my husband ல்

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில், குடும்பத் தலைவன் சிலரால் கொலை செய்யப்படுகிறார். யார் அந்த கொலையை செய்தது என்ற தேடுதல் வேட்டையில் மனைவி களம் இறங்குகிறார். சோகம் கலந்த கதையாக உருவாகியுள்ளது தான் இந்த “Who killed my husband” தொடர்.

இத்தொடரின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. பலராலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ட்ரெய்லர் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

80 நிமிடங்கள் கொண்ட இத்தொடர் , 4 பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dear தொடரை இயக்குனர் DJ இயக்கியிருக்கிறார். Who killed my husband இயக்குனர் கணே ரமேஷ் இயக்கியிருக்கிறார்.

இத்தொடரில் ப்ரியதர்ஷினி, யாசர், திடியன், அனு, செளமியா, கேயன், சரோ ராஜ்குமார், சித்ரா, மோகன், வேத்ய, கார்த்திக் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இசையை ஆதித்யா மற்றும் சரவணன் தீபன் கவனித்திருக்கிறார்கள்.

மகேஷ் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தொகுப்பு கணே ரமேஷ், நடன இயக்குனராக அருண், பாடலாசிரியராக ஹரிஹரன் உள்ளனர்.

TORTOISE MOVIES நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் இத்தொடர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.

Directors DJ and Ramesh joins for 2d web series

More Articles
Follows