‘மாயவலை’ ஆழமான விதையை விதைக்கும்.. – கவிஞர் சினேகன்

‘மாயவலை’ ஆழமான விதையை விதைக்கும்.. – கவிஞர் சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர், சஞ்சிதா, சாய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாயவலை’.

விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…

நானும் அமீர் சாரும் இணைந்து பணிபுரிந்து பல நாட்கள் ஆகி விட்டது, நாங்கள் இணைந்த அனைத்து பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன‌, இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், எங்கள் படம் என்பதற்காக சொல்லவில்லை, இப்படம் பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

அமீர் சார் இந்தப் படத்தில் அழகாய் நடித்தது மட்டுமில்லாமல் மிக அழகாகவும் இருக்கிறார். பல ஆண்டுகள் அவருடன் பணியாற்றி வருகிறேன், இந்த பந்தம் மென்மேலும் தொடரும் என்று நம்புகிறேன். இயக்குநர் வெற்றிமாறன் இங்கு இணைந்துள்ளது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு மிக முக்கியம், அவருக்கு எங்களது நன்றி. இந்தப் படம் மக்களிடையே ஒரு ஆழமான விதையை விதைக்கும் என்று நம்புகிறேன், உங்கள் ஆதரவை இந்தப் படத்திற்கு கொடுங்கள், நன்றி.

Lyricist Snehan speaks about Maayavalai

ஆர்யா தம்பி சத்யாவுடன்… அமீருடன் கற்ற பாடம்.; சஞ்சிதா ஓபன் டாக்

ஆர்யா தம்பி சத்யாவுடன்… அமீருடன் கற்ற பாடம்.; சஞ்சிதா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர், சஞ்சிதா, சாய் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாயவலை’.

விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது…

எல்லோருக்கும் வணக்கம், பத்திரிக்கையாளர் நண்பர்களின் ஆதரவு ‘மாயவலை’க்கு தேவை. சமுத்திரக்கனி சார் தான் ‘விநோதய சித்தம்’ பார்த்து அமீர் சார் கூப்பிடுகிறார், போய்ப்பார் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தப்படம் கோவிட் காலத்தில் உருவானது. என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார்கள். மிக போல்டாக நடித்திருக்கிறேன், பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

ஆர்யாவின் தம்பி சத்யா என்னுடன் இணைந்து நடித்திருக்கிறார், மிக அழகாக நடித்துள்ளார். அமீர் சாருடன் இணைந்து நடிக்கும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அவரும் மிக அற்புதமாக நடித்துள்ளார். ராம்ஜி எங்கள் எல்லோரையும் நன்றாக காட்டியுள்ளார். வெற்றிமாறன் சாருக்கு நன்றி, அவர் இந்தப்படத்தில் இணைந்தது பெருமை. மொத்தக் குழுவிற்கும் என் நன்றிகள்.

Sanchita shetty shares her Maayavalai experience

எனக்கு தாழ்வு மனப்பான்மை.; நான் ஸ்டன்ட் மேன் இல்ல – தீனா

எனக்கு தாழ்வு மனப்பான்மை.; நான் ஸ்டன்ட் மேன் இல்ல – தீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) நேற்று நடைபெற்றது.

சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துக் கொள்ள இனிதே நடைபெற்றது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இணை தயாரிப்பாளர் ராஜேந்திரன் பேசியதாவது…

என் முதல் மேடை இது, இந்த வாய்ப்பை தந்த அமீர் அண்ணனுக்கு நன்றி. அமீர் அண்ணாவும் நானும் தீவிரமான கமல் ரசிகர்கள். எப்போதும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம், அமீர் அண்ணனிடமும் கமல் சாரிடமும் என்னைக் கொண்டு சேர்த்த சினேகனுக்கு நன்றி. இந்தப்படம் பற்றி எனக்குத் தெரியாது. அமீர் அண்ணனுடன் பயணிக்க வேண்டும், அவ்வளவுதான். அமீர் அண்ணனும் வெற்றிமாறன் அண்ணனும் இணைந்து ‘நார்கோஸ்’ மாதிரி ஒரு சீரிஸ் எடுக்க வேண்டும், அதில் நாங்களும் இருக்க வேண்டும். அது நடக்கும் என நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி.

நடிகர் சாய் தீனா பேசியதாவது…

நான் நிறையப்படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சீன், இரண்டு சீன் தான் நடிப்பேன், வெற்றிமாறன் அண்ணன் தான் அதை மாற்றினார். அவருடன் ‘வட சென்னை’யில் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு எப்போதும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது.. நான் ஸ்டண்ட் மேன் கிடையாது, துணை நடிகர் தான், எனக்கு நடிப்பு கற்றுக்கொள்ள ஆசை. கூத்துப்பட்டறை போன்ற இடங்களில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்.

ஆனால் வெற்றிமாறன் சார் படத்தில் நடித்ததே பெரிய அனுபவமாக இருந்தது. அதே போல் தான் அமீர் அண்ணன். இருவரும் எனக்கு நிறைய சொல்லித் தந்தார்கள். உண்மையாகவே அமீர் எனக்கு அண்ணன் தான்.

என்னைக் குடும்ப உறுப்பினர் போல‌ பார்த்துக்கொள்வார். இந்தப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் நண்பர்கள் தான். மிக நன்றாக படம் வந்துள்ளது, அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.

நடிகர் வின்செண்ட் அசோகன் பேசியதாவது…

அமீர் அண்ணனை சந்தித்ததே பெரிய விஷ‌யம். அவருக்கு சினிமா மேல் இருக்கும் காதல் தான் எங்கள் இருவருக்கும் பொதுவானது. அவர் என்னை எப்போதும் மதிப்பவர். வெற்றிமாறன் சாரின் ‘வட சென்னை’ படத்தில் அமீர் அண்ணனுடன் நடித்தது அனைவருக்கும் இன்றும் பிடித்த காட்சியாக உள்ளது. அமீர் அன்ணணுடன் இப்போது வரை நடித்தது எல்லாமே அடிதடி காட்சி தான். இந்தப்படம் வித்தியாசமானதாக அமைந்தது. வெற்றிமாறன் இப்படத்தில் வந்தது மகிழ்ச்சி, நன்றி.

தயாரிப்பாளர் ஜாஃபர் பேசியதாவது…

அமீர் அண்ணனுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது இந்தப்படம் ஆரம்பித்தது. அமீர் அண்ணன் வாழ்க்கையிலேயே ஆரம்பித்த 40 நாட்களில் ஷூட்டிங் முடித்த படம் இது மட்டும் தான். அடுத்து அவர் இயக்கும் படமும் எங்களுடையது தான். எங்கள் உரையாடல் எப்போதும் கலகலப்பாக‌ இருக்கும். சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்போம். அவருடன் இணைந்து பயணிப்பது பெருமை. நன்றி.

நடிகர் சரண் பேசியதாவது…

எல்லோர் மத்தியில் இந்த மேடையை பகிர்வது பெருமை. என் முதல் நன்றி வெற்றிமாறன் சாருக்கு தான். ‘வட சென்னை’ படம் தான் என் வாழ்க்கையை மாற்றியது. என்னை காஸ்ட் செய்யும் அனைவரும் ‘வட சென்னை’ பற்றி சொல்வார்கள். அந்த‌ வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. ‘வட சென்னை’யில் பார்த்த பல நண்பர்களின் ரீயூனியன் மாதிரி இந்தப்படம் இருந்தது. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு ரமேஷ் அண்ணாவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

I have inferiority complex I am not stunt man says Dheena

குணா இயக்கத்தில் நட்டி & நிழல்கள் ரவியுடன் இணைந்த ஆதேஷ் பாலா

குணா இயக்கத்தில் நட்டி & நிழல்கள் ரவியுடன் இணைந்த ஆதேஷ் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கா செந்தில் வேலன் தயாரித்து வரும் பெயரிடப்படாத திரைப்படம் தான் “Production No : 1”.

நட்டி, நிஷாந்த் ரஸ்சோ, சிவன்யா, நிழல்கள் ரவி, ஆதேஷ் பாலா, ஜீவா ரவி, அரவிந்த் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தினை குணா சுப்ரமணியம் இயக்க ஒளிப்பதிவை மணி பெருமாள் செய்ய சரண்குமார் இசையமைத்து வருகிறார்

இந்தப் படத்தில் போலீஸ் வேடம் போட்டு அசத்தப்போகிறாராம் ஆதேஷ் பாலா. சின்ன வேடம் என்றாலும் தனி முத்திரை பதிப்பவர் ஆதேஷ் பாலா.

இந்தப் படத்திலும் அவரின் நடிப்பு திறமையை நிச்சயம் காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

மேலும் நட்டி மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களோடு நடித்த அனுபவம் தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் ஆதேஷ் பாலா.

அசத்துங்க ஆதேஷ் ஜீ..

Aadesh Bala with Natty and Nizhalgal Ravi

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் இணையும் ‘விருமாண்டி’ அபிராமி

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் இணையும் ‘விருமாண்டி’ அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் பல படங்களை இயக்கியிருந்தாலும் நடித்திருந்தாலும் தயாரித்திருந்தாலும் அவரது படங்களில் மிகவும் முக்கியமான ஒன்று ‘விருமாண்டி’.

இதில் கமல்ஹாசன் ஏற்றிருந்த வேடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைகிறது. மணிரத்னம் இயக்க உள்ள கமலின் 234 வது படத்தில் கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் அபிராமி.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

கமல் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 6 அல்லது 7 ஆம் தேதி இந்தப் படத்தில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை கமல்ஹாசன் மணிரத்னம் மற்றும் உதயநிதி இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal 234

After Virumandi Abhirami joins with Kamal 234

சினிமாவில் மிச்சமில்லை.. அரசியலில் ஆப்ரஹாம்.; கமல்ஹாசனை வாழ்த்திய சிவக்குமார்

சினிமாவில் மிச்சமில்லை.. அரசியலில் ஆப்ரஹாம்.; கமல்ஹாசனை வாழ்த்திய சிவக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான்.

அவர்கள் செய்த ‘வெரைட்டி ரோல்களை’ இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை.

சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார்.

கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்..

‘டூப்’ போடாமல் அல்லாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர் ..

‘மீண்டும் ஒரு சூர்யோதயம்’ -படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள்.

1973-ல் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் என்று துவங்கி தங்கத்திலே வைரம், மேல்நாட்டு மருமகள்- என
8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தோம். நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள்..

வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள் தான் கமல்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல உங்களுக்குள் இருந்த ‘பொறி’யை கண்டவன் நான்.

அந்தச் செடி வளர்ந்து இன்று விருட்சமாகி ‘நாயகன்’,’குணா’, ‘அன்பே சிவம்’, ‘ஒளவை சண்முகி’, ‘ஹேராம் ‘ என்று நடிப்பின் இமயத்தைத் தொட்டுள்ளது.

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது.

அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார்.

அரசியலிலும், திரையில் சாதித்தத்தை, நீங்கள் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள்.

நூறாண்டு நீவிர் வாழ்க…

Actor Sivakumar wishes Kamalhassan

More Articles
Follows