அரண்மனை சூட்டிங் சமயத்தில் சுந்தர்.சி. என்னை அனுபவித்தார் : ஸ்ரீரெட்டி

அரண்மனை சூட்டிங் சமயத்தில் சுந்தர்.சி. என்னை அனுபவித்தார் : ஸ்ரீரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundar C is the latest Kollywood celebrity in Sri Reddys Tamil Leaksதெலுங்கு திரையுலகமே நடிகை ஸ்ரீ ரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுக்களால் ஆடி போய் இருக்கிறது.

பட வாய்ப்பு தருவதாக கூறி பலரும் தன் படுக்கைக்கு அழைத்தனர். ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை என கூறி தன்னை ஏமாற்றிய ஒவ்வொரு பிரபலத்தின் பெயர்களையும் லீக் செய்து வருகிறார்.

தமிழ் திரையுலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் குற்றம்சாட்டி வருகிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீதும் புகார் கூறியிருந்தார்.

இதனால் தன்னை விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார்.

நான் ஷூட்டிங்ஸ் பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார்.

மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.

படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்.

கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி பேஸ்புக்கில் போஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு சுந்தர் சி, லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீரெட்டி சொல்வது எல்லாம் பொய் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Sundar C is the latest Kollywood celebrity in Sri Reddys Tamil Leaks

sri reddy sundar c

முதல்வரின் உடலை தேட ராணுவத்துக்கு உதவும் கிருஷ்ணா

முதல்வரின் உடலை தேட ராணுவத்துக்கு உதவும் கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kazhugu movie imagesகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

அண்டை மாநில முதலமைச்சர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து விடுகிறது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரையும், அதில் பயணம் செய்த முதலமைச்சரையும் தேடுவதற்காக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

அடர்ந்த காட்டுக்குள் உள்ளூர் மக்களின் வழிகாட்டுதலோடு ராணுவ வீரர்கள் சல்லடை போட்டு தேடுகிறார்கள். எங்கு தேடியும் நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களோ, அதில் பயணம் செய்த முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் உடல்களோ கிடைக்கவில்லை.

காட்டின் பெரும்பகுதியை தேடுவதற்கு உதவிய உள்ளூர் கிராம மக்கள் காட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு வர மறுக்கிறார்கள். அதற்கு காரணம் அந்த காட்டு பகுதியில் வாழும் செந்நாய்கள்.

மிருகங்களிலேயே போர்க்குணம் மிக்க மிருகமென்றால் அது செந்நாய் தான். இரண்டு செந்நாய்கள் சேர்ந்தால் ஒரு சிங்கத்தையே வீழ்த்தி விடும்.

செந்நாயால் உயிருக்கு ஆபத்து என்பதால் உள்ளூர் மக்கள் வர மறுக்க, ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக செந்நாய்களை வேட்டையாடும் திறன் படைத்த கிருஷ்ணா வரவழைக்கப்படுகிறார்.

ஹெலிகாப்டரை தனி ஆளாக தான் தேடி அதன் நிலையை கண்டுபிடித்து தருவதாக கூறி செந்நாய் காட்டிற்குள் செல்கிறார் கிருஷ்ணா.

நுனி சீட்டில் அமரவைக்க போகும் இந்த ஆரம்ப காட்சியிலேயே மூன்று செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் பிரம்மாண்ட சண்டை காட்சி சமீபத்தில் மூணார் காட்டு பகுதியில் படமாக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களின் உடையணிந்த துணை நடிகர்களோடு, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஹெலிகாப்டரை தேடி காட்டிற்குள் நுழையும் ஆரம்ப காட்சி மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

‘புலிமுருகன்’ படத்தில் புதுவித உத்திகளோடு மோகன்லால் புலியை வீழ்த்துவதை போல வித்தியாசமான உத்திகளை பயன்படுத்தி செந்நாயை கிருஷ்ணா வீழ்த்துவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தின் இறுதி காட்சியிலும் செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் காட்சி படமாக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற போகும் இந்த படத்தின் பட்ஜெட் கிருஷ்ணா நடித்த படங்களிலேயே அதிகபட்ச பட்ஜெட் படமாகும்.

இந்த படம் கிருஷ்ணா வின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படும் என இந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றிருக்கும் சிங்காரவேலன் தெரிவித்தார்.

1960 & 1980ல் மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை படமாக்கும் புரூஷ் விஜய்குமார்

1960 & 1980ல் மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை படமாக்கும் புரூஷ் விஜய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanguஶ்ரீ அங்காளபரமேஸ்வரி சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவராமன் தன் முதல் படைப்பாக கங்கு படத்தை தயாரிக்கிறார்.

பிரம்மா.காம் படத்தை இயக்கிய புருஷ் விஜயகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 1960 மற்றும் 1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை எழுதி இயக்குகிறார் புரூஷ் விஜய்குமார்.

மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ் சிவராமன்.

இன்று பூஜையுடன் துவங்கிய இத்திரைப்படம் மிகுந்த நுணுக்கத்துடன் அற்புதமாக உருவாகவுள்ளது.

1960 மற்றும் 1980 காலகட்டங்களை கண்முன் நிறுத்தும்படி மிகப்பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது.

மேலும் பல நிஜ லோகேஷன்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடிக்க பல பிரபலங்களும் நடிக்க உள்ளனர்.

மற்றும் படத்தில் மிகப்பெரிய டெக்னிஷீயன்கள் பணிபுரிய உள்ளனர்.

இன்று துவங்கிய பூஜையில் நடிகர் ராமகிருஷ்ணன், வடிவுக்கரசி, ஜாக்குவார் தங்கம் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரிஜினல் துப்பாக்கி வைத்திருந்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்

ஒரிஜினல் துப்பாக்கி வைத்திருந்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kazhugu 2மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது.

ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டார்.

தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான மக்கள் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர் துப்பாக்கி முனையில் நடிகர் கிருஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர்.

அருகில் சென்று பார்த்த போது தான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தது இருப்பினும் துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறையினர், அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், லைசென்சை காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர்.

இந்த துப்பாக்கிகள் சென்னையைச் சார்ந்த GUN ராஜ் என்பவருக்கு சொந்தமானது. துப்பாக்கிகளுக்கான லைசென்சுடன் கேரளா விரைந்துள்ளார் GUN ராஜ்.

*சாதனாவுக்கு விருது கிடைக்கலேன்னா சினிமாவே பொய்…* – பாரதிராஜா

*சாதனாவுக்கு விருது கிடைக்கலேன்னா சினிமாவே பொய்…* – பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sadhanaராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் நடித்துள்ள படம் பேரன்பு.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை பி. எல். தேனப்பன் தயாரித்துள்ளார்.

உலகத்தின் பல திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு இப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாரதிராஜா, மிஷ்கின், கரு பழனியப்பன், கே. எஸ். ரவிக்குமார், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது…

இன்றைய தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களை கண்டு வியக்கிறேன். மிஷ்கின், கரு பழனியப்பன் ஆகியோரை நான் அண்ணாந்து பார்க்கிறேன்.

அவர்களை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் இயக்குனர் ராமை என்னால் பார்க்க முடியவில்லை.

ஏனென்றால் அவர் அந்த இயக்குனர்களை விட மேலே இருக்கிறார்.

இப்படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். மிகவும் திறமையான நடிகை.

அதுபோல் நடிகை சாதனா. தங்க மீன்கள் படத்தில் சிறுமியாக நடித்தார். இதில் வளர்ந்துவிட்டார்.

நிச்சயம் இந்தப் படத்தில் நடித்தமைக்கு அவருக்கு விருது கிடைக்கும். விருது கிடைக்கவில்லை என்றால் இந்த சினிமாவே திரையுலகமே பொய்யாகும். ” என்று பேசினார்.

பேரன்பு படத்தில் மாற்றுத் திறனாளியாக சாதனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanga Meengal Sadhana must get award for Peranbu says Bharathiraja

peranbu mammootty audio launch

தமிழ் ஹீரோஸ் நல்லா நடிச்சா நாங்க ஏன் நடிக்க வர்றோம்? – கரு.பழனியப்பன்

தமிழ் ஹீரோஸ் நல்லா நடிச்சா நாங்க ஏன் நடிக்க வர்றோம்? – கரு.பழனியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Tamil heros act in good manner directors wont be actors says Karu Pazhaniappanதரமணி படத்தை தொடர்ந்து ராம், யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ள படம் பேரன்பு.

பி.எல். தேனப்பன் தயாரித்துள்ள இப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.

பல திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு இப்படம் பல விருதுகளை வென்றுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாரதிராஜா, மிஷ்கின், கரு பழனியப்பன், கே. எஸ். ரவிக்குமார், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் சித்தார்த் பேசும்போது..

தமிழ் சினிமாவில் உள்ள நல்ல இயக்குனர்கள் அனைவரும் நடிக்க வந்துவிட்டார்கள். ஏன்யா இப்படி நடிச்சு கொல்றீங்க? என்றார்.

அதன்பின்னர் கரு. பழனியப்பன் பேச வந்தார். அவர் சித்தார்த்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

இந்த பேரன்பு படத்தில் மம்முட்டி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். நாங்கள் படத்தை பார்த்து விட்டோம்.
நல்ல நல்ல இயக்குனர்கள் எல்லாம் நடிக்க வந்துவிட்டார்கள் என்றார் சித்தார்த்.

மம்மூட்டி போல நம்ம ஹீரோஸ் எல்லாம் நடிச்சிட்டிங்கன்னா நாங்க ஏன்யா? நடிக்க வர்றோம்.” என்று பேசினார்.

If Tamil heros act in good manner directors wont be actors says Karu Pazhaniappan

peranbu audio launch

More Articles
Follows