தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஒரு சில (போட்டோ)/படங்களில் கவர்ச்சியாகவே வருகிறார்.
இதனால் சமீப காலமாகவே தம்பதியரிடையே பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நடிகை சமந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் தன் பெயரை S என்று மாற்றினார்.
இதனையடுத்து சமந்தாவும், நாக சைதன்யாவும் விரைவில் விவாகரத்து பெறுகிறார்கள் என சர்ச்சைகளும், வதந்திகளும் சோசியல் மீடியாவில் வலம் வருகின்றன.
இதனிடையில் ஹைதராபாத்தில் நாகர்ஜுனா குடும்பத்தினர் நடிகர் ஆமீர் கானுக்கு விருந்து அளித்தபோது அந்த விருந்தில் நாகர்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் லவ் ஸ்டோரி பட இயக்குனர் சேகர் கம்முலா, பட நாயகி சாய்பல்லவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த விருந்தில் நடிகை சமந்தா கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் நடிகை சமந்தா…” தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Actress Samantha will approach court for divorce