தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் தனக்கென ஒரு முத்திரை பதித்து வருபவர் நடிகர் ரோபோ சங்கர்.
மிமிக்ரி கலைஞர் ஆனா இவர் சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களை ஏற்று அதில் தன்னால் முயன்றளவு சிறந்த நடிப்பை கொடுத்து வருகிறார்.
விரைவில் ரோபோ சங்கர் படம் இயக்கப் போகிறாராம்.
படத்தின் பெயர் ‘ஆ… ஆ… அஞ்சு நிமிஷம்.’
“தலைப்பை பார்த்தாலே ஏதோ வில்லங்கமான விஷயத்தை தான் படமாக்க போகிறாரா என்ற சந்தேகம் எனக்கும் வந்தது. உங்களுக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
‘ஆனது ஆச்சு அஞ்சு நிமிஷம்’ என்பதன் சுருக்கம்தான் ஆ…ஆ… அஞ்சு நிமிஷம்.”
இன்று 20.8.2022 அன்று காலை சென்னையில் நடந்த ‘அர்த்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரோபோ சங்கர் இந்த தகவலை தெரிவித்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
பல வருடங்களுக்கு முன்பு எஸ் ஜே சூர்யா இயக்கிய படத்திற்கு ‘அ…. ஆ….’ என்று பெயரிட்டு இருந்தார்.
ஆனால் அதற்கு ‘அன்பே ஆருயிரே..’ என்று பின்னர் விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Robo Sankar making his directorial debut