தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு திரையுலகமே நடிகை ஸ்ரீ ரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுக்களால் ஆடி போய் இருக்கிறது.
பட வாய்ப்பு தருவதாக கூறி பலரும் தன் படுக்கைக்கு அழைத்தனர். ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை என கூறி தன்னை ஏமாற்றிய ஒவ்வொரு பிரபலத்தின் பெயர்களையும் லீக் செய்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் குற்றம்சாட்டி வருகிறார்.
ஓரிரு தினங்களுக்கு முன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீதும் புகார் கூறியிருந்தார்.
இதனால் தன்னை விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.
இதுகுறித்து ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார்.
நான் ஷூட்டிங்ஸ் பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார்.
மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.
படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்.
கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி பேஸ்புக்கில் போஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு சுந்தர் சி, லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீரெட்டி சொல்வது எல்லாம் பொய் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
Sundar C is the latest Kollywood celebrity in Sri Reddys Tamil Leaks