வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்

வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and pawanபல வெற்றிப் படங்களை கொடுத்த தனுஷ் – வெற்றிமாறன் ஆகியோரது கூட்டணி ’அசுரன்’ படத்திற்காக மீண்டும் தற்போது இணைந்துள்ளது.

இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இதில் முக்கிய கேரக்டர்களில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பசுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் அவர்களும் ‘அசுரன்’ படத்தில் இணைந்துள்ளார்.

பிரபுதேவா-வின் ‘பொன் மாணிக்கவேல்’ பட டீசர் வெளியானது

பிரபுதேவா-வின் ‘பொன் மாணிக்கவேல்’ பட டீசர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pon manikka vel teaserநேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.

இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார். அவரின் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இவர்களுடன் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்டோம் நடிக்கின்றனர்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய் டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்பட டீசரை அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

குடித்து விட்டு தகராறு செய்கிறார்.; தாடி பாலாஜி மீது மீண்டும் நித்யா புகார்

குடித்து விட்டு தகராறு செய்கிறார்.; தாடி பாலாஜி மீது மீண்டும் நித்யா புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nithya balajiஒரு சில சினிமா படங்களில் நடித்தாலும் டிவி நிகழ்ச்சிகள் மூலம் படு பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி.

இவருடைய மனைவி பெயர் நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்பதால் நித்யா தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நித்யா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த செய்தியை நம் தளத்தில் அப்போது பதிவிட்டு இருந்தோம்.

இதன் பின்னர் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். இருவரையும் சேர்ந்து வாழ பலரும் அட்வைஸ் செய்தனர்.

இந்நிலையில் மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார் நித்யா.

அதில், ‘மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என நித்யா தெரிவித்துள்ளார்.

தற்போது பாலாஜி வெளியூர் சூட்டிங்கில் இருப்பதால் அவர் சென்னை வந்ததும், விசாரணை போலீசார் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

அண்மையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள பெண்களுக்கான புதிய கட்சியில் நித்யா முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Digangana Suryavanshiதெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் “ ஹிப்பி “ படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது. ஹிந்தி படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதினை நேற்று அவர் பெற்றுள்ளார்.

பல ஹிந்தி பாடல்களில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷி விரைவில் தமிழிலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட அழகான காதல் கதை சில்லு கருப்பட்டி

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட அழகான காதல் கதை சில்லு கருப்பட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sillu karuppatti stillsஇந்த சமூகத்தில் காதல் குறைந்து கொண்டே போகிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த நம்பிக்கைகளை புதுப்பிக்கும் நேரம் வந்துவிட்டது. நிச்சயமாக, ஒவ்வொரு காதலர் தினத்திலும் இசை காதலர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், இந்த ‘பிப்ரவரி’யும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில்லு கருப்பட்டி படத்தின் “அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு” என்ற அழகான பாடல் வரிகள் மற்றும் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சில்லு கருப்பட்டி சிங்கிள் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் மழையில் அனைவரும் நிச்சயம் நனைவார்கள்.

பாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டது, நாம் முன்னர் சந்தித்திராத ஒருவரை சந்திப்போம், ஆனால் நாம் அவருடன் நீண்ட காலம் பழகியது போலவும், உரையாடியது போலவும் ஒரு வலுவான உணர்வை கொடுக்கும். அது தான் தெய்வீக காதலின் அழகு அல்லவா?. நாம் சந்திக்கும் முன்னரே ஆன்மாக்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. இது ஒரு தவிர்க்க முடியாத உண்மை, இதை நம்பாதவர்களுக்கு அந்த தருணம் இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை. பிரதீப்குமார் முதன் முதலில் டியூனை போட்டுக் காட்டியபோது, ஒவ்வொரு இசைக் குறிப்பிலும் காதலின் சாராம்சம் இருந்ததை உணர முடிந்தது. அவரது குரலின் மூலம் மயக்கும் காதல் பாடல்களை நமக்கு வழங்கிய அவர், சில்லுக் கருப்பட்டி மூலம் இசையிலும் காதலை அள்ளி தெளிக்கிறார் என்பதில் மகிழ்ச்சி” என்கிறார்.

கண்ணம்மா, மாயநதி, ஆகாயம் தீப்பிடிச்சா, ஆகாசத்த நான் பாக்குறன், மோகத்திரை மற்றும் பல ஆன்மாவை தொடும் பாடல்களை பாடி புகழ்பெற்ற பிரதீப் குமார், ஹலிதா ஷமீம் எழுதிய இந்த பாடலையும் பாடியிருக்கிறார்.

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட நான்கு அழகான காதல் கதைகளை கொண்ட ஒரு தொகுப்பு தான் சில்லு கருப்பட்டி. வெங்கடேஷ் வெலினேனி தயாரித்திருக்கிறார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே மற்றும் சில பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மாதவன் – அனுஷ்கா இணையும் புது படம்

மாதவன் – அனுஷ்கா இணையும் புது படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhavan and anushkaசில நேரங்களில் ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு மட்டும் நமக்கு மயிர்க்கூச்செரியும் அனுபவத்தை வழங்கும். நம் மனது அடுத்த உடனடியான சிந்தனையாக அந்த பெரிய படம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி கற்பனையாக சிந்திக்க துவங்கி விடும். மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்திய அளவில் புகழ் பெற்ற இந்த நடிகர்கள் நடிக்கும், இந்த படத்தின் பணிகள் தற்போது முழு மூச்சில் நடந்து வருகிறது. இது ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் மர்டர் மிஸ்டரி திரில்லர் திரைப்படமாகும். கோபி மோகன் உடன் இணைந்து கதை மற்றும் திதைக்கதையை எழுதுவதோடு இணை தயாரிப்பாளராவும் பணிபுரிகிறார் கோனா வெங்கட்.

இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறும்போது, “நான் உண்மையிலேயே உறைந்து போய் இருக்கிறேன். பல வருடங்களாக நடிப்பில் மகத்தான சாதனையை புரிந்திருக்கும் மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்துக்கு கிடைத்திருப்பது, என்னை மிகக் கடுமையாக உழைக்க, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உந்துகிறது. குறிப்பாக, இது ஒரு சைலண்ட் த்ரில்லராக இருப்பதால் அது முழுமையாக ‘நடிகர்கள்’ மற்றும் ‘தொழில்நுட்ப கலைஞர்கள்’ சார்ந்தது, அதற்கேற்ற வகையில் சிறப்பானவர்களை கண்டறிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மாதவனின் அர்ப்பணிப்பு அபாரம். அதனால் தான் அப்படிப்பட்ட திரைப்படங்கள் அவரை விரும்புகின்றன. அவரின் சமீபத்திய கதைகளில், சிறந்த நடிகராக ப்ரீத் சீரீஸிலும், மிகக்கடுமையான பயிற்சியாளராக இறுதிச்சுற்று படத்திலும் அவர் ஸ்கோர் செய்ததை பார்த்தாலே புரியும். அவர் ‘சாக்லேட் பாய்’ என்று சொல்லப்படுவதை விரும்புவதில்லை, மாறாக தன் திறமைகளை மேம்படுத்தும் கதைகளை நடிக்கவே விரும்புகிறார். இந்த படம் அவரது மகுடத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அனுஷ்கா ஷெட்டியின் எந்த சூழ்நிலையிலும் அவரது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி தான் ஒரு ‘அற்புதமான நடிகை’ என்று நிரூபித்தவர். இந்த படத்தில் அவரின் கதாப்பாத்திரத்துக்கு இது போன்ற குணங்கள் தேவைப்பட்டது. அனுஷ்காவை தவிர யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு ஆகியோர் மொழி மற்றும் எல்லைகளை கடந்து தங்கள் திறமையால் பிரபலமானவர்கள். அவர்களும் இந்த படத்தில் நடிப்பது பலம். குறிப்பாக கோனா வெங்கட் சார் மற்றும் கோபி மோகன் சார் எழுதிய கதை மற்றும் திரைக்கதையை திரையில் மொழி பெயர்க்கும் செயல்முறையை அனுபவிப்பதில் ஒரு இயக்குனராக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில், ATMOS ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை கொண்டு இதுவரை உணர்ந்திராத மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். இதற்காக தான் மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறோம் என்கிறார் இயக்குனர்.

கோபி சுந்தர் இசையமைக்கிறார். பாப் பிரவுன் (ப்ரிடேடர்ஸ், தி வால் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் புகழ்) சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். க்‌ஷனம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ போன்ற திரைப்படங்களில் தன் ஒளிப்பதிவு மூலம் தெலுங்கு சினிமாக்கு ஒரு புது வண்ணத்தை வழங்கிய ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்கிறார். யனா ருசனோவா (ப்ரிசம், ட்ரோன் வார்ஸ், தி நெக்ஸ்ட் பிக் திங் புகழ்) கலை இயக்குனராக பணிபுரிகிறார். கோபி மோகன் திரைக்கதை எழுதியிருக்கிறார். 1500 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது.

More Articles
Follows